என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
- தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் த.வெ.க. முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக, தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், "எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார்" என்று தவெக இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுத்துள்ளது.
மேலும் அவர், "ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசியவர், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார்.
ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும்.
எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை, எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார்" என்றார்.
- திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது.
- சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர். வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.
இந்தநிலையில் திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்ததால் குளிக்காமல் வந்து விட்டதாக மகா கும்பமேளாவுக்கு சென்றிருந்த கேரள மாநில கால்பந்து வீரரான வினீத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

மகா கும்பமேளா நிகழ்வு ஒரு சிறந்த நிகழ்வு என்று நினைத்து அங்கு நான் சென்றேன். என் அனுபவத்தில் அது அப்படி இல்லை. மிகப்பெரிய கூட்டம் இருந்தது. திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை. இதனால் அந்த அழுக்கு நீரில் நான் குளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.
- அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக சமீபத்தில் இந்தியாவில் ஆட்கள் சேர்ப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது.
அதில் வணிக செயல்பாட்டு ஆய்வாளர், வாடிக்கையாளர் சேவை பிரிவு உள்ளிட்ட 13 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரி இருக்கிறது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்த போதிலும் எலான் மஸ்க் இந்தியாவில் தனது நிறுவன கார் தொழிற்சாலையை கொண்டு வருவதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளார்.
இந்த கார் தொழிற்சாலை மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் டெஸ்லா கார் தொழிற்சாலையை எப்படியும் தனது மாநிலத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் சத்தம் இல்லாமல் காய் நகர்த்தி வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மந்திரி நாரா லோகேஷ் அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது அவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனஜோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் கார் தொழிற்சாலை அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் ஆந்திரா அரசு செய்து தரும் என கூறியதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
இதையடுத்து ஆந்திர அரசு மீண்டும் டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மின்சார வாகன உற்பத்தியை தொடங்கும் வகையில் டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்க பல்வேறு சலுகைகள் மற்றும் நில வசதி கொடுக்க அம்மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியம் முன்வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் மின்சார வாகனங்கள் விற்பனை 60 சதவீதம் நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தென் மாநிலமான ஆந்திராவில் கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான முயற்சியை சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார்.
முதலில் கார் இறக்குமதியை அதிகரித்து படிப்படியாக கார் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தவும் டெஸ்லா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
- நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகள் கழித்து டெல்லியில் பாஜக ஆட்சியமைத்துள்ள நிலையில் ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான ரேகா குப்தா நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை ரேகா குப்தா நேரில் சென்று சந்தித்துள்ளார். பிரதமர் இல்லத்தில் அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது.

பதவியேற்ற பிறகு அவர் பிரதமரைச் சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக டெல்லி பட்ஜெட் தாக்கலுக்கு முன் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லி மேம்பாடு குறித்து இருவரும் பேசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
- தமிழக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது.
- இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடலூர் மாவட்டத்துக்கு சென்றார். நேற்று மாலை கடலூரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நெய்வேலியில் தங்கி ஓய்வு எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வேப்பூர் அருகே நடந்த பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டில் கலந்து கொண்டார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி, ஒரு சரித்திரம் இருக்குது தம்பி. அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம், இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற கவிஞர் வாலியின் கவிதை வரிகளுக்கு இலக்கணமாக ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது தான் இந்த மாநாடு. இந்த பெற்றோர், ஆசிரியர் கழக மாநாடு.
முதலில் நான் இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், நான் நெய்வேலியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டேன். நியாயமாக பார்த்தால் 1 மணி நேரத்துக்குள் வந்து சேர்ந்திருக்க முடியும். ஆனால் வழியெங்கும் மக்கள் கடல். அதுதான் காரணம்.
ஆசிரியர்கள் இங்கு இருக்கிறீர்கள். பள்ளி மாணவர்கள் போல் காரணம் சொல்கிறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். காலை 8 மணிக்கு கிளம்பினேன். வருகிற வழி முழுவதும் மக்கள் சந்திப்பு. இதுதான் உண்மையான காரணம்.
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோரை கொண்டாடுவோம் என்ற மாநாடு நடைபெறுகிறது.
வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ கண்மணிகளை வார்ப்பித்தும் வளர்த்தெடுத்தும் வருகிற பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
அன்னை, தந்தை, ஆசிரியர் கூடியிருக்கும் மாநாடு இது. நீங்கள் மொத்தமாக கூடியிருப்பது இதுவரை தமிழ்நாடு பார்க்காத காட்சி. ஒட்டுமொத்த நாடும் பார்த்து அதிசயிக்கிற காட்சி. இதுதான் தமிழ்நாடு. இதுதான் நமது மாநில கல்வித் திட்டத்தின் சிறப்பு. தமிழ் நாடு அரசு செய்வது எல்லாமே சாதனைகள்தான்.
அதில் கல்வித்துறையில் உலக தரத்திலான சாதனைகளை செய்து கொண்டி ருக்கிறோம். அந்த வரிசையில் இதுவும் சாதனை மாநாடாக அமைந்திருக்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என 3 தரப்புக்களுக்குமான கருத்துக்களை வழங்குகிற மாநாடு இது.
இதில் நான் ஆசிரியருமில்லை, மாணவருமில்லை, பெற்றோரே நான் உங்களில் ஒருவன். உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை அறிந்தவன். அதற்கேற்ப கடமைகளை செய்கிறவன்.
திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் பள்ளிகளை உருவாக்கினோம், மாணவர்களை சேர்த்தோம், படிக்க வைத்தோம். மதிப்பெண் வாங்க வைத்தோம், வெளியில் அனுப்பினோம். இத்தோடு பள்ளிக் கல்வித்துறையின் கடமை முடிந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தமிழ்நாட்டின் சொத்து என்கிற அந்த நினைப்புடன் அவர்களை வளர்த்துக் கொண்டு வருகிறோம்.
பெற்றோருக்கு பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதே அளவு அக்கறை இந்த அரசுக்கும் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது. இதை சொல்வது ஒன்றிய அரசின் அறிக்கைகள். ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டில் கல்வி தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ் நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு 2151 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்து உள்ளது. இது 43 லட்சம் பள்ளி குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கிற கொள்கை.
தமிழ் மக்களுக்கு வேட்டு வைக்கிற கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. காரணம் எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் அந்த திணிப்பை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம்.
இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளிக்கூடங்களில் இருந்து விரட்டுகிற கொள்கை அது. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகிற கொள்கை அது. அதை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தி இருக்கிறோம். தொடர்ந்து உணர்த்துவோம். ஒன்றிய அரசின் கொள்கையால் என்னென்ன பாதிப்பு வரும் என்பதில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
ஒன்றிய கல்வி அமைச்சர் கேட்கிறார். எல்லா மாநிலங்களும் மும்மொழிக்கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேட்கிறார்.
அவருக்கு நான் சொல்கிறேன். இது தமிழ்நாடு. எங்கள் உயிரை விட மேலாக தமிழை மதிக்கிறவர்கள் நாங்கள். எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தமிழ் மொழியை காக்கும் அரணாக தி.மு.க. திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. இந்தி பெல்ட் என்கிற மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்து விட்டன. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் இப்போது தான் விழிப்புணர்வு அடைந்து வருகிறது. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் தற்போது விழிப்புணர்வு அடைய தமிழ்நாடு தான் காரணம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- மொரீஷியசில் ஆண்டுதோறும் மார்ச் 12-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- 57-வது தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம் கூலம் தெரிவித்துள்ளார்.
1968-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதை குறிக்கும் வகையில் மொரீஷியசில் ஆண்டுதோறும் மார்ச் 12-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி நடைபெற உள்ள 57-வது தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம் கூலம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது எனது அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி நமது தேசிய தின விழாவில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 11 மற்றும் 12-ந்தேதிகளில் போர்ட் லூயிஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது.
- சிறு காயங்களுடன் நபரை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்கிறது. சாலையில் செல்லும் போது நாம் எவ்வளவு கவனமாக சென்றாலும் விபத்து நிகழ்வதாக பலரும் கூறுவதற்கு மோசமான சாலைகளே காரணம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை பணிக்காக, குடிநீர் பணிக்காக, வடிகால் வசதிக்காக என்று ஒவ்வொரு துறை சேர்ந்த பணிகளும் நடைபெறும் போது சாலை மோசமாகி விடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறை பணிக்காக சாலையின் நடுவே தோண்டப்படும் குழிகளும் உடனடியாக சீரமைப்பதும் கிடையாது. இதனால் குழியில் விழுந்து உயிரிழப்பதும் நிகழ்கிறது.
அதன்படி தான், குஜராத் மாநிலம் வதோதராவில் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட குழியில் நபர் ஒருவர் விழுவது தொடர்பான வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது.
சாலையின் நடுவே தோண்டப்பட்ட குழியின் அருகே இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர் நிலைதடுமாறி குழியில் விழுந்து விடுகிறார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்கின்றனர். சிறு காயங்களுடன் நபரை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மீரட் மாவட்டத்தில் 1857 இல் கட்டப்பட்ட 168 ஆண்டுகள் பழமையான மசூதி நேற்று இடிக்கப்பட்டது.
- மசூதியை தங்கள் செலவிலேயே இடிப்பதாவதும் அவர்கள் தெரிவித்தனர்
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் 1857 இல் கட்டப்பட்ட 168 ஆண்டுகள் பழமையான மசூதி நேற்று இடிக்கப்பட்டது.
ஜகதீஷ் மண்டப் பகுதி அருகே டெல்லி சாலையில் அமைந்துள்ள இந்த பழமையான மசூதி, முஸ்லிம் சமூகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒப்புதலின் பேரில் இடிக்கப்பட்டது.
அப்பகுதியில் மெட்ரோ ரெயில்தடம் அமைக்கும் பணிகளுக்கு அந்த மசூதி தடையாக இருந்த நிலையில் அதை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் சம எண்ணிக்கையில் வாழும் அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்படும் என அஞ்சி மசூதியை இடிக்க அதிகாரிகள் தயங்கினர்.
இதனால் நேற்று முன்தினம் அப்பகுதி முஸ்லிம்களுடன் மீரட் நகர உதவி ஆட்சியர் பிரிஜேஷ் சிங், நகர காவல்துறை எஸ்.பி. ஆயுஷ் விக்ரம்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த மறுப்பும் கூறாமல் முஸ்லிம்கள் மசூதியை இடிக்க சம்மதித்தனர்.

மேலும் மசூதியை தங்கள் செலவிலேயே இடிப்பதாவதும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் தொழுகை நிறுத்தப்பட்டது. மசூதிக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மசூதி இடிக்கப்பட்டது.
நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதில் என்றுமே முஸ்லிம்கள் முதலாவதாக நிற்பவர்கள் என்றும் புதிய மசூதி கட்ட அப்பகுதியில் வேறு இடத்தில் அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் மசூதியின் முத்தவல்லி, ஹாஜி ஷாஹீன் தெரிவித்தார்.
- வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
- அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது.
சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து கடந்த 12-ந்தேதி முதல் மீண்டும் தொடங்க இருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது. காலை தொடங்கிய கப்பல் சேவையை மும்மதத்தை சேர்ந்தவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த கப்பலில் 83 பயணிகள் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர்.
- பேட் கம்மின்ஸ் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
- 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடக்கும் இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியில் முழு திறமையை வெளிப்படுத்த போராடும்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது. அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.
- 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது.
- இந்தியாவில் அதிவிரைவாக ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.
இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் புடவை அணிந்து நடித்த ஜாதரா காட்சியில் நடிக்க பயந்ததாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இயக்குநர் சுகுமார் முதலில் ஜாதரா காட்சி பற்றி என்னிடம் கூறியபோது , நான் மிகவும் பயந்தேன். 'நீங்கள் ஒரு பெண்ணை போலவே புடவை அணிய வேண்டும்' என்று அவர் கூறியபோது பயமாக இருந்தது. அனால் பின்னர் அதை படமாக்கி விட்டோம்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2024-25 ஆம் ஆண்டில் குஜராத்தின் கடன் ரூ.3,99,633 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ரூ.66,000 கடன் உள்ளது.
குஜராத்தின் மொத்த பொதுக் கடன் 2023-24 நிதியாண்டில் ரூ.3.77 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
மேலும் அம்மாநிலத்தின் மொத்த பொதுக் கடன் 2024-25 ஆம் ஆண்டில் அது ரூ.3,99,633 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 நிதியாண்டுகளில், நிதி நிறுவனங்களிடம் இருந்து ₹10,463 கோடியை கடனாக பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
குஜராத்தின் மக்கள் தொகை 6 கோடியாக இருப்பதால், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ₹66,000 கடன் உள்ளது என தரவுகள் மூலம் நிரூபனமாகிறது
பாஜக தலைமையிலான குஜராத் அரசு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், வளர்ச்சி என்ற பெயரில் கடனை அதிகரிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.






