என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala footballer"

    • திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது.
    • சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர். வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்ததால் குளிக்காமல் வந்து விட்டதாக மகா கும்பமேளாவுக்கு சென்றிருந்த கேரள மாநில கால்பந்து வீரரான வினீத் தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-


    மகா கும்பமேளா நிகழ்வு ஒரு சிறந்த நிகழ்வு என்று நினைத்து அங்கு நான் சென்றேன். என் அனுபவத்தில் அது அப்படி இல்லை. மிகப்பெரிய கூட்டம் இருந்தது. திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை. இதனால் அந்த அழுக்கு நீரில் நான் குளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்கு தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள்.
    கேரளாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஆதர்ஷ். இவருக்கு 5-வது டிவிஷன் பிரிவில் கால்பந்துப் பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

    இந்த ஒரு மாதப் பயிற்சியில் அவரால் 5 ஆட்டங்களில் விளையாட முடியும். அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டால் ஸ்பெயின் கிளப்புகளில் தேர்வாகவும் வாய்ப்புண்டு. 

    ஆனால் ஸ்பெயினுக்குச் சென்று பயிற்சி எடுக்கும் அளவுக்கு நிதி வசதி இல்லை. எனவே, அவர் கேரள அமைச்சர் சாஜி செரியனிடம் உதவி கோரினார். இதனைத் தொடர்ந்து, ஆதர்ஷின் நிலைமை மற்றவர்களும் தெரியவந்தது. பலர் உதவி செய்ய முன் வந்துள்ளார்கள். 

    கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்குத் தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள். மேலும்,  தனியார் கிளப் ஒன்று ரூ. 50,000 அளித்த நிலையில் கேரள அமைச்சர் சாஜி செரியனும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஆதர்ஷுக்கு நிதியுதவி செய்துள்ளார். 

    அதுமட்டுமல்லாமல், பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனும் தன் பங்குக்கு ஆதர்ஷுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். ஆதர்ஷ் ஸ்பெயின் செல்வதற்கான விமான டிக்கெட் செலவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆதர்ஷ் விரைவில் மேட்ரிட் சென்று பயிற்சியில் பங்கேற்க வாழ்த்து தெரிவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.
    ×