என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டில் 'அப்பா செயலி' அறிமுகம்
- திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
- பள்ளி மாணவன் போல் காரணம் கூறுவதாக நினைக்க வேண்டாம்.
கடலூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக கடலூருக்கு நேற்று மாலை வருகை தந்தார். பின்னர் அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* விழாவிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
* பள்ளி மாணவன் போல் காரணம் கூறுவதாக நினைக்க வேண்டாம். வருகின்ற வழிநெடுக காத்திருந்த மக்களை சந்தித்து வந்ததால் தாமதம் ஆனது.
* மேடையில் பேசாமல் நின்ற மாணவச் செல்வங்களின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வணங்குகிறேன் என்று கூறினார்.






