search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seeman"

    • கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
    • இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மண்னச்சநல்லூரி தேர்தல் பிரசாரத்தின்போது நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:-

    பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு. அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

    கப்பல் துறை தனியார், போக்குவரத்து துறை தனியார், கல்வி துறை தனியார் மருத்துவத்துறை தனியார் விமானத்துறை சாலை பொருள் தனியார், ரெயில்வே துறைகளை தனியாருக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன?

    கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவது கொடுமை. இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது.

    விலைவாசி உயர்வால் நமது வாழ்க்கை தரம் மாறிப்போச்சு. இந்த நிலை தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாறுதலை ஏற்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களாட்சி, ஜனநாயகம் என்பது வார்த்தையாக மட்டுமே உள்ளது.
    • தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    ஒரேநாடு, ஒரே தேர்தல், ஒரே கல்விக்கொள்கை, ஒரே ரேஷன் கார்டு என்பது இன்றைய நாட்டின் நிலையாக உள்ளது. இந்திய இறையாண்மை, நாட்டுப்பற்று என்று பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் பேசுவார்கள். ஆனால் கர்நாடகா என்று வந்துவிட்டால் கர்நாடக மக்களின் நலனை பற்றியே பேசுவார்கள்.

    ஆனால் இங்குள்ள திராவிட கட்சிகள், பாராளுமன்ற தேர்தலில் இந்திய நலனை பற்றி பேசுவார்கள். இந்தியாவை காப்பாற்ற வாருங்கள் என்பார்கள். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்பார்கள். இவர்களுடன் கூட்டணி வைத்தவர்கள் தான் பறித்தார்கள். தமிழ்சமூக மக்கள் இந்த நாடகத்தை அறிய வேண்டும். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

    மக்களாட்சி, ஜனநாயகம் என்பது வார்த்தையாக மட்டுமே உள்ளது. 10 ஆண்டு ஆட்சி நடத்திய பா.ஜனதா சாதனையை சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மகளிருக்கு ரூ.1,000 கொடுத்ததை தவிர வேறு எதையும் சொல்லி தி.மு.க. ஓட்டுக்கேட்க முடிகிறதா. சாதி, மதம், கடவுளை வைத்து பேசியவர்களை இந்த மக்கள் துரத்தியடிக்கும் காலம் வரும். மக்களுக்கு நீரும், சோறும் கொடுக்க எந்த ஒரு திட்டமும் இவர்களிடம் இல்லை.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்து தான் ஊழல், லஞ்சத்துக்கான விதை ஊன்றப்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் போட்டியிட 10 ஆண்டுகளுக்கு தடை விதித்தால் இவர்கள் பணம் கொடுப்பார்களா?. மாற்று அரசியலுக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது
    • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது.

    சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த 40 தொகுதிகளில் போட்டியிடுபவர்களில் 20 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள் . சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மைக் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    முன்பு கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்த சீமான், மைக் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார்.

     

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை கொடுத்துவிட்டு, ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்...
    • நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அந்தியூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தலைவர்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    * 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரேயொரு சாதனை சொன்னால் நாங்கள் போட்டியில் இருந்து விலகிவிடுகிறோம்.

    * தலா 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக என்னுடைய வாழ்நாளில் பாதி நாளை தின்னுவிட்டீர்கள்.

    * என்ன நடந்திருக்கு எந்த நாட்டில்? ஆட்சி பொறுப்பேற்கும் போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்னார் மோடி. தற்போது 20 கோடி பேர் வேலை இல்லாமல் இருப்பார்கள்.

    * ஒரே ஒரு தடவ பத்திரிகையாளர்களை மோடி சந்தித்தால் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்.

    * எல்லாவற்றிலும் புதுசு தேடும் போது, 75 வருஷமா உதயசூரியன், 60 வருஷமா இரட்டை இல்லை, அதே தாமரை, அதே கை... எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு ஒரே தடவ மைக்கை அழுத்து..

    * எல்லாரும் அவங்க சின்னத்துல நின்னு போட்டியிடுறாங்க. எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்... நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    * இந்தியம் பேசி, திராவிடம் பேசி என்னிடத்தில் வளத்தை கெடுத்து மக்களின் நலத்தை நாசமாக்கி, என்னுடைய வரியை, வரிவரி என்று வாங்கி குவித்தவர்கள், ஊழல், லஞ்சத்திலே ஊறி திளைத்தவர்கள் இதையெல்லாம் தடுக்க ஒரு அரசியல் புரட்சி படை உருவாகி வருகிறது என்று நடுங்குகிறார்கள்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    • ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது.
    • சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள்.

    தருமபுரி:

    தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னி வளவனை ஆதரித்து இன்று தருமபுரி 4 ரோடு சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:

    திராவிட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. பீகாரில் மாநில அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் அது நடக்கவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தி.மு.க. அரசு நடத்தாது.

    தி.மு.க.விற்கு நீங்கள் தொடர்ந்து வாக்களித்து இருந்தால் உங்கள் உரிமையை நீங்கள் இழக்கப்படுவீர்கள். நோயாளிகள் உருவாகாத ஒரு சமூக சமுதாயத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறிய காங்கிரசுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் மு.க.ஸ்டாலின். காவிரிநதி நீரை கொடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் தோற்கடிக்கபடுவீர்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக பேசாத பாஜக தற்போது கச்சத்தீவை பற்றி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    பா.ஜ.க. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் அரசியல் ஆகும்.

    6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என்பதை மாற்றி 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என மாற்றப்பட வேண்டும். ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது.

    ஒரு வேட்பாளர் ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பாட்டு பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு சீமான் வாக்கு சேகரித்தார்.

    • இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தி விட்டு தரமற்ற பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.
    • பாராளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

    ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டியதாக 20 பேர் சுட்டுகொன்றபோது அதிமுக, திமுக வேடிக்கை தான் பார்த்தது.

    ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டேன் என சொல்லும் கட்சிக்கு 10 சீட் கொடுத்து தேர்தலை சந்திக்கிறது தி.முக. முதன் முதலில் இசுலாமிய பயங்கரவாதிகள் என சட்டசபையில் பேசியவர் கருணாநிதி இவர்களா இசுலாமிய காவலர்கள்.

    இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லை, பணம் செல்லவில்லை என்று அர்த்தமா?

    இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தி விட்டு தரமற்ற பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. மேலும் அதில் பயணிக்கும் எங்கள் பெண்களையே அவதூறாக பேசுகிறார்கள் இதுதான் திமுகவின் பெண்ணிய உரிமையா?

    பின்னர் அவர் அளித்த பேட்டியளித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:

    ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டு தடை செய்ய வேண்டும். இப்போது ஏதோ ஒரு இடத்தில் தான் பிடித்திருக்கிறார்கள். காசு கொடுக்க மாட்டோம் என சொன்னவர் எங்கள் தம்பி அண்ணாமலை அவர்தான் இதற்கு பதில் கொடுக்க வேண்டும்.

    நம் முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரம், ஜனநாயகம் பணநாயகமாகி விட்டது. அதனால்தான் எந்த கட்சியுடனும் கூட்டணி சேரவில்லை.

    தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் பெண்கள் குறித்து பேசிய பேச்சை அவர்களின் குடும்ப பெண்களே சகித்துக் கொள்ளவார்களா? கதிர் ஆனந்த் எதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

    பாராளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். அப்படி என்றால் தமிழில் ஆட்சி மொழியாகும் எண்ணம் இவர்களுக்கு இல்லையா?

    தேர்தல் பறக்கும் படையினரின் நடவடிக்கையை கொடுமையாக பார்க்கிறேன். இதுவரை காசு கொடுப்பவர்களின் பணத்தைப் பிடித்தும் என்று ஏதாவது ஒன்றை காட்ட முடியுமா?

    ரம்ஜான் நேரம் என்பதால் ஆடு, மாடு விற்பனை செய்யும் பணத்தை எப்படி விவசாயிகள் எடுத்துச் செல்வார்கள் ?

    ஊழல் இல்லாத அரசு என கூறும் பாஜக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து 150 கோடி கொடுத்தது அது ஊழல் இல்லையா?

    கேட்டால் அதில் நாங்கள் தவறான தகவலை பரப்புகிறோம் என்கிறார்கள் இவர்கள் செய்வதை தானே நாங்கள் பரப்புகிறோம். இமெயில் இன்ஸ்டாகிராம் எல்லாம் வரும் காலத்தில் தடை செய்ய வாய்ப்பிருக்கு?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது.
    • ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சைக்கு கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியை போட்டியாக பார்க்கவில்லை என பா.ஜ.க. கூறுகிறது. போட்டியில் இல்லாதவனிடம் எதற்காக சின்னத்தைப் பறித்தீர்கள்? மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவோம் என பேசுவதே முட்டாள்தனம் என்றார்.

    • தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது.
    • அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாப்பூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது. அதனை தகர்த்து புதிய கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்று வரலாற்றை வாசித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

    40 தொகுதியிலும் நாம் மட்டுமே போட்டியில் உள்ளோம். போட்டியிட ஆள் இருக்கிறதா? என்று கேட்டவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லை.

    அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன். தம்பி அண்ணாமலையிடம் கூட நான் சொன்னேன். நீங்கள் எடுத்திருப்பது போலீஸ் பயிற்சி. நான் எடுத்திருப்பது போராளி பயிற்சி. இருவரும் மோதிப் பார்ப்போமா? என் முன்னாடி நீங்கள் ரொம்ப சாதாரணம். உங்களுக்கு பிரதமர் ஓட்டு கேட்டு வருவார். உள்துறை மந்திரி வருவார். எனக்கு எல்லாமே நான்தான். அப்ப நான்தானே கெத்து.

    தமிழர்களுக்கு இந்த ஒரு நிலம்தான் உனக்கும் இருக்கு. அதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே.
    • இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    திண்டுக்கல்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே. மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை.

    சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 10 சீட் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது.

    கச்சத்தீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரஉள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன்.

    தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கிறோம்.

    பா.ஜ.க.வினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைத்திருந்ததால்தான் டி.டி.வி.தினகரனுக்கும், வாசனுக்கும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. தினகரனையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய பா.ஜ.க.வுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். இரட்டை இலையை மீட்பதே லட்சியம் என்று கூறி வரும் தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் உள்ளார்.

    அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது எங்களுக்கு எதிர்கட்சிதான். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்சி அலுவலமாக மாறி விட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னர் போலவும், அவரது அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போலவும் செயல்பட்டு வருகின்றனர். உதயநிதி தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் செங்கல், புகைப்படம் என்று காமெடி பிராப்பர்ட்டி செய்து வருகிறார். இது மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மாலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
    • குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரம் தட்டுப்பாடு வந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் இங்குள்ள நிலமும், தண்ணீரும் கெட்டு விடும் என்று சொல்லவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது அதனை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தடியடி நடத்தி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 6 மாதமாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட போலீ சாருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை.

    மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது இங்குள்ள அனைத்து கட்சியினரும் துடித்தனர். ஆனால் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து துடித்தேன்.

    வீட்டுக்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து நல்ல பொருட்களாக வாங்குவதை போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன்.

    தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறேன்.

    குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை.
    • என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.

    ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.

    நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார்.

    அப்போது விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நா.த.க வேட்பாளர் கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும்.

    "என் மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை" என்று தெரிவித்துள்ளார். 

    ×