என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seeman"

    • நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றுகிறார்கள்.
    • இது மாற்றத்திற்கான இயக்கம் என மார்தட்டிக் கொண்டு என் வழி, தனி வழி என சீமான் செயல்பட்டு வருகிறார்.

    எப்போதும் நாங்கள் தனிக்காட்டு ராஜா என்பது போல 2026 சட்டமன்ற தேர்தல் களத்தையும் தனித்து சந்திப்போம் என அறைகூவல் விடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தலுக்கான வெற்றிக்கு தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

    இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற மாநில அளவிலான மாநாட்டினை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாநாடு வருகிற பிப்ரவரி 21-ந்தேதி நடைபெறுகிறது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்படுகிறது.

    இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றுகிறார்கள். மேலும் இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்கிறார். 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.

    மாநாடு பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. தற்போது விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழக தாக்கத்தால் அவரது வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படும் என பலரும் ஆருடம் தெரிவித்து வரும் சூழலில் தமக்கான வாக்கு வங்கியில் எந்த சேதாரமும் ஏற்படுத்த விடமாட்டோம். இது மாற்றத்திற்கான இயக்கம் என மார்தட்டிக் கொண்டு என் வழி, தனி வழி என சீமான் செயல்பட்டு வருகிறார்.

    சமீபத்தில் மதுரையில் மாடுகளின் மாநாடு, சென்னையில் மரங்களின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு, கல்லணை திருக்காட்டுப் பள்ளியில் நீர் மாநாடு போன்றவற்றை நடத்தி அரசியல் அரங்கை அதிரடித்தார். இது போன்ற மாநாடுகளை சிலர் கேலி செய்தாலும் இது அவருடைய வாக்கு வங்கியை பல தளத்திலும் விரிவாக்கும் முயற்சி என்பதை விவரம் அறிந்தவர்கள் உணர்ந்துள்ளனர்.

    இந்தநிலையில் திருச்சி ஆலம்பட்டி புதூர் மாநாட்டுக்கான கால் கோள்விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    • ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது.
    • திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலையொட்டி பிப்ரவரி 21-ந் தேதி திருச்சி மாநாட்டில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளேன். யாரை சேர்ப்பது, யாருடன் செல்வது என்ற எந்தவித குழப்பமும் இன்றி நாங்கள் தனியாக பயணிக்க உள்ளோம்.

    பொங்கலுக்கு ரூ.6800 கோடி இனாம் கொடுத்து உள்ளார்கள். இது ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட காசுதான். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நடுரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களும், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறார்கள்.

    போக்குவரத்து துறையில் 1 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் பேருந்துகளில் இலவச பயணம் எதற்கு? மத்திய- மாநில அரசுகள் கடன் வாங்கி அரசை 3 நடத்தியும் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் இருக் கும் அரசு இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    எங்கள் கொள்கைக்கு யாரும் போட்டி இல்லை. திராவிடம் என்பது எந்த மொழிச் சொல் என்று யாருக்கும் தெரியாது. மாநில உரிமையில் இருந்து கல்வி பறிக்கப்பட்டது தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான்.

    இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம். தமிழ் தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. குரு மூர்த்திக்கு பிறந்தவன் என்று ஒருவன் என்னைப் பற்றி குறிப்பிடுகிறான். இதுதான் பெரியார் சொல்லி கொடுத்த பண்பாடா? பெரியாரை சீமான் எதிர்த்து பேசி விட்டார். அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தேர்தல் காலத்தில் ஒருத்தனாவது பேச முடியுமா? பெரியாரை நாங்கள் போற்றுகிறார். எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று உங்களால் கேட்க முடியுமா? எந்த தலைவனுக்கு இங்கு ஓட்டு உள்ளது.

    எனக்கு விழுந்த ஓட்டு எனது கொள்கைக்காக விழுந்த ஓட்டாகும். பணம் கொடுக்காமல் எனக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.

    பெரியாரை நாங்கள் பேசும் முன்னே திருமாவளவன் கடுமையாக பேசி உள்ளார். அண்ணா, கலைஞருமே பெரியாரைப் பற்றி பேசி உள்ளார்கள்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் எனது ரோல் மாடல் என்று விஜய் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். அது தம்பியின் விருப்பம். அவர்களை ஏற்றுக்கொண்டது எப்படி? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நான் எல்லா இடத்திலும் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து பேசுகிறேன். ஆனால் விஜய் உங்களையெல்லாம் சந்திக்கவே மாட்டார்.

    ஆனால் அவரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுவும் ஒரு கொடுமைதானே.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
    • மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

    நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்கு நாம் தமிழர் ஒருங்குணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைத்துறையில் சாதித்த திருத்தணி ஓதுவார் ஐயா சுவாமிநாதன், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக்கலையை மீட்டெடுத்த ஓவியக் கலைஞர் ஐயா நீலகிரி கிருஷ்ணன், வெண்கல சிலை வடிப்பதில் சாதித்த சிற்பக் கலைஞர் ஐயா சேலம் காளியப்ப கவுண்டர், இசைத்துறையில் சாதித்த மிருதங்கக் கலைஞர் ஐயா திருவாரூர் பக்தவத்சலம், சிலம்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ள புதுச்சேரி சிலம்ப கலைஞர் ஐயா கே.பழனிவேலு, பொறியாளர் ஐயா காமகோடி, கலைத்துறையில் சாதித்த சகோதரிகள் காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் அவர்களோடு, பத்மபூஷண் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐயா களியப்பட்டி ராமசாமி, ஐயா பழனிசாமி, ஐயா மயிலானந்தன் மற்றும் மலையாள நடிகர் அன்புச்சகோதரர் மம்மூட்டி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நல்வாழ்த்துகளும்!

    கால்நடை மருத்துவ ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணியமூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    திரைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி நடிகர் மாதவன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    தொடர்ந்து பல ஆகச்சிறந்த கலைப்படைப்புகள் தந்து மென்மேலும் சாதனை படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!" என்று தெரிவித்துள்ளார்.

    • 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை.
    • எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.

    சென்னை தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள் சாப்பிடுவார்கள்?

    * 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை.

    * எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.

    * பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான்.

    * பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது.
    • கர்நாடக மக்களிடம் இருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும்.

    திருப்பூர் அருகே, தங்கள் மாநிலக்கொடியை வாகனத்தில் பொருத்தி வந்ததால், கர்நாடகத்தினர்மீது தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர்,  

    தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது.

    கர்நாடக மாநில முதலமைச்சர் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றும் வேளையில், அருகிலேயே கர்நாடக மாநிலக் கொடியையும் ஏற்றுகின்றார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே தன்னுடைய அரசு வாகனத்தில் இந்திய கொடியுடன், கர்நாடக மாநிலக் கொடியையும் பொருத்தியுள்ளார். கோலார் தங்கவயல் சுரங்கங்களில் அணுக்கழிவை பாதுகாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது இதே கன்னடக்கொடியை ஏந்தியே ஒற்றுமையுடன் தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அச்சதியை கன்னட மக்கள் முறியடித்தனர்.

    அண்டை மாநிலங்களுடனான எல்லைச்சிக்கல், நதிநீர் சிக்கல், இந்தி திணிப்பு எதிர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்ட எந்தவொரு மாநில உரிமைச்சார்ந்த பிரச்சனைகளிலும் கர்நாடக கொடியை ஏந்தியே கன்னட மக்கள் உரிமை மீட்கின்றனர். கர்நாடக உரிமைப்போராட்டங்கள் யாவிலும் சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி கன்னட மக்கள் அனைவரும் கட்சி கொடிகளை விடுத்து, மஞ்சள் சிகப்பு வண்ணங்களுடனான கர்நாடக கொடியை தங்களின் ஒற்றை அடையாளமாக்கி போராடும் அளவிற்கு அக்கொடி மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும்.

    கன்னட மக்களின் உணர்வுடன் இரண்டற கலந்து, அவர்களது ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக திகழும் கர்நாடக மாநில கொடியை கன்னட மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெருமையோடு தங்கள் கைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொருத்துகின்றனர். அது அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். கன்னட மக்களின் அத்தகு இன உணர்வை மதித்து நாம் போற்ற வேண்டும். அவர்களிடமிருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும்.

    இத்தகு வன்முறையில் ஈடுபடுவோர்கள், கன்னட மக்கள் மீதும், கர்நாடக கொடியின் மீதும், உங்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டுவதற்கு பதிலாக இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் போற்றிய மூவேந்தர் இலட்சனை பொருந்திய தமிழ்நாட்டு கொடியை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் மீது உங்கள் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

    60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டும், தமிழ்நாட்டிற்கென்று தனித்த கொடி உரிமையை வாங்கி தராத திமுக, அதிமுக கட்சிகள் மீது உங்கள் கோபம் இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை பறித்த பாஜக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும், அதற்கு துணைநின்றவர்கள் மீதும் உங்கள் வெறுப்பும், எதிர்ப்பும் இருந்திருக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ்நாட்டிற்கு வரும் அப்பாவி கன்னட மக்களை வெற்று வெறுப்புணர்வு கொண்டு தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    ஒரு சிலரின் இதுபோன்ற தேவையற்ற அடாவடிச் செயல்களால் கர்நாடகாவில் எழுந்துள்ள பதற்றமும், இதை சாதகமாக பயன்படுத்தி கன்னட அமைப்புகள் சில, அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக செய்யும் வெறுப்பு பரப்புரைகளும் பெருங்கவலையைத் தருகிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும், எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும் இதுபோன்ற இழிசெயல்களில் இனிமேல் எவரும் ஈடுபட வேண்டாமென வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


    • உலகிலேயே தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் தான் நிழல் கீழே விழாது
    • சீமான் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானது

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி பராசக்தி படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    இந்நிலையில், பராசக்கதி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.

    படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது. மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை" என்று விமர்சித்தார்.

    மேலும், பேசிய சீமான், "உலகிலேயே தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் தான் நிழல் கீழே விழாது என்று தெரிவித்தார்.

    சீமான் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாக அவர் பேசிய தவறு என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    உண்மையில், தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் காலையில் மேற்கிலும் மாலையில் கிழக்கிலும் கீழ் விழும் என்று நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    • தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது.
    • வலுக்கட்டாக ஆங்கில சொற்களை சேர்த்து, தங்கிலீஸ் உருவாக்கிவிட்டோம்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி பராசக்தி படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    இந்நிலையில், பராசக்கதி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.

    படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது. விரும்பினால் எம்மொழியும் கற்போம். ஈழத்தில் நாங்கள் எங்கள் தாய் நிலத்தை இழந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக போனோம். ஒரு மொழி தேவை என்றால் கற்று கொள்வோம். ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதிகபட்சமாக ஆறு மாதம் ஏழு மாதம் ஆகும்.

    கடந்த 3 தலைமுறைகளாக தாய் மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது. நமக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. வலுக்கட்டாக ஆங்கில சொற்களை சேர்த்து, தங்கிலீஸ் உருவாக்கிவிட்டோம்.

    மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை" என்று விமர்சித்தார்.

    அப்போது பராசக்தி படத்தில் வரும் "செழியன் கதாபாத்திரம் உண்மையாக இருக்குமா?"என்ற கேள்விக்கு, அந்த செழியன் நான்தான் என்று சீமான் பதில் அளித்தார்.

    • இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது.
    • சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், இப்பகுதியில் உள்ள 4375 ஏக்கர் பரப்பளவிலான உப்பங்கழி மற்றும் தாழ்வான நிலப்பகுதியைச் சுற்றி 30.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரைகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது. நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதும் பூமித்தாயின் நலனுக்கு இன்றியமையாததும் ஆகும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆராய்ந்திட வேண்டியது அவசியமாகும்.

    இத்திட்டம் அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும், 16-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டமாகும்.

    சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாருதல், பயன்பாட்டில் இருக்கும் நன்னீர்த் தேக்கங்களில் கழிவு நீர் மற்றும் குப்பை கலக்காது வழிவகுத்தல் மற்றும் கால்வாய்களைப் பராமரித்தாலே அதிக அளவில் நன்னீரைச் சேமிக்க முடியும். உப்பங்கழிகளை அழிக்காமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறு ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கலாம். வளர்ச்சி என்பது நிலத்தையும், வளத்தையும் மேலும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் உள்ளடக்கியது.

    16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச் செல்லும். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?
    • ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உதவித்தொகை ரூ.2000 என்ற அ.தி.மு.க.வின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * இலவச பேருந்து வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது?

    * முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?

    * தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா?

    * ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்.

    * எங்கள் தாய்மார்களுக்கு தேவையாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் என்று அவர் கூறினார்.

    • ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படவில்லை
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தணிக்கை துறையை கண்டித்து பதிவிட்டிருந்தார்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தணிக்கை துறையை கண்டித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த சீமான், "தணிக்கை துறை விருப்பு வெறுப்புக்கு ஏற்றமாதிரி செயல்படுகிறது. நான் நடித்த அடங்காதே படத்தில் நான் பேசிய வசனங்களை நீக்கி விட்டார்கள். அந்த படத்தில் 500 இடங்களுக்கு மேல் வெட்டி விட்டார்கள்.

    திரையில வர்ற ஜனநாயகன் பத்தி பேசிட்டு இருக்கீங்க'.. தரையில நான் ஒரு ஜனநாயகன் இருக்கேன். என்ன கண்டுக்க மாட்ரீங்க...

    ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக உடனே குரல் கொடுக்கும் முதலமைச்சர் ஏன் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு குரல் கொடுப்பதில்லை" என்று தெரிவித்தார்.

    • சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2006ல் 'தம்பி' படம் வெளியானது.
    • பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

    சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தில் சீமானின் 'தம்பி' படமும் இணைந்துள்ளது. சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2006ல் வெளியான 'தம்பி' திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    வரும் பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    • மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான்.
    • அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

    ஈரோடு:

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இவ்வழக்கு தொடர்பாக மார்ச் மாதம் 9-ந்தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன்பின், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான், அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மேலும் கூறியதாவது:-

    * திமுக- அதிமுக மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து கொடுந்துயரம்.

    * மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான்.

    * அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

    * கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3000 கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

    ×