என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H. Vinod"

    • ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
    • 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. இசை வெளியிட்டு விழாவில் நடைபெறும் பல சுவாரஸ்சிய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வகையில் விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.

    இதனையடுத்து மேடையில் விஜய் நின்று கொண்டிருந்த போது ரசிகர்கள் TVK... TVK... என கோஷமிட்டனர். இதனை சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் இது அதற்கான மேடை இல்லை என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
    • 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.

    இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து காணப்படுகிறது. மேலும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் மைதானத்தில் வெளியே ரசிகர்கள் விஜய் முகம் பொறித்த கொடியுடன் நடனாமாடி கொண்டாடி வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் தொடர்பான புகைப்படம் மற்றும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.
    • விஜய் பேசிய வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.

    இதனிடையே, 'ஜன நாயகன்' படம் விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படுவதால் இசை வெளியீட்டு விழாவில் அவர் சொல்லும் 'ஒரு குட்டி ஸ்டோரி'-க்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் 'One Last Time... ORU KUTTI STORY...' என்று விஜய் பேசிய வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். 



    • விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் 3-வது பாடல் 'செல்ல மகளே...' இன்று வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது.
    • இந்த விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் படத்தின் நாயகன் விஜய், மமீதா பைஜு, இயக்குனர் ஹெச் வினோத், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மலேசியாவுக்கு சென்றடைந்தனர். 

    மலேசியாவுக்கு சென்றடைந்த விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.
    • ‘தளபதி திருவிழா’ என்ற கார் கோலாலம்பூரில் வலம் வருகிறது.

    நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் உள்ளது என்றால் அது மிகையல்ல...

    இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், 'தளபதி திருவிழா' என்ற கார் கோலாலம்பூரில் வலம் வருகிறது. 



    • 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது.
    • பல்வேறு நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விஜய். நடிப்பில் பயணித்த வந்த விஜய், ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனால் நடிப்பில் இருந்து விலகுவதாக கூறி ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

    இதனால் 'ஜன நாயகன்' படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும், விஜய் போன்ற நடிகனை தமிழ் சினிமா இழப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நாளை நடைபெறும் இசை வெளியீட்டுக்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மலேசியா புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனால் மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 



    • இப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இன்று மாலை பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் வெளியாக உள்ளது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

    பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இதனிடையே, இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.



    இதற்கிடையே, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் மலேசியாவுக்கு புறப்பட்டார். 

    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
    • போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் 3-வது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


    • ‘ஜன நாயகன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
    • இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் எச்.வினோத். இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. விஜயின் கடைசி படம் 'ஜன நாயகன்' எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

    'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

     

    இந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத்- நடிகர் தனுஷ் இணையும் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

    இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' படத்தையும் ஜீ தமிழ் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 



    • படத்திற்கான ப்ரேமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • அடுத்த மாதம் 27-ந்தேதி மலேசியாவில் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையே, இப்படத்திற்கான ப்ரேமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பல நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு 'ஜன நாயகன்' பட குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதாவது, சம்பள நிலுவை காரணமாக விஜயின் டப்பிங் பணி தாமதமானதாக தகவல்கள் பரவி வந்தன. இதனை மறுத்துள்ள படக்குழு, இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. விஜய் படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், அவருக்கு வழங்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என்பதால் இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக தமிழ்நாட்டு திரையரங்கு உரிமைகள் ரூ.105 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே, அடுத்த மாதம் 27-ந்தேதி மலேசியாவில் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவிற்கும் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×