என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எந்த உணவை நீங்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டர்கள் என எம்.எஸ்.தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
- இப்போது வரை பட்டன் சிக்கன் தன எனக்கு பிடித்தமான உணவு என்று எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதேபோல சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது எம்.எஸ்.தோனியிடம் எந்த உணவை நீங்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "இப்போது வரை பட்டன் சிக்கன் தன எனக்கு பிடித்தமான உணவு. 2004 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானேன். 2005ல், இந்தியா உட்பட எல்லா இடங்களிலும் விளையாட ஆரம்பித்தேன். அப்போது ஓட்டலில் , மதியம் மற்றும் இரவு உணவிற்கு, பட்டர் சிக்கன் , நாண் மற்றும் ஒரு மில்க் ஷேக் ஆர்டர் செய்வேன். இரண்டாவது நாள் மீண்டும் அதே உணவை ஆர்டர் செய்வேன்" என்று தெரிவித்தார்.
உடனே கேள்வி எழுப்பியர் பட்டர் பன்னீர் கூட இதேபோல் தான் இருக்கும் என்று கூற இந்த இரண்டும் ஒன்றல்ல என்று சிரித்தபடியே எம்.எஸ்.தோனி பதில் அளித்தார்.
- காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
- இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றது
துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கடந்த வாரம் பாகிஸ்தான் பயணத்தின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட எர்டோகன், "காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. தீர்மானத்தின்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும், காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
மேலும் 'நமது தேசமும் (துருக்கி), முன்பு போலவே, இன்றும் நமது காஷ்மீர் சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கின்றது' என்று தெரிவித்தார்.
எர்டோகனின் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு நேற்று செய்தியாளர்களிடம் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், " ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது குறித்து வேறு எந்த நாட்டிற்கும் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை.

வேறொரு நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கையைத் கண்டிப்பது பொருத்தமாக இருந்திருக்கும்.
பாகிஸ்தானின் இந்தக் கொள்கை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்த இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்.
டெல்லியில் உள்ள துருக்கிய தூதரிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்த இத்தகைய பொருத்தமற்ற அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்தார்.
- அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்தினார்.
- "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார்.
வனவிலங்குகள் பாதுகாப்பிற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக, இந்திய பாதுகாவலர் பூர்ணிமா தேவி பர்மன்(45), டைம் பத்திரிகையின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
மொத்தம் 13 பேரை கொண்ட இந்த கவுரவமிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண்மணி பூர்ணிமா தேவி ஆவார்.
அசாமின் காம்ரூப் பகுதியில் பிறந்த பூர்ணிமா தேவி பர்மன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவர் விலங்கியல் துறையில் சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

2007 இல் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வீட்டு உரிமையாளர் அருகில் இருந்த நாரை கூடு கட்டிய மரத்தை வெட்டுவதை பார்த்தார். இதுகுறித்து உரிமையாளரிடம் கேட்டபோது நாரை கெட்ட சகுனம் என்றும் அவை நோய்களை பரப்பும் என்றும் பதிலளித்தார். இந்த பதில் பூர்ணிமாவின் வாழ்க்கையையே மாற்றியது.
அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்திவிட்டு, வன உயிர்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அதன் முக்கியத்துவம் குறித்த முழு நேர பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

நாரைகள் பாதுகாப்பிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், உள்ளூர் சமூகங்களிடம் வன உயிடீகள் பாதுகாப்பு விழ்ப்புணர்வு ஏற்படுத்துவற்காக "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பறவைகளின் கூடு கட்டும் இடங்களைப் பாதுகாத்தல், காயமடைந்த நாரைகள், பிற வன உயிரிகளுக்கு சிகிச்சை அளித்த மறுவாழ்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல் இந்த அமைப்பு மூலம் பெண்களுக்கு தறிகள் மற்றும் நூல் நெசவு இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் துணிகளை நெசவு செய்து அவற்றை விற்கும் தொழில்முனைவோராக பல பெண்கள் மாறியுள்ளனர்.

மூத்த வனவிலங்கு உயிரியலாளராக அறியப்பட்ட பூர்ணிமா தேவி, WiNN (இயற்கை வலையமைப்பில் பெண்கள்) அமைப்பின் இந்திய பிரிவு இயக்குநராகவும், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) நாரை, ஐபிஸ் மற்றும் ஸ்பூன்பில் பறவைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
2017 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து இந்தியப் பெண்களுக்கான மிக உயர்ந்த சிவில் விருதான 'நாரி சக்தி புரஸ்கார்' விருதை பூர்ணிமா தேவி பெற்றார். அதே ஆண்டில், இங்கிலாந்து இளவரசி ராயல் அன்னே வழங்கிய கிரீன் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் விட்லி விருதையும் பூர்ணிமா தேவி பெற்றார்.

- துபாயில் நாளை இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதனால் இந்தியா உடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, "பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய அணியிடம் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு மேட்ச்-வின்னர் என்பவர் ஆட்டத்தில் அணியை வெற்றி பெற வைப்பவர். தற்போது, பாகிஸ்தானில் அப்படிப்பட்ட வீரர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.
- ‘உறவுகள் சங்கமம்’ எனும் நிகழ்வில் சமூக செயற்பட்டாளராக காளியம்மாள் பங்கேற்கிறார்.
- நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சி பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழ்களில் தனது பெயரை குறிப்பிடுமாறு காளியம்மாள் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் 3-ந்தேதி தூத்துக்குடி மணப்பாடில் நடைபெறும் 'உறவுகள் சங்கமம்' எனும் நிகழ்வில் சமூக செயற்பட்டாளராக காளியம்மாள் பங்கேற்கிறார்.
உறவுகள் சங்கமத்தில் பங்குபெறும் அரசியல் பிரபலங்களின் பெயர், கட்சியின் பெயர், பொறுப்புகளுடன் நோட்டீசில் இடம்பெற்று உள்ளது. இந்நிகழ்ச்சியில் காளியம்மாள் தன்னை சமூக செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தியுள்ளதால் அவர் நாம் தமிழர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியில் தனக்கான தனி செல்வாக்கை உருவாக்கும் முயற்சிகளை பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மேற்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், சீமான், ஒட்டிக்கொண்டிருக்கும் பிசிறு என்று காளியம்மாளை சீமான் கடுமையாக விமர்சித்த ஆடியோ வெளியானது முதல் அக்கட்சியில் இருந்து விலகி இருந்தார். இருப்பினும் ஒரு சில நிகழ்ச்சிகளில் சீமானுடன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குப்பைகள், பிளாஸ்டிக் என தனித்தனியாக போடுவதற்கு குப்பை கூடைகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
- மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்களும் மாநகராட்சியுடன் இணைந்து கடற்கரையை தூய்மையாக வைக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நடந்த தூய்மைப் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் வாழும் மக்கள் சனி, ஞாயிறுகளில் தங்கள் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கக்கூடிய நல்ல இடமாக மெரினா கடற்கரையை இயற்கை நமக்கு அமைத்து கொடுத்து இருக்கிறது. மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
* சென்னை மாநகராட்சி சார்பாக இங்கு தொடர்ந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் இங்கு வரும்போது குப்பைகள், பிளாஸ்டிக் என தனித்தனியாக போடுவதற்கு குப்பை கூடைகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மற்ற குப்பைகளை போட என்று தனியாக குப்பை கூடைகள் வைக்கப்பட்டுள்ளது.
* மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்களும் மாநகராட்சியுடன் இணைந்து கடற்கரையை தூய்மையாக வைக்க வேண்டும்.
* மெரினா கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் (Blue Flag) பெற தமிழக அரசால் முன்னெடுப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
* ப்ளூ ஃபிளாக் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதற்கு ஏற்றாற்போல தமிழக அரசால் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
- உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று CAG அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
- ரூ.13.86 கோடியை காடு வளர்ப்புக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.
உத்தரக்காண்டில் காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஐபோன்கள், மடிக்கணினிகள், குளிர்சாதன பெட்டிகள் வாங்குவதற்காகவும், கட்டிடங்களை புதுப்பிப்பதற்காகவும் பயன்படுத்தியது உட்பட பல நிதி முறைகேடுகள் CAG அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட CAG அறிக்கையில், தொழிலாளர் நல வாரியம் 2017 முதல் 2021 வரை அரசாங்கத்தின் அனுமதியின்றி ரூ.607 கோடியை செலவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வன நிலத்தை மாற்றுவதற்கான விதிகள் கூட மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
வனப்பகுதிகள் வளர்ப்புக்கான இழப்பீடு, மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம் (CAMPA) தரவுகளின்படி, 2019-22 வரை காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.13.86 கோடியை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. தனியார் ஏஜென்சிகள் மூலமாக, 188.6 ஏக்கர் வன நிலங்களை வனம் சார்ந்து அல்லாத பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டதாக 52 வழக்குகள் பதிவாகியுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
காடுகளில் நடப்படும் மரங்களில் 60-65% மரங்கள் வளரவேண்டும் என்று வன ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்திய நிலையில், உத்தர்காண்டில் 2017-22 ஆம் ஆண்டில் நடப்பட்ட மரங்களில் 33% மட்டுமே வளர்ந்துள்ளது.
CAG அறிக்கையை எடுத்துக்காட்டில் அரசாங்கத்தின் நிதியை பாஜக அரசு வீணடிக்க காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
உத்தரகண்ட் வனத்துறை அமைச்சர் சுபோத் உனியல் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர்.
- உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய அரசின் 'பிரதமர் மோடியின் கிஷான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். முன்னதாக இந்த உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.
- ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
1984 இல் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங்.
இதில் சத்வத் சிங்கின் மருமகன் பால்தேஜ் சிங்கிற்கு (32) நியூசிலாந்து நாட்டில் தற்போது 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் 2023 இல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் 21 வயது இளைஞர் ஒருவர் இறந்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் பால்தேஜ் சிங் 700 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். மேலும் மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க்கிற்கு அவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மெத்தபெட்டமைன் என்றால் என்ன?
இது "மெத்" அல்லது "படிக மெத்" என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) பாதித்து மூளையில் டோபமைனின் அளவை அதிகரித்து, ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
இது பழக்கமாக மாறி ஆபத்து விளைவிக்கக்கூடியது. இதன் பயன்பாடு, மனநல கோளாறுகள், இதயப் பிரச்சினைகள், தூக்கக் கலக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி மரணத்துக்கு வழிவகுக்கும்.
- பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
- முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் கடைசியாக 2023-ம் ஆண்டு அக்டோபரில் மோதின. அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதில் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
வங்காளதேசத்துக்கு எதிராக சுப்மன் கில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இதேபோல முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ராகுல் வங்காளதேசத்துக்கு எதிராக சிறப்பாக ஆடினார். இதனால் ரிஷப் பண்ட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றி விடப்படுவார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். ஏனென்றால் பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.
அந்த அணியில் கேப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், சல்மான் அகா, குஷ்தில் ஷா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்க கடுமையாக போராடும்.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அது மாதிரியே சாம்பியன்ஸ் டிராபி போட்டியையும் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல் தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரிஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ் தீப் சிங், வருண் சக்கர வர்த்தி
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், பகர் ஜாமன், சல்மான் அகா, தையூப் தாகீர், குஷ்தில் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது, இமாம், உல்-ஹக், உஸ்மான் கான், பஹீம் அஸ்ரப் முகமது ஹஸ்னைன்.
- 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா வென்றது.
- 2009ம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெறவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடக்கும் இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபியில் முழு திறமையை வெளிப்படுத்த போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெறவில்லை. 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா வென்றது. அதன் பிறகு 2 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
ஆகையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் டிராபியில் தனது முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர்.
- விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி அருகே உள்ள பன்னியர்குட்டி பகுதியை சேர்ந்தவர் போஸ்(55). இவரது மனைவி ரீனா (வயது48). இவர்கள் இருவரும் நேற்று முள்ளக்காணம் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு ஜீப்பில் சென்றனர்.
பின்பு இரவில் அங்கிருந்து தங்களின் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை ஆபிரகாம் (50) என்பவர் ஓட்டி வந்தார். பன்னியர்குட்டியில் உள்ள மசூதி அருகே வந்தபோது அவர்களது ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.
இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் செங்குத்தான பள்ளத்தாக்கு பகுதி ஆகும்.
இதனால் அவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் ஜீப் விழுந்து கிடந்த பகுதிக்கு சென்றனர். ஜீப்புக்குள் சிக்கி படுகாயங்களுடன் கிடந்த போஸ், ரீனா, ஆபிரகாம் ஆகிய 3 பேரையும் மீட்டு பள்ளத்தாக்கில் இருந்து மேலே கொண்டு வந்தனர். பின்பு ஆம்புலன்சு மூலமாக 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர். எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார். பல ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள அவர், 3 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒலிம்பிக் வீராங்கனையின் சகோதரி உள்பட 3 பேர் பலியான சம்பவம் இடுக்கியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.






