என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது
- சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ஆம்னில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, 2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
- தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்ப தெரிவித்து வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது.
காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தான் இந்த புதிய அணைகட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக ரூ.9 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.
மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்காமல் இருந்து வந்தாலும், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணைகட்டும் திட்டத்திற்கான முன்னேற்பு பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுவதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் மற்றும் வி. சோமன்னா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேட்டதாக டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
மேகதாது அணை விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என மத்திய அரசிடம் கேட்டேன். நாம் வலியுறுத்தலாம் அல்லது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் அல்லது அனுமதிக்க முடியாது எனக் கூட சொல்லாம். ஆனால், அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.
தாமதங்களை நாங்கள் விரும்பாததால், மேகதாது திட்டத்தை நாங்கள் முன்வைத்தோம். மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கையை மத்திய அமைச்சரிடம் கேட்டோம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.
- இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்கப்படும் என்று 2024 திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.72 ஏக்கரில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கோவை ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
- ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன் விளாசிய பேட்ஸ்மேன்.
- சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 146 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 177 ரன்கள் விளாசினார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்கள் விளாசியிருந்தார். தற்போது அதை இப்ராஹிம் ஜத்ரன் முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக இவர்தான் இலங்கைக்கு எதிராக 162 ரன்கள் அடித்திருந்தார். தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் சதம் அடித்து அதிக ஸ்கோரை பதிவு செய்ய பேட்ஸ்மேன்கள் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
கேரி கிரிஸ்டன் (188), விவ் ரிச்சர்ட்ஸ் (181), ஃபஹர் ஜமான் (180*), பென் டக்கெட் (165), ஆண்ட்ரூ ஹட்சன் (161) இதற்கு முன் பாகிஸ்தானில் அதிகபட்ச ரன்கள் அடித்துள்ளார்.
- கூலி படத்தில் பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகின.
- ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர்நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
இந்நிலையில், 'கூலி' படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
கூலி படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகின. ஆதலால் அந்த பாடல் தொடர்பான அப்டேட் தான் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகா சிவராத்தி வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
நாடு முழுவதும் விரதமிருந்து இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும் மகா சிவராத்தி வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதிலும் விரதம் இருந்து, இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும், 'மகா சிவராத்திரி' தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,சிறப்பு வாய்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் நல்வழி பிறந்து, வெற்றிகள் நம் வசமாகி, எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நிதி பங்களிப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைக்கலாம்
- தேசக் கட்டுமானத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது.
தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதி மறுவரையறை அறிக்கைக்கு தெலுங்கானா பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய அரசு செயல்படுத்த விரும்பினால், மக்கள்தொகையை அடிப்படையாக கொள்ளாமல், மாநிலங்கள் அளிக்கும் நிதியை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தட்டும். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை பொறுப்புணர்வோடு செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும்.
- பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியதாவது:-
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் மத்திய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?
பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.
ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
- வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கக்கூடாது. தொகுதி விகிதாச்சாரமா ? மக்கள் தொகை விகிதாச்சாரமா ? குழப்பமாக உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள பதில் குழப்பமாக உள்ளது. அவர் தெளிவான பதிலை அளிக்கவில்லை.
வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி. எங்களுடைய மக்களவை தொகுதி எண்ணிக்கை குறையக் கூடாது என்பது மட்டுமல்ல, எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துவிட்டு வடமாநிலங்களுக்கு மட்டும் அதிக எண்ணிக்கையில் கொடுத்தாலும் அநீதிதான்.
மத்திய அரசு கூறியதை ஏற்று மக்கள் தொகை எண்ணிக்கையை குறைத்த தமிழ்நாட்டிற்கு தரும் தண்டனையா இது. மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு அதிக எம்பி சீட்டுகள் கிடைக்கும்.
நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களுக்கு மட்டுமே அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் வளர்ச்சிப் பணிகளில் முன்னேறி இருக்கிறோம். பல்துறைகளில் தமிழ்நாடு நம்பர் இடத்தில் இருக்கிறது. இப்படி முன்னேறி இருக்கும்போது சட்டப்படி எங்களை தண்டிப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆப்கானிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்திருந்தது.
- கடைசி 10 ஓவரில் 113 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குர்பாஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த செதிக்குலா அடல் (4), ரஹமத் ஷா (4) ஆகியோரும் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினர்.
இதனால் ஆப்கானிஸ்தான் 37 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜத்ரன் உடன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஆப்கானிஸ்தான் 13.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது, இப்ராஹிம் ஜத்ரன் 65 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் 29.3 ஓவரில் 140 ரன்னாக இருக்கும்போது ஷாஹிதி 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் ஜத்ரன்- ஷாஹிதி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது.
அடுத்து ஜத்ரன் உடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. ஆப்கானிஸ்தான் 31.2 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.
இப்ராஹிம் ஜத்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 200 ரன்னைக் கடந்தது. ஓமர்சாய் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் அடித்திருந்தது.
அடுத்து இப்ராஹிம் ஜத்ரன் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். நபி அதிரடியாக விளையாட ஜத்ரன் 134 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் 43.5 ஓவரில் 250 ரன்னையும், 47.1 ஓவரில் 300 ரன்னையும் கடந்தது.
48-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு அடித்து ஜத்ரன் 166 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனைப் படைத்தார். மேலும், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.
கடைசி ஓவரை லிவிங்ஸ்டன் வீசினார். ஜத்ரன் எதிர்கொண்டார். அப்போது சத்ரன் 177 ரன்கள் எடுத்திருந்தார். சுழற்பந்து வீச்சு 4 சிக்ஸ் அடித்து இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் ஜத்ரன் ஆட்டமிழந்தார்.
4-வது பந்தில் முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவரில் ஆப்கானிஸ்தான் 113 ரன்கள் விளாசியது.
இதனால் இங்கிலாந்து அணிக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
- அங்கு டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவும் கடற்கரையில் காக்டெயில் குடிப்பதையும் காணலாம்.
- காசாவின் நடுவில் டிரம்பின் ஒரு பெரிய தங்கச் சிலையும் உள்ளது.
கடந்த 13 மாதகால போரினால் 56,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பினர்.
ஆனால் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உபகரணங்கள் இல்லாமல் மக்கள் இன்னும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். குளிர்காலம் தொடங்கிய காசாவில் மக்கள் வெப்பமின்மை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை 15 குழந்தைகள் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமல் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக நேற்று காசா மருத்துவமனைகள் நிர்வாகம் தெரிவித்தது.


இதற்கிடையே காசாவை வருங்காலத்துக்கான ரியல் எஸ்டேட் தளம் என்றும் அதை விலைக்கு வாங்கி சீரமைக்க போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிவருகிறார். அங்குள்ள லட்சோபலட்சம் மக்களை நிராதாரமாக வெளியேற்றி அரபு நாடுகளில் குடியேற்றம் செய்யும் திட்டத்தையும் டிரம்ப் முன்மொழிந்து வருகிறார். டிரம்பின் இந்த சுத்தப் படுத்துதல் திட்டம் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு வர்ணித்துள்ளார்.
இந்நிலையில் காசாவை விடுமுறை ரிசார்ட் சுற்றுலாத் தலமாக சித்தரித்து டிரம்ப் தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக ஊடகத்தில் அவரது அதிகாரபூர்வ பக்கத்தில் ஏஐ வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் இந்த வீடியோ பகிராப்பட்டுள்ளது.
வீடியோவின் தொடக்கத்தில், காசா மிகவும் பரிதாபகரமான நிலையில் காட்டப்பட்டுள்ளது, அங்கு மக்கள் பசியால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பிறகு, அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி வீடியோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகு காசா ஒரு சுற்றுலா தலமாகக் காட்டப்படுவதைக் காண்கிறோம்.
ஏஐ உருவாக்கிய வீடியோவில் காசா ஒரு 'கடற்கரை ரிசார்ட்' போல காட்டப்பட்டுள்ளது. அங்கு டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவும் கடற்கரையில் காக்டெயில் குடிப்பதையும், எலான் மஸ்க் ஹம்முஸ் சாப்பிடுவதையும் காணலாம்.
வீடியோவில், காசா பப்கள், கிளப்புகள் மற்றும் ரிசார்ட்டுகளால் நிரம்பியிருப்பதைக் காணலாம். அந்த வீடியோவில் 'டிரம்ப் காசா' என்ற பெயருடைய ஒரு ஹோட்டலும் காட்டப்பட்டுள்ளது. காசாவின் நடுவில் டிரம்பின் ஒரு பெரிய தங்கச் சிலையும் உள்ளது. ஒரு புறம் அத்தியாவசிய உதவிகள் இன்றி காசா மக்கள் தவித்து வரும் சூழலில் டிரம்ப் வெளியிட்ட இந்த வீடியோ பலரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

- மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம்.
- சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும்.
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது:-
பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நிறைய பத்திரிகையாளர் சந்திப்புகளை கடந்து வந்திருக்கிறேன். அங்கிருந்து பார்த்து கைத்தட்டி இருக்கிறேன்.
அந்த வகையில், இங்கிருந்து பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் வணக்கம். ஊடகம் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல், நடிகர், இயக்குநர் என யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு முதலில் வெளிக்கொண்டு வரும்.
அந்த வகையில், முதலில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன்.
நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன்
உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம்.
அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள்.
அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. குகன் சார், பிரபாகரன் சார் நன்றி. நோயாளியாக வந்தீர்கள், தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறீர்கள்.
டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கிய படி பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும். இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு ஒளிப்பதிவாளர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தவர் ஒலி வடிவமைப்பாளர் கெவின், ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக ஒலி வடிவமைப்பாளரை தேடுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த வகையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பரிந்துரையில் எங்களுக்கு கிடைத்தவர் கெவின்.
புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






