என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஆப்கானிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்திருந்தது.
    • கடைசி 10 ஓவரில் 113 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குர்பாஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த செதிக்குலா அடல் (4), ரஹமத் ஷா (4) ஆகியோரும் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் 37 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜத்ரன் உடன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஆப்கானிஸ்தான் 13.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது, இப்ராஹிம் ஜத்ரன் 65 பந்தில் அரைசதம் அடித்தார்.

    ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் 29.3 ஓவரில் 140 ரன்னாக இருக்கும்போது ஷாஹிதி 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் ஜத்ரன்- ஷாஹிதி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து ஜத்ரன் உடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. ஆப்கானிஸ்தான் 31.2 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.

    இப்ராஹிம் ஜத்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 200 ரன்னைக் கடந்தது. ஓமர்சாய் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் அடித்திருந்தது.

    அடுத்து இப்ராஹிம் ஜத்ரன் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். நபி அதிரடியாக விளையாட ஜத்ரன் 134 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் 43.5 ஓவரில் 250 ரன்னையும், 47.1 ஓவரில் 300 ரன்னையும் கடந்தது.

    48-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு அடித்து ஜத்ரன் 166 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனைப் படைத்தார். மேலும், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.

    கடைசி ஓவரை லிவிங்ஸ்டன் வீசினார். ஜத்ரன் எதிர்கொண்டார். அப்போது சத்ரன் 177 ரன்கள் எடுத்திருந்தார். சுழற்பந்து வீச்சு 4 சிக்ஸ் அடித்து இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் ஜத்ரன் ஆட்டமிழந்தார்.

    4-வது பந்தில் முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவரில் ஆப்கானிஸ்தான் 113 ரன்கள் விளாசியது.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    • அங்கு டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவும் கடற்கரையில் காக்டெயில் குடிப்பதையும் காணலாம்.
    • காசாவின் நடுவில் டிரம்பின் ஒரு பெரிய தங்கச் சிலையும் உள்ளது.

    கடந்த 13 மாதகால போரினால் 56,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பினர்.

    ஆனால் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உபகரணங்கள் இல்லாமல் மக்கள் இன்னும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். குளிர்காலம் தொடங்கிய காசாவில் மக்கள் வெப்பமின்மை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை 15 குழந்தைகள் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமல் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக நேற்று காசா மருத்துவமனைகள் நிர்வாகம் தெரிவித்தது.

     

     

    இதற்கிடையே காசாவை வருங்காலத்துக்கான ரியல் எஸ்டேட் தளம் என்றும் அதை விலைக்கு வாங்கி சீரமைக்க போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிவருகிறார். அங்குள்ள லட்சோபலட்சம் மக்களை நிராதாரமாக வெளியேற்றி அரபு நாடுகளில் குடியேற்றம் செய்யும் திட்டத்தையும் டிரம்ப் முன்மொழிந்து வருகிறார். டிரம்பின் இந்த சுத்தப் படுத்துதல் திட்டம் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு வர்ணித்துள்ளார்.

    இந்நிலையில் காசாவை விடுமுறை ரிசார்ட் சுற்றுலாத் தலமாக சித்தரித்து டிரம்ப் தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக ஊடகத்தில் அவரது அதிகாரபூர்வ பக்கத்தில் ஏஐ வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் இந்த வீடியோ பகிராப்பட்டுள்ளது. 

    வீடியோவின் தொடக்கத்தில், காசா மிகவும் பரிதாபகரமான நிலையில் காட்டப்பட்டுள்ளது, அங்கு மக்கள் பசியால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பிறகு, அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி வீடியோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகு காசா ஒரு சுற்றுலா தலமாகக் காட்டப்படுவதைக் காண்கிறோம்.

    ஏஐ உருவாக்கிய வீடியோவில் காசா ஒரு 'கடற்கரை ரிசார்ட்' போல காட்டப்பட்டுள்ளது. அங்கு டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவும் கடற்கரையில் காக்டெயில் குடிப்பதையும், எலான் மஸ்க் ஹம்முஸ் சாப்பிடுவதையும் காணலாம்.

    வீடியோவில், காசா பப்கள், கிளப்புகள் மற்றும் ரிசார்ட்டுகளால் நிரம்பியிருப்பதைக் காணலாம். அந்த வீடியோவில் 'டிரம்ப் காசா' என்ற பெயருடைய ஒரு ஹோட்டலும் காட்டப்பட்டுள்ளது. காசாவின் நடுவில் டிரம்பின் ஒரு பெரிய தங்கச் சிலையும் உள்ளது. ஒரு புறம் அத்தியாவசிய உதவிகள் இன்றி காசா மக்கள் தவித்து வரும் சூழலில் டிரம்ப் வெளியிட்ட இந்த வீடியோ பலரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

     

    • மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம்.
    • சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும்.

    தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது.

    இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது:-

    பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நிறைய பத்திரிகையாளர் சந்திப்புகளை கடந்து வந்திருக்கிறேன். அங்கிருந்து பார்த்து கைத்தட்டி இருக்கிறேன்.

    அந்த வகையில், இங்கிருந்து பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் வணக்கம். ஊடகம் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல், நடிகர், இயக்குநர் என யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு முதலில் வெளிக்கொண்டு வரும்.

    அந்த வகையில், முதலில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன்.

    நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன்

    உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம்.

    அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள்.

    அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள்.

    அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. குகன் சார், பிரபாகரன் சார் நன்றி. நோயாளியாக வந்தீர்கள், தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறீர்கள்.

    டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கிய படி பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும். இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு ஒளிப்பதிவாளர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தவர் ஒலி வடிவமைப்பாளர் கெவின், ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக ஒலி வடிவமைப்பாளரை தேடுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த வகையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பரிந்துரையில் எங்களுக்கு கிடைத்தவர் கெவின்.

    புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
    • அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து வருகிற 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மார்ச் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் நாம் தமிழர் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன். தொகுதி மறுவரையறை தொடர்பாக 2003ம் ஆண்டே அறிக்கை விட்டிருக்கேன். இந்த விவகாரத்தில் தனித்துதான் போராடுவோம்" என்று தெரிவித்தார். 

    • மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
    • பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுவது கடுமையானது என்றும், ஆறு ஆண்டுகள் தடை போதுமானது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், தகுதி நீக்க காலத்தை முடிவு செய்வது முற்றிலும் பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1) இன் கீழ், அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றபின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலம் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

     

    • ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் பயணிகள் ரெயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது.
    • விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

    மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர் என்று பொய் பேசுவதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய ரெயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, இன்று திருச்சி விமானநிலையத்தில் பேசும் போது, 'மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியுள்ளார். இதுபோன்று பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்.

    கும்பமேளாவிற்கு ரெயில் சென்று வந்தவர்கள் சொல்லொண்ணா சிரமத்தை அனுபவித்தார்கள். ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் பயணிகள் ரெயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது.

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பிரக்யாராஜுக்கு சென்று ரெயிலில் மீண்டு வரமுடியாத நிலையில் அவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

    தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்து, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது ரெயில்வே அமைச்சகம்.

    நிலை இவ்வாறு இருக்கையில் பயணிகள் சிரமம் இன்றி கும்பமேளாவிற்கு சென்று வந்தார்கள் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பிறக்கும் போதே வயிற்றில் 2 கால்கள் வளர்ந்துள்ளது.
    • இதனால் சிறுவனை பள்ளிக்கூடத்தில் பலர் கேலி செய்துள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், நான்கு கால்களுடன் பிறந்த 17 வயது சிறுவனின் தேவையற்ற 2 கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்தின் பாலியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பிறக்கும் போதே வயிற்றில் 2 கால்கள் வளர்ந்துள்ளது. இதனால் சிறுவனை பள்ளிக்கூடத்தில் பலர் கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் படிப்பை நிறுத்தியுள்ளான்.

    இந்நிலையில், சிறுவனின் உடலில் தேவையின்றி வளர்ந்துள்ள 2 கால்களை எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறையின் கூடுதல் பேராசிரியர் டாக்டர் அசுரி கிருஷ்ணா, "இரட்டையர்கள் கருத்தரிக்குபோது, அவர்களில் ஒருவரின் உடல் வளர்ச்சியடையாமல், அதன் உறுப்புகள் மற்ற குழந்தையின் உடலுடன் இணைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது" எபின்ரு தெரிவித்தார்.

    உலகம் முழுவதும் நான்கு கால்களுடன் 42 பேர் மட்டுமே பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளது
    • பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.

    போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த, ஈரமான சூழல் நிலவுகிறது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறது.

    காசா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. காசாவின் சுகாதார அதிகார சபையின் இயக்குநர் ஜெனரல் முனீர் அல்-பர்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசுகையில், கடுமையான குளிரால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

    குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளது என்று கூறினார். மருத்துவ வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம், சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளாதால், சுகாதார நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

     

     

    மருத்துவமனைகள் [குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனைகள்] மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

    காசா நகரத்தில் உள்ள 'நோயாளிகளின் நண்பர்கள்' என்ற தொண்டு மருத்துவமனையின் இயக்குனர் சையத் சலா பேசுகையில், கடந்த சில மணிநேரங்களில் கடுமையான குளிர் மற்றும் தங்குமிடங்களில் வெப்பமின்மை காரணமாக மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறினார்.

    காசாவில் சமீபத்திய நாட்களில் பலத்த காற்று, கனமழை மற்றும் மிகவும் குளிரான வானிலை நிலவுகிறது. மோசமான வானிலை நூற்றுக்கணக்கான கூடாரங்களை அழித்துள்ளது. பல அகதி முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கஷ்டங்களை அதிகரித்துள்ளது.

     

    காசாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.

    மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக 7,700 குழந்தைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியை  பெற முடியவில்லை அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

     

    • மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
    • ஐ.பி.எல்.ல் தோனி தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பைகளை வென்றது.

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடக்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி ஆவார். 2 உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக் கொடுத்தார்.

    ஐ.பி.எல்.லில் அவர் தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பையை வென்றது.

    இந்நிலையில், மார்ச் 22ம் தேதி 2025 ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

    மார்ச் 23ம் தேதி சென்னை- மும்பை அணிகள் மோத உள்ள நிலையில் பயிற்சியை தொடங்குவதற்காக தோனி சென்னை வந்துள்ளார்.

    இதனால், தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • பாஜக-வை சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • தற்போது அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த வருடம் இறுதியில் பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் ஐக்கிய ஜனதா தளம் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு 2024-2025 மத்திய பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பாஜக-வை சேர்ந்த பலருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் வகையில் நிதிஷ் குமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். தற்போது பாஜக-வைச் சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று ஜிபேஷ் குமார், சஞ்சய் சரயோகி, சுனில் குமார், ராஜூ குமார் சிங், மோதி லால் பிரசாத், விஜய் குமார் மண்டல், கிருஷ்ண குமார் மந்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    பாஜக-வில் ஒருவருக்கு ஒரு பதவி என கொள்கை இருப்பதால் பீகார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்தார்.

    • டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார்.
    • பஞ்சாப் மாநில முதல்வராக வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    ஆனால், இது வழக்கமான கூட்டம். அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்கும் திட்டம் ஏதும் இல்லை என ஆம் அத்மி கட்சி விளக்கம் அளித்தது. இதனால் அந்த பரபரப்பு அடங்கியது.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் புதிய நகர்வு, தற்போது கெஜ்ரிவால் பாராளுமன்ற மாநிலங்களை எம்.பி. ஆகிறாரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பஞசாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.-வாக இருந்த குர்ப்ரீத் கோகி கடந்த மாதம் காலமானார். இதனால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில்தான் லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் சஞ்சீவ் அரோராவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி.

    இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். அவருக்கு பதிலாக கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின.

    இந்த நிலையில் "அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்கு செல்லப்போவதில்லை. முன்னதாக கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு செய்திகளும் முற்றிலும் தவறானவை.

    அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவருடைய தேவை மிக அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் எந்த ஒரு இடத்திற்கும் மட்டுப்படுத்தப்படவில்லை" என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.
    • ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.

    ஜார்க்கண்டில் மகா சிவராத்திரி விழாவுக்கான அலங்கார பணிகளை மேற்கொள்வதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது.

    இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இச்சாக் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.

    மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.

    ஆனால் மற்றொரு சமூகத்தினர் அதை எதிர்த்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

    இது கலவரமாக மாறி கடைகளுக்கு தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்களும் நடந்தன. இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், டெம்போ மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கடையையும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

    தகவல் கிடைத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக ஐபிஎஸ் ஸ்ருதி அகர்வால் தெரிவித்தார். மக்கள் அமைதியைக் காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

    ×