என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார்.
- சம்பவம் குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் வெளியில் உள்ள அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் சித்தப்பா உறவு முறையான தொழிலாளி சுதாகர் (வயது 45) என்பவர் அங்கு வந்தார்.
அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். இதனால் சுதாகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமி சைல்டுலைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் சுதாகர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சுதாகரை கைது செய்த போலீசார் தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சுதாகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான சுதாகர் தமிழக வெற்றிக்கழகத்தில் அரூர் பகுதி நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிறுமிக்கு தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மக்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள்.
- பல்வேறு வரி உயர்வுகளை விதித்த இந்த தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
மதுரை:
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கலைஞர் இருந்த காலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க.விற்காக குரல் கொடுத்தவர் வைகை புயல் நடிகர் வடிவேலு. அப்போது தி.மு.க. வெற்றி பெறவில்லை. வெள்ளைக் கொடி ஏந்திய புலிகேசி வடிவேலு, தி.மு.க. பக்கம் போய்விட்டார்.
ஒருபுறம் வடிவேலு, மறுபுறம் குஷ்பு என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. மீண்டும் நடிகர் வடிவேலு மேடை ஏறிய தி.மு.க. ஊத்திக்கப்போகிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை.
ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாருன்னு பாடல் போட்டார்கள். ஆனால் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கூட அந்தப் பாட்டை போடவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு என பல்வேறு வரி உயர்வுகளை விதித்த இந்த தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதை மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் வடிவேலு குறித்து செல்லூர் ராஜூ பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் வடிவேலு, கலைஞரும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர். அதிலும் குறிப்பாக சொன்னதை விட சொல்லாதது ஏராளமானவற்றை செய்துகொடுத்துள்ளனர் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் யானை மலை அடிவாரத்தில் குடை வரை கோவிலாக அமைந்துள்ள நரசிங்கம் பெருமாள் கோவிலில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளரும், நடிகரும், தனியார் அறக்கட்டளை தலைருமான சௌந்தரராஜா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரிலும், அதன் தலைவரும் நடிகருமான விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட்டார். மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது இதே மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்றும், வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய அவர் கூறியதாவது:-
மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து மண்ணுக்கு தேவையான ஒரு ஆட்சியை கொடுப்பதற்கான வழியை தமிழக வெற்றிக் தழகத்தின் தலைவர் விஜய் கையில் எடுத்திருக்கிறார். பேசும் பொருள் ஆனால் தான் அது கழகம், கலகம் வந்தால்தான் தீர்வு கிடைக்கும். எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கூறிய குறைகளை ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை நிறைவேற்றவில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், நேர்மையாக அரசியல் செய்ய விரும்புபவர்கள் விஜய்யை விரும்புகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது. கூட்டணி கட்சியினர் சீட்டுக்காக காத்திருக்கிறார்கள், சீட்டு கிடைக்கவில்லை என்றால் நல்லவர்கள் எங்களை தேடி வருவார்கள். அரசியலை பொறுத்தவரை நேர்மையான விமர்சனத்திற்கு பதில் சொல்லலாம் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்கள். தவறு செய்பவர்களை சுட்டிக்காட்டுவதற்காக பாசிசமும் பாயாசமும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டிய காரணம் என்ன? அச்சுறுத்துவீர்கள், அவமானப்படுத்துவீர்கள், ஆட்சி அதிகாரத்தை வைத்து பயமுறுத்துவீர்கள். இதெல்லாம் விஜய் அண்ணனிடம் பலிக்காது.
அவரவர்கள் அவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு அடுத்தவர்களை வீழ்த்துவதற்கான வேலையை பார்க்கிறார்கள். இந்த கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா, அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளே இல்லையா? மக்களுக்கான பணியை செய்தால் உங்களை விமர்சனம் வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க., அ.தி.மு.க. என மக்களுக்கு நல்லது செய்தால் ஆட்சி பிடிப்பதற்கு எதற்கு போட்டி வருகிறது? மக்கள் யாராவது நிம்மதியாக இருக்கிறார்களா?
மதுரையில் ஒத்தக்கடை நரசிங்கம்பட்டியில் பாறைகள் உடைக்கப்பட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டது, அதற்கு தீர்வு கிடைத்ததா? தீர்க்க வேண்டிய, திருத்தப்பட வேண்டிய விஷயம் தமிழ்நாட்டில் நிறைய இருக்கு. கூட்டணி என்பது வியூகம்தான், அவரவர் கருத்தை கூறுவார்கள். இது அனைத்திற்கும் இப்போது பதில் சொல்வது பொருத்தமாகாது.
எத்தனை ஆண்டு காலமாக என் தாய் ஒரே கட்சிக்குதான் சாகும் வரை வாக்களிப்பேன் எனக் கூறிவந்தார். தற்போது முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதாக கூறியிருக்கிறார். இது ஒரு சான்று, இதேபோல் ஓராயிரம் சான்று உள்ளது. தமிழக வெற்றி கழகத்தை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமைபெற வேண்டும்.
- எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் சட்டம் & விதிகள் 2024! நடைமுறைப்படுத்துதல்,கண்காணித்தல், வலுப்படுத்துதல் சமூக அமைப்புகள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
* 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை.
* அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றி கொள்வதே வாய்ப்பாக உள்ளது.
* அதிகாரிகள் நல்ல பதிலை கூறினாலும் ஒன்றும் நடப்பதில்லை.
* விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடியேற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டம் பேசுகின்றனர்.
* அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமைபெற வேண்டும்.
* எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது.
* அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும் நடைமுறைக்கு வந்தாலே இந்தியா இந்நேரம் ஒரு சமத்துவம் உள்ள தேசமாக எப்போதோ பரிணாமம் அடைந்திருக்கும். ஆனால் அதுவே இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியது.
- பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கும்போது, அது நமது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளையும் நமக்கு நினைவூட்டுகிறது. ரம்ஜான் முபாரக்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இன்று அதிகாலை 4 மணிக்கு இஸ்லாமியர்கள் உணவு உட்கொண்டு ரமலான் நோன்பை தொடங்கினர்.
- எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தின.
- விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
புளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோ ரிசார்ட்டுக்கு மேலே மூன்று பயணிகள் விமானங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது, இதனால் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு துறையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் சோதனை பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது குறித்து டெய்லி மெயில் வெளியிட்டுள்ள தகவல்களில், எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தி, மூன்று பயணிகள் விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த மூன்று விமானங்களும் பாம் பீச் வான்வெளியில் ஏன் பறந்தன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
பாம் பீச் போஸ்ட் எனும் உள்ளூர் வலைதளம் வெளியிட்டுள்ள தகவல்களில், மார்-எ-லாகோவிற்கு டிரம்ப் வந்திருந்த போது அந்த இடத்தின் மீது மூன்று முறை வான்வெளி விதிமீறல்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரண்டு முறையும், பிப்ரவரி 17-ம் தேதி ஒருமுறையும் விதிமீறல்கள் நடந்துள்ளன.
வான்வெளி விதிமீறல்களுக்கு எஃப்-16 போர் விமானங்கள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 18-ம் தேதி பாம் பீச்சிற்குள் மற்றொரு பயணிகள் விமானம் பறந்ததாகவும் கூறப்படுகிறது. போர் விமானங்கள் "பாதுகாப்புக்கு உட்பட்டு பயன்படுத்தப்படும். இவை விரைவாக, தரையில் உள்ள மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது."
எஃப்-16 ரக போர் விமானங்கள் விமானத்தை வான்வெளியில் இருந்து வெளியேற்றிய பிறகு டிரம்ப் தனது ரிசார்ட்டை சென்றடைந்தார்.
- மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாக இருக்கிறார்கள்
- தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க.வைத் தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்காது.
மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாகவே இருக்கிறர்கள்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.
கடந்த வாரம் 25.02.2025 தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர், தொகுதி மறுசீரமைப்பில் எந்த நிலைப்பாட்டையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்படி இருந்தாலும் கூட தமிழகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என்றும் தெளிவுப்பட கூறியிருக்கிறார்கள்.
தனிழகத்தில் தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அதையெல்லாம் மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே இக்கூட்டம் நடைபெறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
எனவே வருகிற 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல.
- பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றால் அவரை யார் என்றே தெரியாது.
எழும்பூர்:
சென்னை எழும்பூரில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போதையை ஒழித்துவிடுவேன் என அன்புமணி பேசியது குறித்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
பா.ம.க.வை கட்டுப்படுத்துங்கள், அப்பாவும், மகனும் மேடையிலேயே சண்டை போட்டுக்கொள்கின்றனர். சட்டவிரோத செயல்களை செய்பவர்களை ஆதரிக்கும் கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை.
தி.மு.க. கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. இதுகொள்கை சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி மேன்மேலும் உறுதியாக இருப்பதை தான் கடந்த 28-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சி எடுத்துக்காட்டு. பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றால் அவரை யார் என்றே தெரியாது என்றார்.
- தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது.
- பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது.
திருத்தணி:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆர்.கே.பேட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருத்தணிக்கு வந்தார். திருத்தணி ரெயில் நிலையம் அருகே கட்சிக்கொடி ஏற்றி வைத்து அவர் பேசும்போது,
'தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது. பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது. 5 வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை, 8 பேர் சேர்ந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களால் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபவடுபவர்களை வேறு மாதிரி செய்திருப்பேன். இந்த மிருகங்களை வெட்டிடுவோம். அப்போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பயம் இருக்கும் என தெரிவித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார்.
- திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்று, நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இதை மீறி இந்த வழிதடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
- இன்று சுபமுகூர்த்த தினம்.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-18 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 11.58 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.13 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை. கோவை கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருப்பணி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தரு ளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், அன்னை ஸ்ரீ காந்தியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதிவர்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-உவகை
மிதுனம்-லாபம்
கடகம்-வரவு
சிம்மம்-போட்டி
கன்னி-மேன்மை
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-மறதி
தனுசு- பாராட்டு
மகரம்-கவனம்
கும்பம்-ஆதாயம்
மீனம்-ஊக்கம்






