என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
- நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் பேசிய தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் "தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்" என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
உலகின் மிக மூத்ததொல்குடி நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களான நம்மை பார்த்து நாகரிகமில்லாதவர்கள் என்று தரம் தாழ்ந்து நாடாளுமன்றத்திலேயே தமது எரிச்சலைக் கக்கியிருக்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்.
திராவிட நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பும் அவருக்கு தெரியாது. நம் நாகரிகம் பற்றிய வரலாறு தெரியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, நம்முடைய கடந்த ஒரு நூற்றாண்டு கால சமூக - அரசியல் வரலாற்றை தெரிந்திருந்தாலும் இதுபோன்று எல்லைமீறி அவர் பேசியிருக்க மாட்டார்.
டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முறைதவறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொழியோடும் கல்வியோடும் உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்.
கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்.
இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.
- சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
- இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார்.
சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இவர் இப்படத்தில் காட் ஆஃப் லவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டிராகன். இத்திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டடித்துள்ளது.
டிராகன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து இந்தி மொழியிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் STR 51 படத்தை பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார் " படப்பிடிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும். திரைப்படம் கண்டிப்பாக அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும். டிராகன் பட வெற்றியை கொண்டாடிவிட்டு அந்த படத்தின் வேலைகளை தொடங்கவுள்ளேன்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.
கரூரில் பட்டப்பகதில் அரசு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் மாணவியை கடத்தியுள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கல்லூரி மாணவியை கடத்திய ஆம்னி கார் கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- 2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
- அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 58 மாதங்களில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்தது ஓரளவிற்கு உண்மைதான் என நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ்-பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் என்.சி.பி. எம்.எல்.சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் அமராவதி டிவிசனில் விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, கடந்த வருடம் மரத்வாடா டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும், அமராவதி டிவிசனில் 1,069 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 707 பேர் உதவி பெற தகுதியுடையவர்கள், 433 பேர் உதவி பெற்றவர்கள்.
பீட் பகுதியில் 167 பேர் உதவி பெற தகுதியானர்கள். 108 பேர் உதவி பெற்றவர்கள்.
அமராவதி டிவிசனில் 441 பேர் உதவி பெற தகுதியானவர்கள். 332 உதவிகள் பெற்றவர்கள்.
ஜால்னா மாவட்டத்தில் மந்தா தாலுகாவில் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரை 13 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க உறுதிபூண்டுள்ளது என அமை்சசர் தெரிவித்துள்ளார்.
- தி.மு.க.வும் பா.ஜ.கவும் எல்லாமுறையிலும் மறைமுகக் கேளிர்' என்பது.
- 2026ல் ஒரு நல்ல முடிவு எங்கள் கழகத் தலைவர் தலைமையிலான நல்லரசு வாயிலாக கிடைக்கத்தான் போகிறது.
மதநல்லிணக்கனம் தொடர்பாக திமுக அரசின் சாயம் வெளுக்கிறது என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் கட்சி அல்லது அமைப்பு நடத்தினாலும், அது கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று.
மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மத நல்லிணக்கப் பேரணியை மதுரையில் நடத்த அக்கூட்டமைப்பினர் அனுமதி கேட்டும். ஆளும் தி.மு.க அரசு அனுமதி மறுத்திருக்கிறது.
இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திரு தொல். திருமாவளவன் அவர்களே நேற்று மதுரையில் நடைபெற்ற அக்கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் வீரகதியோடு பேசி உள்ளார்.
மதநல்லிணக்கப் பேரணி நடத்த அனுமதி மறுந்தது என்பது. மதநல்லிணக்கம் தொடர்பாக இரட்டை வேடம் போடும் தி.மு.க. வின் கபடநாடகத்தை தோலுரித்துக் காட்டுகிறது. நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம் என்பது தி.மு.க. அரசுக்கே வெளிச்சம்.
மத நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படும். ஆனாம், பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்கு மட்டும் அனைத்து அனுமதியும் அளிப்பது என்பது இந்த தி.மு.க. அரசு தன் மறைமுகக் கூட்டணியை உறுதி செய்வதைத்தாளே காட்டுகிறது.
வாய்வித்தையில் மட்டும் தமிழ்நாடு உரிமைகள், மதச்சார்பின்மை என்று கபடநாடகம் ஆடும் இந்த தி.மு.க. அரசால், பா.ஜ.க மீதானத் தன்னுடைய மறைமுகப் பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை. பூனைக்குட்டி வெளியே வரந்தான் செய்கிறது.
தி.மு.க.வும் பா.ஜ.கவும் எல்லாமுறையிலும் மறைமுகக் கேளிர்' என்பது. இதுபோன்ற செயல்களால் உறுதியாகவும் செய்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி உள்ளது. இதை அவர்களின் கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்று. தமிழக மக்களும் உணர்ந்தே வருகின்றனர்.
எல்லாவற்றிற்கும் சேர்த்து 2026ல் ஒரு நல்ல முடிவு எங்கள் கழகத் தலைவர் தலைமையிலான நல்லரசு வாயிலாக கிடைக்கத்தான் போகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுவேந்து அதிகாரிக்கு நெருங்கிய உதவியாளராக இருந்தவர்.
- ஹல்தியா தொகுதி பெண் எம்.எல்.ஏ. கட்சி தாவியதாக பாஜக-வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு நெருங்கிய உதவியாளரான ஹல்தியா தொகுதி பெண் எம்.எல்.ஏ. தபாசி மொண்டல் பாஜக-வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார்.
மொண்டலின் முடிவு, சுவேந்து அதிகாரியின் கோட்டையான ஹல்தியா நகர் அமைந்துள்ள புர்பா மெதினிபூர் பாஜக அமைப்புக்கு மட்டுமல்ல, அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கட்சிக்கும் இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகததில் மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் முன்னிலையில் தபாசி மொண்டல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
முதலமைச்சரின் வளர்ச்சி முயற்சியில் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்துள்ளேன் என தபாசி மொண்டல் தெரிவித்துள்ளார்.
2016-ல் காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு ஹல்தியா தொகுதியில் வெற்றி பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சுவேந்து அதிகாரி விலகி 2021 தேர்தலின்போது பாஜக-வில் இணைந்தபோது, இவரும் பாஜக கட்சியில் இணைந்தார்.
- ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
- புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
18-வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ந் தேதி முடிகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்த தொடர் 13 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் சில பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியதாவது:-
இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வாக ஐபிஎல் இருப்பதால், புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
அதேபோல், மது அல்லது புகையிலை ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுக தயாரிப்புகளை விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளர்களும் விளம்பரப்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது நீல நிற சூரியன் திரைப்படம்.
- இப்படத்தை சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நடித்து மற்றும் தயாரித்தும் உள்ளார்.
சம்யுக்தா விஜயன் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது நீல நிற சூரியன் திரைப்படம். இப்படம் திருநங்கை சமூதாயத்தின் வலிகளையும் வேதனைகளையும் பற்றி பேசுன் திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நடித்து மற்றும் தயாரித்தும் உள்ளார். படத்தின் இசை, படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவை ஸ்டீவ் பெஞ்சமின் மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படம் தற்பொழுது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேச்சு.
- பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க முன்வந்ததாக பிரதான் கூறியது தவறானது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கு திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது திமுக எம்.பி கனிமொழி உரிமை மீறில் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேச்சு என புகார் அளித்துள்ளார்.
அதில், பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க முன்வந்ததாக பிரதான் கூறியது தவறானது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுளளது. தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சபாநாயகரிடம் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார்.
- மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
- 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24 வயது).
மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை பிரனாய் குமார் காதலித்து வந்தார்.
10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால் பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனவே அவரின் எதிர்ப்பை ஜனவரி 30, 2018 அன்று ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் பிரனாய் - அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த மாருதி ராவ், பிரனாயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பல முறை பிரானாய் மீது தாக்குதல் முயற்சிகளும் நடந்துள்ளன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பான கொலை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷ்ரவன் ராவும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

மற்றொரு குற்றவாளி மூலம் தொழில்முறை கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு ரூ.1 கோடி கொடுத்து கொலை சதித்திட்டம் தீட்டியதாக மாருதி ராவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரனாயின் தந்தை பி. பாலசாமி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மாருதி ராவ், அவரின் தம்பி ஷ்ரவன் ராவ், அவரின் கார் ஓட்டுநர் சிவா, கொலையாளி சுபாஷ் குமார் சர்மா உள்ளிட்ட எட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொலைக்கு மூளையாக செயல்பட்ட அம்ருதாவின் தந்தை, மாருதி ராவ், 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு தெலுங்கானாவின் நல்கொண்டா நகர எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) இந்த ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற குற்றவாளிகள் அஸ்கர் அலி, அப்துல் பாரி, எம்.ஏ. கரீம், மாருதி ராவின் சகோதரர் ஷ்ரவன் குமார் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர் சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

- இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 74,332.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 74,474.98 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தொழில்துறை, ஆயில் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் சரிவு, வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. 30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் 22 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 8 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தக முடிவில் 22,552.50 ஆக இருந்தது.

இன்று காலை 22,521.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக நிஃப்டி 22,429.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக நிஃப்டி 22,675.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 92.20 புள்ளிகள் சரிந்து 22,460.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு 38 பைசா குறைந்து 87.33 ரூபாயாக உள்ளது.
- தமிழ்நாடு கோவில்களில் கூட, சமஸ்கிருதத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
- ஆங்கிலேயர்களின் மொழியை செயல்படுத்துவதில் மட்டுமே திமுகவினர் ஆர்வம் காட்டுகிறார்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "தமிழை விட சமஸ்கிருதம்தான் பழமையான மொழி" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மக்களைத் தூண்டிவிட மட்டுமே திமுக விரும்புகிறது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள், ஆனால் சமஸ்கிருதம் அதைவிட பழமையான மொழி.
தமிழ்நாடு கோவில்களில் கூட, சமஸ்கிருதத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடத்தை திமுக எதிர்க்கிறது. அவர்கள் ஆங்கிலேயர்களின் மொழியை செயல்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று தெரிவித்தார்.






