என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suvendu Adhikari"

    • எங்கெல்லாம் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனரோ, அங்கெல்லாம் அவர்கள் வாக்களிக்க மறுக்கப்படுகிறார்கள்.
    • காவல்துறையினர் ஆளுங்கட்சி தொண்டர்கள் போன்று செயல்படுகிறார்கள்.

    மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நடத்தப்பட வேண்டும் என பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

    முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை காரணமாக சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது எனுவும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுவேந்து அதிகாரி கூறுகையில் "முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சுதி, துலியான் ஜாங்கிபூர், ஷாம்ஷெர்கஞ்ச் போன்ற பகுதியில் இன்னும் பதற்றமான நிலை நீடிப்பது, மக்களை காப்பாற்றுதல் மற்றும் அமைதியை நிலைநாட்டுதல் திறனை மாநில அரசு இழந்து விட்டது என்பதை காட்டுகிறது.

    எங்கெல்லாம் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனரோ, அங்கெல்லாம் அவர்கள் வாக்களிக்க மறுக்கப்படுகிறார்கள். காவல்துறையினர் ஆளுங்கட்சி தொண்டர்கள் போன்று செயல்படுகிறார்கள். சுதந்திரமான, வெளிப்படையான தேர்தலுக்கு, சட்டசபை தேர்தல் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

    சமீபத்தில் நடைபெற்ற வன்முறைக்கு பின்னால், jihadist சக்திகள் உள்ளது. இந்தக் குழுக்கள் வெறித்தனமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. நாங்கள் அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், ஆனால் ஒரு சமமான போட்டி இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

    • ஏப்ரல் 6-ந்தேதி ராம நவமி பேரணி நடத்தப்படும்.
    • ஒரு கோடி மக்கள் பேரணியில் கலந்து கொள்வார்கள்.

    மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இந்துக்கள் பங்கேற்கும 2 ஆயிரம் ராம நவமி பேரணிகள் ஏப்ரல் 6-ந்தேதி நடத்தப்படும் என அம்மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடி இந்துக்கள் 2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்வார்கள்.

    இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை. இந்த வருட இறுதிக்கும் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அதிகாரி போன்ற பாஜக தலைவர்களின் எந்த வார்த்தை ஜாலங்களாலும் மாநில மக்கள் மயங்க மாட்டார்கள். மத சடங்குகளை கடைபிடிக்கவும், பண்டிகைகளை அவர்கள் விரும்பும் வழியில் கொண்டாடவும் அனைவருக்கும் உரிமை உண்டு என மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

    • பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து தி.காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்- சுவேந்து அதிகாரி
    • இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது.

    மேற்கு வங்கமாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி பேசும்போது "பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து திரணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ம்தா பானர்ஜி கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    நீங்கள் (பாஜக) இறக்குமதி செயத இந்து தர்மத்தை வேதங்கள் மற்றும் எங்களுடைய ஞானிகள் ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் குடியுரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்?. இது மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை. நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. தயவுசெய்து இந்து என்ற கார்டை வைத்து விளையாட வேண்டாம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    • பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.
    • மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.

    இதில் மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது EVM தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக சுவேந்து அதிகாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு சுவேந்தி அதிகாரி "EVM குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற்றபோது EVM சரியானது. பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் வகையில சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

    • எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற புதிய முழக்கத்தை கட்சி ஏற்படுத்த வேண்டும்.
    • நாங்கள் அனைவருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பதை பயன்படுத்தினோம்.

    மக்களவை தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாத காரணத்தினால் பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது. கட்சியின் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) பிரிவை நீக்க வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது மேற்கு வங்காள மாநில பாஜக கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற புதிய முழக்கத்தை கட்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    நான் தேசியஅளவிலான முஸ்லிம்களுக்காக பேசினேன். நாங்கள் அனைவருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பதை பயன்படுத்தினோம். ஆனால், இனிமேல் அவ்வாறு நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் எங்களுடன் இருப்பவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சிறுபான்மையினர் பிரிவு தேவையில்லை எனத் தெரிவித்தார்.

    இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. தேசத்திற்காகவும், மேற்கு வங்காள மாநில நலத்துடன் இருப்பவர்களுடன் நாம் இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எங்களுடன் நிற்காதவர்கள், தேசம் மற்றும் மேற்கு வங்காள நலனுக்கு எதிராக செயல்படுபவர்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். மேலும், மம்தா பானர்ஜியைப் போல மக்களைப் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரித்து பார்க்கக் கூடாது. இந்தியர்களாக பார்க்க வேண்டும். பிரதமரின் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் என்பதில் என்னை உள்ளடக்கியுள்ளேன் என்றார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வாக்காளர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவார்கள்.

    2014-ல் சப்கா சாத் சப்கா விகாஸ் என இருந்து பாஜக முழக்கம், 2019-ல் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் ஆக இருந்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஜிஹாதி குண்டர்களால் பல இடங்களில் இந்துக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • சுவேந்து அதிகாரிக்கு நெருங்கிய உதவியாளராக இருந்தவர்.
    • ஹல்தியா தொகுதி பெண் எம்.எல்.ஏ. கட்சி தாவியதாக பாஜக-வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு நெருங்கிய உதவியாளரான ஹல்தியா தொகுதி பெண் எம்.எல்.ஏ. தபாசி மொண்டல் பாஜக-வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார்.

    மொண்டலின் முடிவு, சுவேந்து அதிகாரியின் கோட்டையான ஹல்தியா நகர் அமைந்துள்ள புர்பா மெதினிபூர் பாஜக அமைப்புக்கு மட்டுமல்ல, அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கட்சிக்கும் இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகததில் மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் முன்னிலையில் தபாசி மொண்டல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    முதலமைச்சரின் வளர்ச்சி முயற்சியில் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்துள்ளேன் என தபாசி மொண்டல் தெரிவித்துள்ளார்.

    2016-ல் காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு ஹல்தியா தொகுதியில் வெற்றி பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சுவேந்து அதிகாரி விலகி 2021 தேர்தலின்போது பாஜக-வில் இணைந்தபோது, இவரும் பாஜக கட்சியில் இணைந்தார்.

    ×