என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமஸ்கிருதம்"

    • சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டும்
    • தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்க வேண்டும்

    தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றங்கள் கோயில் வழிபாடுகளில் தமிழைப் பயன்படுத்துவதை உறுதி செய்யப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மூலம் அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2021-இல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் முதன்முதலாகத் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 47-க்கும் மேற்பட்ட முக்கிய பெரிய கோயில்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

    அதுபோல முறையான பயிற்சிப் பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 2008 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில், ஆகம விதிகள் எங்கும் தமிழில் மந்திரங்கள் ஓதுவதைத் தடை செய்யவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

    இந்நிலையில் மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கரூர் கல்யாண வெங்கடரமண சாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் பாசுரங்களை ஓத வேண்டும்; தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரவு பின்பற்றப்படுகிறதா என குடமுழுக்கு முடிந்தபின் கோயில் செயல் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

    • சமஸ்கிருதத்தின் இளைய சகோதரி உருது.
    • அக்தரை நோக்கி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம்.. இவற்றில் எந்த மொழி பழமையானது? என கேட்டார்.

    பழமையான மொழி தமிழா அல்லது சமஸ்கிருதமா என்ற கேள்விக்கு பிரபல உருது கவிஞரும் மூத்த இந்தி திரைப்பட பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் பதிலளித்துள்ளார்.

    ராஜஸ்தான், ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாளை 19 ஆம் தேதியுடன் விழா நிறைவடையும்.

    இதில் பல்வேறு கலைத் துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாவேத் அக்தரிடம் பார்வையாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

    அதாவது, உருது அல்லது சமஸ்கிருதம்.. எந்த மொழி இவையிரண்டில் பழமையானது? என கேட்டார்.

    இதற்கு அக்தர், என்ன மாதிரியான கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள்?, சமஸ்கிருதத்தின் இளைய சகோதரி உருது. சமஸ்கிருதம் உலகின் 2-வது தொன்மையான உயிர்ப்பான மொழி என கூறினார். உருது தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகியிருக்காது என்றார்.

    கேள்வி எழுப்பியவர் மீண்டும் அக்தரை நோக்கி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம்.. இவற்றில் எந்த மொழி பழமையானது? என கேட்டார்.

    அதற்கு அவர், தமிழ் உலகின் மிக பழமையான மொழியாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சமஸ்கிருதம் 2-வது பழமையான மொழி என்றார். ஒரு மொழியை விட மற்றொன்று உயர்ந்தது என கூற முடியாது, சமஸ்கிருதம், உருது அல்லது தமிழ் ஆகியவை ஆயுதங்கள் அல்ல. அவை வார்த்தைகளால் மக்களை இணைக்கும் பாலங்கள் போன்றவை என்றார்.  

    • இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை.
    • சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 2014-15 முதல் 2024-25 வரை ரூ.2,533 கோடியும், (ஆண்டுக்கு ரூ.230 கோடி) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

    இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை. இது அவர்களது 1952 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைகளுக்காக, பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும்?

    சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் முக்கியமான மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன். செம்மொழி தகுதி பெற்ற அனைத்து மொழிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது.
    • தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியை மேம்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தது அம்பலமாகி உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533.59 கோடி செலவு செய்தது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. 

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

    போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
    • தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து ஆண்டுகளில் மத்திய அரசு சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்குச் சேர்த்து ஒதுக்கப்பட்ட ரூ.147.56 கோடியை விட 17 மடங்கு அதிகமாகும் என்று தகவல் அறியும் உரிமை (RTI) மூலம் பெற்ற தகவலை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

    ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற ஐந்து செம்மொழிகளுக்குச் சராசரி ஆண்டு நிதி ரூ.13.41 கோடி மட்டுமே மத்திய பாஜக அரசு ஒதுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    2004ல் முதன் முதலாகச் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழுக்கு, மொத்தம் ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. – இது சமஸ்கிருதம் பெற்ற தொகையை விட 22 மடங்கு குறைவு.

    இந்தியாவின் மக்கட்தொகையில் 22% மக்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா மொழி பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் பேசுபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.

    சமீபத்தில் மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் தலைசிறந்த மொழி தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

    தமிழ் மற்றும் பிற செம்மொழிகளுக்கு மொழிகளுக்கான உரிய அங்கீகாரம், நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

    • 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது.
    • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ஒதுக்கியதை விட 17 மடங்கு கூடுதல் நிதி சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியை மேம்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தது அம்பலமாகி உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533.59 கோடி செலவு செய்தது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533.59 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய பா.ஜ.க. அரசு மற்ற மொழிகளுக்கு மிக குறைவான தொகையே ஒதுக்கீடு செய்துள்ளது.

    10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ஒதுக்கியதை விட 17 மடங்கு கூடுதல் நிதி சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

    ஆண்டுதோறும் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு தமிழுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    • இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை
    • சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை இந்தியை திணிப்பதாக கூறி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், "இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

    இது தொடர்பான செய்தி துணுக்கை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்கள்.

    இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். 'வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்" என்கிறோம். "இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை' என்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • மத்திய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை
    • மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் மத்திய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. அருண் நேரு வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (முன்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) மூலம் மீண்டும் தெளிவாகிறது.

    திருச்சிராப்பள்ளியில் உள்ள PM Shri கேந்திரிய வித்யாலயா எண் 2, 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை 16-03-2025 அன்று வெளியிட்டுள்ளது.

    இதில்: PGT (பட்டதாரி ஆசிரியர்): பொருளாதாரம், ஆங்கிலம்

    TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்): இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்

    PRT (முதன்மை ஆசிரியர்): பொது மற்றும் இசைபோன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

    ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணியிடமும் குறிப்பிடப்படவில்லை. இது தமிழ்நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த பள்ளிகள் தற்போது PM Shri என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் அதன் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (இந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுகின்றன, தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால் இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.

    சமீபத்திய நிகழ்வுகளில் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் NEP 2020 வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றி செயல்படும் PM Shri பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை என்ற காரணத்தால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSA) மூலம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 2000 கோடி அளவிலான நிதியை நிறுத்தி வைத்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது தமிழ்நாட்டின் மொழியியல் அடையாளத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் புறக்கணிப்பதாகும். தமிழ்நாடு இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றுகிறது, மற்றும் இந்தியை திணிக்கும் முயற்சியாக NEP 2020-ஐ எதிர்க்கிறது. ஆனால் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.

    ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பண்பாட்டையும் மொழியையும் மதிக்க வேண்டும். PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் SSA நிதிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    சமஸ்கிருத பாரதி சார்பில் தென் தமிழகத்தில் சாதிமத பேதமின்றி அனைவருக்கும் இலவச அஞ்சல் வழியில் சமஸ்கிருத மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு செங்கோட்டை அம்மன் சன்னதி தெரு குருகுல பள்ளியில் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரிங்கேரி பாடசாலை அமைப்பாளர் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். முன்னதாக லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நெல்லை மாவட்ட சமஸ்கிருத மொழி ஆசிரியர்கள் லதா மாதா, நாகராஜன் மற்றும் செங்கோட்டை, தென்காசி பொறுப்பாளர்கள் தங்கம்மாள், உமா, உஷா, ஜெயா, வள்ளி, சீதாலெட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • 13 ஆயிரத்து 738 மாணவர்கள் தேர்வு எழுதியதில் இர்பான் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
    • சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியங்களை கற்று கொடுக்கும் பணி செய்ய ஆர்வமாக உள்ளேன்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை சமஸ்கிருத பாடத்தேர்வுகள் நடந்தது. பிளஸ்-2 தகுதி நிலையில் உள்ள இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

    இதில் உத்தரபிர தேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள சண்டலி பகுதியை சேர்ந்த சலாலுதீன் என்பவரின் மகன் இர்பான் 82.71 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 13 ஆயிரத்து 738 மாணவர்கள் தேர்வு எழுதியதில் இர்பான் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

    இதனை இர்பானின் தந்தை சலாலூதின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த தங்களின் மகனுக்கு சமஸ்கிருதம் படிக்க ஆசை வந்தது. அதுபற்றி மகன் என்னிடம் கூறியபோது, நான் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    அவர் விரும்பும் படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதித்தேன். அவரும் சமஸ்கிருதத்தை ஆர்வத்துடன் படித்தார். இதனால் இன்று அவர் அந்த தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்துக்கள் மட்டுமே சமஸ்கிருதம் படிக்க வேண்டும், முஸ்லிம்கள் இதனை படிக்ககூடாது என்று நாங்கள் கருதவில்லை. எனவே தான் எங்கள் மகனின் விருப்பத்துக்கு நாங்கள் தடையாக இருக்கவில்லை.

    எதிர்காலத்தில் அவர் சமஸ்கிருத இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது ஆர்வத்துக்கு நான் ஒரு போதும் குறுக்கே நிற்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சமஸ்கிருத தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 20 பேரில் இர்பான் மட்டுமே முஸ்லிம் மாணவர் ஆவார். இதற்காக அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    இந்த சாதனையை படைத்த இர்பான் கூறும்போது, எதிர்காலத்தில் சமஸ்கிருத ஆசிரியராக விரும்புகிறேன். சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியங்களை கற்று கொடுக்கும் பணி செய்ய ஆர்வமாக உள்ளேன், என்றார்.

    • செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை
    • வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என மத்திய மந்திரி தகவல்

    கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பத்ரிநாத், துவார்கா, ஜெகனாத், ராமேசுவரம் மற்றும் கவுகாத்தி ஆகிய ஐந்து இடங்களில் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பகுதியில் ''செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு'' என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் கேட்ட கேள்விக்கு, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அளித்த பதிலைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
    • புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அனைத்து மதங்களிலும் வித்தியாசமான வகையில் பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் நிகழ்வது வழக்கும். அந்த வகையில் இந்து மதத்தைப் பின் பற்றும் மக்கள் முக்கியமாக கிராமங்களில் உள்ள மக்கள் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று நம்புகின்றனர்.

    இது சுத்த மூடநம்பிக்கை என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் இன்றளவும் சில இடங்களில் இந்த சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்த சடங்கு வழக்கொழிந்தாலும், வட மாநில கிராமங்கள் இந்த சடங்கை கைவிடுவதாக இல்லை.

    அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

    மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×