என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Javed Akhtar"

    • சமஸ்கிருதத்தின் இளைய சகோதரி உருது.
    • அக்தரை நோக்கி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம்.. இவற்றில் எந்த மொழி பழமையானது? என கேட்டார்.

    பழமையான மொழி தமிழா அல்லது சமஸ்கிருதமா என்ற கேள்விக்கு பிரபல உருது கவிஞரும் மூத்த இந்தி திரைப்பட பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் பதிலளித்துள்ளார்.

    ராஜஸ்தான், ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாளை 19 ஆம் தேதியுடன் விழா நிறைவடையும்.

    இதில் பல்வேறு கலைத் துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாவேத் அக்தரிடம் பார்வையாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

    அதாவது, உருது அல்லது சமஸ்கிருதம்.. எந்த மொழி இவையிரண்டில் பழமையானது? என கேட்டார்.

    இதற்கு அக்தர், என்ன மாதிரியான கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள்?, சமஸ்கிருதத்தின் இளைய சகோதரி உருது. சமஸ்கிருதம் உலகின் 2-வது தொன்மையான உயிர்ப்பான மொழி என கூறினார். உருது தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகியிருக்காது என்றார்.

    கேள்வி எழுப்பியவர் மீண்டும் அக்தரை நோக்கி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம்.. இவற்றில் எந்த மொழி பழமையானது? என கேட்டார்.

    அதற்கு அவர், தமிழ் உலகின் மிக பழமையான மொழியாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சமஸ்கிருதம் 2-வது பழமையான மொழி என்றார். ஒரு மொழியை விட மற்றொன்று உயர்ந்தது என கூற முடியாது, சமஸ்கிருதம், உருது அல்லது தமிழ் ஆகியவை ஆயுதங்கள் அல்ல. அவை வார்த்தைகளால் மக்களை இணைக்கும் பாலங்கள் போன்றவை என்றார்.  

    • திரைப்பட வெற்றிக்கு ரசிகர்கள்தான் பொறுப்பு என்றார் ஜாவெத்
    • அதே வசனங்களை கதாநாயகி பேசியிருந்தால் பெண்ணுரிமை என்பீர்கள் என்றனர் குழுவினர்

    இந்தி திரையுலகில் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் பல வெற்றி படங்களில் பணியாற்றியவர், ஜாவெத் அக்தர் (Javed Akhtar).

    5 முறை தேசிய விருதுகளை வென்ற ஜாவெத், 1999ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.

    ஜாவெத், மகாராஷ்டிராவின் அவுரங்கபாத்தில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்றினார்.

    தற்கால படங்களின் வெற்றி குறித்து பேட்டியளித்த ஜாவெத், "ஒரு திரைப்படத்தில், பெண்ணை அறைவது தவறில்லை என ஒரு கதாநாயகன் கூறி அத்திரைப்படம் பெரும் வெற்றியும் பெற்றால், அது மிகவும் ஆபத்தானது. எந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு ரசிகர்கள்தான் பொறுப்பு" என கூறியிருந்தார்.

    அவரது கருத்து, கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகெங்கிலும் பெரும் வெற்றி பெற்ற "அனிமல்" இந்தி படத்தை குறி வைத்துள்ளதாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் அனிமல் படக்குழுவினர், ஜாவெத்திற்கு பதிலளிக்கும் வகையில், தங்கள் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளனர்.

    அதில் அக்குழுவினர் தெரிவித்திருப்பதாவது:

    கதாசிரியராக நீண்ட அனுபவமும், திறமையும் கொண்ட உங்களை போன்றவரால் ஒரு படத்தில், ஏமாற்றப்பட்ட காதலனின் மன உணர்வை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உங்களின் கலைப்படைப்புகள் அனைத்துமே பொய்யானவை.

    இப்படத்தில் இடம் பெற்ற ஆண் பேசும் வசனங்களை ஒரு பெண் பேசியிருந்தால், பெண்ணுரிமை என நீங்கள் கூறியிருப்பீர்கள்.

    காதல் என்பது ஆண், பெண் பேதம் கடந்தது என்பதை உணருங்கள்.

    கதையின்படி, காதல் வயப்பட்டவர் ஏமாற்றி பொய் சொல்கிறார்; அதில் ஏமாற்றப்பட்டவர் தகுந்த பதிலடி கொடுக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, மும்பையில் அனிமல் படக்குழுவினர் மிக பெரிய வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×