என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் சம்பவத்தில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி.
- ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்தனர்.
ஏர்போர்ட் மூர்த்தியை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி நடக்கிறது.
- விராட் கோலி, ரோகித் சர்மா, பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் இல்லை.
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 10ஆம் தேதியும், பாகிஸ்தானை 14ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீ்ச்சாளரான உமர் குல் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து கூறியதாவது:-
இந்திய அணி பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட வேண்டாம். கடினமான காலத்தில், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்திய அணி வலுவானதாக தோன்றுகிறத. ஆனால், டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பேட்டிங் (ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினால்) அல்லது ஒரு பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினால், போட்டியை மாற்ற முடியும்.
அனைத்து முக்கியமான தொடர்களிலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மூலமாகவே வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை நிச்சயமாக மிஸ் செய்வார்கள்.
இவ்வாறு உமர் குல் தெரிவித்தார்.
இந்தியா கடந்த சில மாதங்களாக டி20 போட்டிகளில் விளையாடவில்லை. பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் விளையாடியது.
- ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
- எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன
அப்போது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், " வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் S.Y.குரேஷி, O.P.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடுமையாக விமர்சித்ததுள்ளனர்.
குடிமகனோ, தேர்தலில் பங்களிப்பாளராக இருப்பவரோ குற்றச்சாட்டு முன்வைக்கும்போது அதை விசாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் வேலையே தவிர, எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
மதிக்கத்தக்க இந்த மூன்று பேரது விமர்சனத்திற்கு ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
- ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியலால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன்' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
- ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் ஹென்றி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய கடைசியாக 3 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை தயாரித்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் இதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

இவருடன் இறுதிப் பட்டியலில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியுடம் இடம் பிடித்துள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியது.

இறுதிப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸ் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 எனக் கைப்பற்றியது.
- நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
- இபிஎஸ் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு எம்.எல்.ஏ. பதவியை விட முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவன் என்பதையே பெருமையாகதான் நினைக்கிறேன். அதில் எனக்கு அக மகிழ்ச்சி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யக்கூடியவர். இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் நாம் மன்னித்துவிடலாம். ஆனால், நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
நிச்சயம் அதற்கான பலனை அவர் வாழும் காலத்திலேயே அனுபவிப்பார். முக்குலத்தோர் சமூதாயத்திற்காக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். அப்போதெல்லாம் செவி சாய்க்காத அவருக்கு இப்போது எங்கிருந்து தோன்றுகிறது.
எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும், அடிநலையில் இருக்கக்கூடிய மக்கள் வரை போய் சேர்ந்துவிட்டது. அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தென் மாவட்டங்களில் நீங்கறே வந்து சிலையாக நின்றாலும், உங்களுக்கு வாக்கு கிடைக்காது.
தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழிப்போடும் செயல். என்னை பொறுத்தவரையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகம் யார் ஒருவரும் பிரிக்கணும், அழிக்கணும் என்கிற வேலையில் இறங்கத் தேவையில்லை.
அதிமுக-வை வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்கத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியே அதை அழித்து முடித்து விடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற தங்கபூவே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தத்தை (SIR) நடத்திய தேர்தல் ஆணையம் (EC), இந்த மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியலில் விபர சரிபார்ப்புக்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக கருத தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் , ஆதார் விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்பதை தெளிவுபடுத்தியதுடன், ஆதார் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தது.
- சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடவில்லை.
- தொடர்ந்து ரன்கள் குவிக்கவில்லை என்றால், அது கவலை அளிக்கும் விதமாக இருக்கும்.
இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். வருங்காலத்தில் கேப்டன் ஆவதற்கான தகுதியை மேம்படுத்திக் கொள்ள பிசிசிஐ இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
தற்போது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். கடந்த சில சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் அதிக அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இது தொடர்ந்தால் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வாசிம் ஜாபர் கூறியதாவது:-
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவின், ரன் குவிப்பு தேய்ந்த வண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது. அவர் ரன் அடிக்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில சர்வதேச போட்டிகளில், சூர்யகுமார் யாதவ் லைக்-சைடு ஸ்கொயர் (square) பகுதியில் அதிக ரன்கள் அடிக்க எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய ஷாட் செலக்ஷன், அவருடைய தகுதிக்கு ஏற்ப அமையவில்லை. ஆனால், அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தி, ஐபிஎல் தொடரில் மாறுபட்ட வீரராக இருந்ததை பார்த்திருப்போம்.
அவர் ஆஃப்-சைடு ஸ்கோர் அடிக்க தொடங்கினார். அனைத்து திசைக்கும் பந்தை விரட்டும்போது, பந்து வீச்சாளரால் மிகப்பெரிய அளவில் ஏதும் செய்ய முடியாது. அவர் அபாயகரமான பேட்ஸ்மேன். எந்த பந்துவீச்சாளர் என்ற வித்தியாசம் இல்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். அது ஆசிய கோப்பை தொடரிலும் தொட வேண்டும் என நம்புகிறேன்.
ஒவ்வொரு தொடருக்கும், துணைக் கேப்டன்களை இந்திய அணி அறிவித்துள்ளது. இதனுடைய அர்த்தம், கேப்டன் பதவி ஆபத்தில் இருக்கிறது என்பதல்ல. பும்ரா எல்லா தொடரிலும் இடம் பெற மாட்டார் என்பதை தேர்வாளர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர். ஹர்திக் பாண்ட்யாவை தற்போது நாங்கள் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
தற்போது சுப்மன் கில், ஒருவேளை ஷ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பினால் அவர் போட்டியாக இருக்கலாம். இக்கட்டான நிலையில் மட்டுமே அனுபவ வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சுப்மன் கில் போன்றோரால் உதவ முடியும். ஆனால், கடைசியாக சூர்யகுமார்தான் கடினமாக முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி நாளை தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14ஆம் தேதி பாகிஸ்தானையும், 18ஆம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
கடைசியாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். இரண்டு முறை டக்அவுட் ஆனார். ஆனால் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 717 ரன்கள் குவித்தார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். அனைத்து போட்டிகளிலும் 25 ரன்களுக்கு மேல் அடித்தார்.
பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
ஜாய் கிரிசில்டா இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, ஜாய் கிரிசில்டா அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்து, சமூக வலைதளத்தில் பகிரங்கமாக நீதி கேட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய சர்ச்சை மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதுதான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம். ஜாய், ரங்கராஜ் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் வைத்த பகிரங்க வேண்டுகோள் தற்போது ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் பதிவில் கூறியுள்ள முக்கிய விஷயங்கள் இதோ: "எனது பிறக்காத குழந்தைக்காக நீதி வேண்டும்" என்று கோரி பதிவிட்டுள்ளார். நடிகர் மாதம்பட்டி ரங்கராஜன், திருமணத்தையும் கர்ப்பத்தையும் காரணம் காட்டி, எப்படி ஏமாற்றினார் என்பதை விவரித்து, 10 நாட்களுக்கு முன்பு சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். நான் தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறேன். புகார் அளிப்பதற்காக நான் என்னுடைய முற்றிலும் கண் தெரியாத தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன்.
அந்த புகாரின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால் நான் புகாரலித்த ரங்கராஜ் சொகுசாக வாழ்ந்து வருகிறார். என்மேல் சமூக வலைத்தளங்களில் தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்.
அப்பா , என்னைப்போல் உதவியற்று நிற்கும் பெண்களுக்கு உங்களுடைய ஆட்சி நீதி வழங்க வேண்டும். நான் கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன் எனக்கு நீதி பெற்று கொடுங்கள், தவறு செய்தவன் எப்படி எந்த ஒரு தண்டனையும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம்? என ஸ்டாலின், சென்னை கமிஷ்னர், சென்னை காவல் என அனைவரையும் டேக் செய்து பதிவு செய்துள்ளார்.
- துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்
- பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.
பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்துளளது
முன்னதாக நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






