என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் மிக உறுதியாக உள்ளது-மாவட்ட ஆட்சியர் விளக்கம்
    X

    கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் மிக உறுதியாக உள்ளது-மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
    • ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

    விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

    இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

    இந்நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

    திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியலால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×