என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய அணி வலுவாகத்தான் தெரிகிறது: ஆனால்., எச்சரிக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் குல்
    X

    இந்திய அணி வலுவாகத்தான் தெரிகிறது: ஆனால்., எச்சரிக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் குல்

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி நடக்கிறது.
    • விராட் கோலி, ரோகித் சர்மா, பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் இல்லை.

    8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 10ஆம் தேதியும், பாகிஸ்தானை 14ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீ்ச்சாளரான உமர் குல் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து கூறியதாவது:-

    இந்திய அணி பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட வேண்டாம். கடினமான காலத்தில், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்திய அணி வலுவானதாக தோன்றுகிறத. ஆனால், டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பேட்டிங் (ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினால்) அல்லது ஒரு பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினால், போட்டியை மாற்ற முடியும்.

    அனைத்து முக்கியமான தொடர்களிலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மூலமாகவே வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை நிச்சயமாக மிஸ் செய்வார்கள்.

    இவ்வாறு உமர் குல் தெரிவித்தார்.

    இந்தியா கடந்த சில மாதங்களாக டி20 போட்டிகளில் விளையாடவில்லை. பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் விளையாடியது.

    Next Story
    ×