என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்
    • பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்துளளது

    முன்னதாக நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு.
    • பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியம்.

    TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வு பெற TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரிதன்யா தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
    • வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பயனும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கவினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.
    • சுப்மன் களம் இறங்கினால், சஞ்சு சாம்சனின் தொடக்க இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு.

    இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா நாளைமறுதினம் (10ஆம் தேதி) முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்கிறது.

    இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் தொடக்க இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சஞ்சு சாம்சனைத்தான் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் வலுவான சாதனை வைத்துள்ளார். அவரை தொடக்க வீரர் வரிசையில் இருந்து நீக்க சுப்மன் கில்லுக்கு கூட கடினமான ஒன்றாக இருக்கும். சுப்மன் கில் மற்றொரு வீரருக்குப் பதிலாக அணியில் களம் இறங்கலாம். ஆனால், சுப்மன் கில்லை தொடக்க வீரராக தனித்து விட வேண்டும். அவர் இந்திய அணிக்காக விளையாடிய வகையில், தொடர்நது விளையாடி அனுமதிக்க வேண்டும். அதிக ரன்கள், சதங்களுடன் தொடக்க வீரர் வரிசையில் நிலையான ஆட்டத்தை கொண்டுள்ளார்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    • சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.

    நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

    நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

    இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து நேபாள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    ரவி மோகன் அவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் ரவி மோகன் அவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில் ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார். மேலும் அடுத்ததாக ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படட்திற்கு Ordinary Man என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

    இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்- 10 ஆம் தேதி படக்குழு வெளியிட இருக்கிறது.

    • துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.
    • பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துளளது.

    பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களை கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளிடம் இருந்து சம தூரத்தில் தாங்கள் இருப்பதாகவும், ஒடிசாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே தங்களுக்கு முக்கியம் எனவும் அக்கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா தெரிவித்தார். 

    • பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே போராட்டம்.
    • போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    சென்னை கொருக்குப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டில் உண்ணாவிரதம் இருந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதனால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    போலீசார் அராஜகம் ஒழிக என தூய்மைப் பணியாளர்கள் முழக்கம் நடத்தி வருகின்றனர்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 183 ரன்கள் விளாசி, இந்திய அணியை வெற்றி பெற வைத்திருப்பார்.
    • சச்சின் தனது 100ஆவது சதத்தை பதிவு செய்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் நான்கு அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி துபாயில் நடக்கிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாறு

    தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை 17ஆவது தொடராகும். இது டி20 கிரிக்கெட் வடிவிலானது. இதற்கு முன்னதாக இரண்டு முறை மட்டுமே டி20 வடிவில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை இந்தியா வென்றது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை இலங்கை வென்றது.

    இந்திய அணியின் நட்சத்திர கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனியின் தலைமையில் 50 ஓவர் மற்றும் 20 வடிவிலான தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    ரசிகர்கள் மனதில் அழியாத சிறந்த நினைவுகளை இதில் காண்போம்.

    2012ஆம் ஆண்டு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் விளாசிய விராட் கோலி

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முகமது ஹபீஸ் (106), நஷீர் ஜாம்ஷெத் (112) ஆகியோரின் சதங்களால் 329 ரன்கள் குவித்தது. பின்னர் 330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கம்பீர் டக்அவுட் ஆனார். சச்சின் தெண்டுல்கர் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3ஆவது வீரராக களம் இறங்கிய விராட் கோலி 148 பந்தில் 22 பவுண்டரி, 1 சிக்சருடன் 183 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் இந்தியா 47.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

    சர்வதேச கிரிக்கெட்டில் 100ஆவது சதத்தை நிறைவு செய்த சச்சின் தெண்டுல்கர் (2012)

    2012 ஒருநாள் வடிவிலான ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் சச்சின் 114 ரன்கள் விளாசினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார். 99ஆவது சதத்தில் இருந்து 100ஆவது சதத்தை அடிக்க சச்சின் தெண்டுல்கருக்கு 12 மாதங்கள் தேவைப்பட்டது.

    2018ஆம் ஆண்டில் டையில் முடிவடைந்த இந்தியா- ஆப்கானிஸ்தான் போட்டி

    50 ஓவர் வடிவில் நடைபெற்ற இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த தொடரில் விராட் கோலி விளையாடவில்லை. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. டோனி கேப்டனாக செயல்பட்டார். முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்தது, பின்னர் 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்திய அணியாலும் 252 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் போட்டி டையில் முடிவடைந்தது. இந்த போட்டியின் வெற்றித் தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்த இந்தியா

    2008ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சனத் ஜெயசூர்யா (125) சதம் அடிக்க இலங்கை 273 ரன்கள் விளாசியது. பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, அஜந்தா மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் சிக்கித் திணறியது. அஜந்தா மெண்டிஸ் 8 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்தியா 39.3 ஓவரிலேயே 173 ரன்னில் சுருண்டு 100 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. விரேந்தர் சேவாக் அதிகபட்சமாக 60 ரன்களும், எம்எஸ் டோனி 49 ரன்களும் அடித்தனர்.

    2012 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 2 ரன்களில் வெற்றி நழுவ விட்ட வங்கதேசம்

    50 ஓவரில் வடிவில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 236 ரன்கள் சேர்த்தது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களம் இறங்கியது. வங்கதேசம் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது.

    இந்தியா- வங்கதேசம் இறுதிப் போட்டியில் இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி

    50 ஓவர் வடிவிலான இறுதிப் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. வங்கதேசம் நேர்த்தியாக பந்து வீசியதால் இந்திய வீரர்களால் ரன்கள் குவிக்க இயலவில்லை. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் லெக்-பை மூலம் ஒரு ரன் கடைக்க இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

    2014-ல் இந்தியா- பாகிஸ்தான் மோதிய போட்டி

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் அடித்தது. பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. 39 பந்தில் 46 ரன்கள் தேவைப்பட்டது. ஷாகித் அப்ரிடி அபாரமாக விளையாடி 18 பந்தில் 34 ரன்கள் விளாசினார். கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், அஸ்வின் பந்தில் சிக்ஸ் விளாசி அப்ரிடி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்திருப்பார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, அன்றைய தினம் இந்தியாவுக்கு சிறந்ததாக அமையவில்லை.

    2008-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்த ஹர்பஜன் சிங்

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி, இறுதி போட்டி இல்லை என்றாலும் அந்த அளவிற்கு பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 267 ரன்கள் அடித்தது. இந்தியா சேஸிங்கில் ரன்களை நெருங்கிய போதும், விக்கெட்டுகளை இழந்தது.

    இரண்டு பந்தில் 4 ரன்களை தேவைப்பட்டது, முகமது ஆமிர் பந்தை சிக்சருக்கு விளாசி ஹர்பஜன் சிங் அணியை வெற்றி பெற வைப்பார். இந்த வெற்றி மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி 15 வருடத்திற்குப் பிறகு ஆசிய கோப்பையை வென்றது.

    • பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.
    • டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.

    நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

    நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக நேபாள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தலைநகர் காத்மாண்டுவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற தங்கபூவே பாடலின் வீடியோவை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறது.

    • ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
    • ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.

    தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.க. ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தைவிட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×