என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தமிழ்நாட்டில் அருந்ததியர்களையும் சேர்த்து பட்டியலினத்தில் உள்ள 76 சமூகங்களுக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
- 16 மாதங்களாகியும் அந்தத் தீர்ப்பை திமுக அரசு செயல்படுத்த மறுக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் பட்டியலின மக்களில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் தொடர்ந்து அதே நிலையிலேயே இருக்கிறார்கள்; அவர்களின் நிலையை முன்னேற்றவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பயன்களை அவர்கள் வென்றெடுக்கவும் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நீதியரசர் பி.ஆர்.கவாய் கூறியிருக்கிறார். இது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை பெரும்பாலான மாநிலங்கள் செயல்படுத்தியுள்ள நிலையில், அத்தீர்ப்பை திமுக அரசு சற்றும் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.
தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையொட்டி ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்திருக்கும் நீதியரசர் கவாய், சமூக, கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின மக்களுக்கு சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தீர்ப்பை தாம் இடம்பெற்றிருந்த 7 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு அளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தத் தீர்ப்பின் நோக்கங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், முதல் மாநிலமாக தெலுங்கானம், கடந்த மார்ச் மாதம் பட்டியலினத்தவருக்கான 15% இட ஒதுக்கீட்டை முறையே 1%, 9%, 5% என 3 பிரிவுகளாக பிரித்து சட்டம் இயற்றியது. அதேபோல், கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என 3 பிரிவுகளாக உள் இட ஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு ஆணையிட்டுள்ளது.
ஆந்திரமும் பட்டியலின மக்களுக்கான 15% இட ஒதுக்கீட்டை முறையே 6.5%, 7.5%, 1% என 3 பிரிவுகளாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு, வேறு எவருக்கும் இன்று வரை உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் அருந்ததியர்களையும் சேர்த்து பட்டியலினத்தில் உள்ள 76 சமூகங்களுக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாகான சமூகங்களுக்கு இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவில்லை. அதைக் கருத்தில் கொண்டு தான் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பின் 16 மாதங்களாகியும் அந்தத் தீர்ப்பை திமுக அரசு செயல்படுத்த மறுக்கிறது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் பி.ஆர்.கவாய் இடம் பெற்றிருந்த அமர்வு தான் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு ஆணையிட்டது. அதன்பின் இன்று வரை 1335 நாள்களாகியும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதற்காக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தும், போராட்டங்களை நடத்தியும் கூட எந்த பயனும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகநீதி வழங்கக்கூடாது என்பது தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசின் கொள்கையாக உள்ளது. தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்களுக்கு அநீதி இழைக்கும் திமுக அரசுக்கு அந்த சமூகங்கள் வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை புகட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- த.வெ.க. நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர்:
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அடுத்த கட்டமாக கூட்ட நெரிசலில் பலியானவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்தவர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேர் இன்று சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு தெ.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த த.வெ.க. தொண்டர்கள், மகளிர் அணியினர் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பாக குவிந்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி.
- பீகாருக்கு அறிவிக்கப்படும் நிதிகள் அனைத்தும் விடுவிக்கப்படுகிறதா?.
சிவகங்கையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி,
"நிதிஷ்குமார் எவ்வளவு நாள் முதலமைச்சராக இருப்பார் என்பது கேள்விக்குறியே. பாஜக நிதிஷ்குமாரை எவ்வளவு நாட்கள் விட்டுவைப்பார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். தவெக ஒவ்வொரு விஷயத்திலும் தங்கள் கொள்கையை விளக்குவார்கள் என நம்புகிறேன். பொதுவாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனக்கூறுவது கொள்கை கிடையாது.
குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்கக்கூடாது. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே இப்பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். பணியாளர்களுக்கும் இதனால் அழுத்தம் கூடுகிறது. வெளிப்படைத்தன்மையோடு தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும். அடுத்த 5 மாதத்திற்கு பிரதமருக்கு கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி சாப்பாடுதான் பிடிக்கும். இந்த மாநிலங்களின் நடனம், கலாச்சாரம்தான் பிடிக்கும். இவற்றின் மொழி, ஆடைதான் பிடிக்கும்.
எல்லா ஊர்களுக்கும் மெட்ரோ தேவையில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில், சென்னையைத்தவிர வேறு எந்த நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் தேவையில்லை. இந்தூர், ஆக்ராவில் போடப்பட்ட மெட்ரோக்கள் அனைத்தும் நட்டத்தில்தான் செல்கின்றன. பெரிய நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ தேவை. மற்ற ஊர்களுக்கு நகர்ப்புற போக்குவரத்து போதுமானது. நான் மத்திய அரசை நியாயப்படுத்தவில்லை. என்னுடைய புரிதல்தான் இது.
தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் பீகாருக்கு ஒதுக்கப்படும் ரூ.50 ஆயிரம் கோடி நிதி அவர்களுக்கு விடுவிக்கப்படுகிறதா? தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் வரத்தான் செய்யும். நடைமுறையில் எதுவும் இருக்காது. பீகார் தேர்தலுக்கும், தமிழ்நாடு தேர்தலுக்கும் இருக்கும் தொடர்பு அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் இருக்கும் சம்மந்தம் போன்றதுதான். மாநில கூட்டணிகளின்படிதான் வெற்றி இருக்கும். என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மும்முனை போட்டி வந்தால், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் அமோக வெற்றிப் பெரும்" என தெரிவித்தார்.
- மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- பெரும்பாலான குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். எனினும் பலரும் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் நின்று தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பெரும்பாலான குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குளங்களுக்கு செல்லும் கால்வாய்களில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தென்காசி குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலாப் பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,500 கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி.
- களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* த.வெ.க. தலைவர் விஜய் தரக்குறைவாக விமர்சித்து தரம் தாழ்த்திக்கொள்கிறார்.
* மக்கள் மத்தியில் தனது தரத்தை விஜயே தாழ்த்திக் கொள்ளும் நிலையில் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை.
* விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி.
* எங்களுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரி இல்லை.
* தி.மு.க.வுக்கு விஜய் போட்டியே இல்லை.
* விஜய் உள்ளிட்ட யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை.
* எங்களுக்கு போட்டி என்று யாரும் இல்லை.
* பா.ஜ.க.வின் 'C' டீம்தான் விஜய். முன்பு ஸ்லீப்பர்செல்களாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.
* களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்.
* திராவிட இயக்க வரலாற்றை இளைய தலைமுறை அறியச் செய்யும் திருவிழா.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
- தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.
- நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும் ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 18-ந்தேதி குறைந்து, 19-ந்தேதி உயர்ந்த நிலையில், 20-ந்தேதி விலை சரிந்தது. இதன் தொடர்ச்சியாக 21-ந்தேதியும் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது.
21-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 460-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இதனை தொடர்ந்து 22-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630-க்கும் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும் ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680
20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000
19-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-11-2025- ஒரு கிராம் ரூ.172
22-11-2025- ஒரு கிராம் ரூ.172
21-11-2025- ஒரு கிராம் ரூ.169
20-11-2025- ஒரு கிராம் ரூ.173
19-11-2025- ஒரு கிராம் ரூ.176
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நெல்லை, தென்காசி, நாகை மாவட்ட கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பூண்டி, மன்னவனூர், வில்பட்டி கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், மதுரை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, தென்காசி, நாகை மாவட்ட கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தின் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பூண்டி, மன்னவனூர், வில்பட்டி கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை அறிந்து மற்ற பள்ளிகளுக்கும் விடுப்பு அளிக்கலாம் என்று திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
- கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- துவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், மதுரை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கனமழை காரணமாக புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு.
- நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் தெருநாய்களுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நிவேதா பெத்துராஜ், "நாய் கடித்தால் அதை பெரிய விசயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு. நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல. நாய்களை காப்பகங்களில் அடிப்பதை விட தடுப்பூசி போடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. " என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






