என் மலர்
இந்தியா
- நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- பாஜக 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று வெற்றி, நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் அரசாங்கங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கையின் முத்திரை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முகம்.
- பீகாரில் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர்.
பீகார் தேர்தலில் 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முகம்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில் நிதிஷ்குமாரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் நிதிஷ்குமார், சிராக் பஸ்வான், ஜித்தன் ராம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகாரில் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
- மொகமா தொகுதியில் வாக்கு சேகரித்த ஜன் சுராஜ் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்டார்.
- விசாரணையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. கொலை வழக்கு பதியப்பட்டாலும் ஆனந்த் குமார் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
- பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- நிதிஷ் குமார் கட்சி கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு இடங்களை பிடிக்க இருக்கிறது.
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார்.
இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று பெற்றி, முற்போக்கு நிர்வாகத்தை தொடர்ந்து பீகார அரசால் கொடுக்க முடியும். மற்றும் பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத்தின் மீதான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
நிதிஷ் குமார் மற்றும் வெற்றி பெற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பவன் கல்யாண் "பீகார் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
- களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை
- காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மதிய நிலவரப்படி முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணி அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
அதேநேரம் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் தருவாயில் உள்ளது.
குறிப்பாக 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மதியம் 1 மணி நிலவரப்படி, 4-5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை தேர்தல் படுதோல்வியாக அமைந்துள்ளது.
வாக்காளர் அதிகார யாத்திரை, வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள், வாக்காளர் பட்டியல் திருத்த எதிர்ப்பு என பல விஷயங்களை பீகாரில் ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் முன்னெடுத்தபோதும் அது அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
வாக்கு திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் களத்தில் சிறிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
இந்த விவகாரங்கள் எடுபடவில்லை என்று களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
அதுவும் ராகுல் காந்தி மக்கள் அதிகார பயணம் மூலம் பிரசாரம் மேற்கொண்ட அனைத்து தொகுத்திகளிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி காட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

காங்கிரசின் இந்த தோல்வி குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். குறிப்பாக கட்சித் தலைவர்கள் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) மற்றும் சிறுபான்மையினர் நோக்கி தனது கவனத்தை திருப்பி கையில் எடுத்த சமூக நீதிக் கொள்கை காங்கிரசின் பாரம்பரியமான உயர் வகுப்பு வாக்குகளை மேலும் விலக்கி உள்ளது.
பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) பிரிவினர், மற்றும் பீகார் பெண்களின் வாக்குகளும் காங்கிரசுக்கு கிடைக்காதது, அம்மக்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் கண்கவர் திட்டங்களில் திருப்தியடைந்ததையே காட்டுகிறது.
பாஜக, ஜேடியு மற்றும் லோக் ஜனசக்தி கட்சி போன்ற என்டிஏ கூட்டணி கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு தாவிய பலரை உடனடியாக வேட்பாளராக்கியது கட்சிக்கு பின்னடைவைவாக அமைந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ஒருபுறம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐ கடுமையாக எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், அதனுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு சீட் வழங்கியது காங்கிரஸின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியது என கூறப்படுகிறது.
அதேநேரம் பிரசார களத்தை பொறுத்தவரை ராகுலும் தேஜஸ்வியும் ஒரே மேடையில் ஓரிரு முறை மட்டுமே தோன்றினர். இது இரண்டு கட்சியின் இணக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

அதேநேரம் மாநிலத்தின் நீண்ட கால முதல்வரான நிதிஷ் குமார் மற்றும் ஸ்திரமான தேசியா தலைமை பிம்பம் கொண்ட பிரதமர் மோடி பீகார் மக்களுக்கு பாதுகாப்பான தேர்வாக அமைத்துள்ளனர்.
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பிரமாண்டமான திட்டங்களை தேஜஸ்வி அறிவித்தபோதும் அவற்றின் சாத்தியம் குறித்த சந்தேகங்களும் நிலவின.
ஆர்ஜேடிக்கு இந்த தேர்தல் மாநில அளவில் தோல்வியை தந்திருந்தாலும், தேசிய கட்சியான காங்கிரசுக்கு இந்த ஒற்றை இலக்க வெற்றி முன்னெப்போதும் இல்லாத பின்னடைவியாகவே பார்க்கப்படுகிறது.
மொத்ததில் காங்கிரஸ் தலைவர்கள் பல பல சிக்கல்களை அடையாளம் கண்டாலும், இந்த படுதோல்வி யாரும் எதிர்ப்பாராத அடியாகவே அமைந்துள்ளது.
- அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார்.
- லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
தெவங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம். போண்டலபள்ளியை சேர்ந்த ஒருவர், ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார்.
இதற்காக நேற்று தளம் அமைக்கும் பணி நடந்தது.தொழிலாளர்கள் சிமெண்டு கலவை கொண்டு தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தளம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு தொழிலாளர்களுக்கு ஆட்டு கறி குழம்பு பரிமாறப்பட்டது.அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமணய்யா (வயது 65) என்பவரை சாப்பிட அழைத்தனர்.
அப்போது லட்சுமணய்யா மது போதையில் இருந்தார். அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார். அது அவரது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமணய்யா மூச்சுக் குழாயில் ஆட்டுக்கறி துண்டு சிக்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த 2020 தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- இந்த தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போது 207 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கடந்த தேர்தலை விட நிதிஷ் குமார் கட்சி (ஐக்கிய ஜனத தளம்) இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. கடந்த முறை 43 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
கிசான்கஞ்ச் தொகுதியில் முகமது கம்ருல் ஹோடா 19ஆவது சுற்றுக்குப் பிறகு 24,058 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். பாகல்பூர் தொகுதியில் 15 சுற்றுக்குப் பிறகு அஜீத் சர்மா 4797 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
குதும்பா தொகுதியில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பின்தங்கிய நிலையில் உள்ளார்.
- பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் இடைத்தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- பாஜகவின் லங்காலா தீபக் ரெட்டியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நவம்பர் 11 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள தோகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இன்று பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் இடைத்தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தெலுங்கானாவில் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை சமூக வேட்பாளர் நவீன் யாதவ் 99,120 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட சந்திரசேகராவ் உடைய பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் சுனிதா கோபிநாத் (74,462 வாக்குகள்) மற்றும் பாஜகவின் லங்காலா தீபக் ரெட்டியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
பிஆர்எஸ் வேட்பாளர் சுனிதா கோபிநாத் உடைய கணவர் ஜூப்லி ஹில்ஸ் எம்எல்ஏவாக இருந்த நிலையில் அவர் மறைவின் பின் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் அன்டா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் பாயா 65,571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மிசோரம் மாநிலத்தில் டாம்பா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மிசோ நேஷனல் பிரன்ட் கட்சியை சேர்ந்த அம்மாநில முன்னாள் அமைச்சர் லலிதாங்லியானா, எதிர்த்து போட்டியிட்ட ஜோரம் பீப்புள் மூமென்ட் வேட்பாளர் வன்லால்சைலோவாவை விட 562 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் நாகோர்டா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவின் தேவயாணி ராணா 42,350 வாக்குகள் பெற்று, 24,647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மறைந்த பாஜக தலைவர் தேவேந்தர் சிங் ராணாவின் மகள் ஆவார்.
அதேபோல் ஒடிசாவில் நுவாபாடா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜே தோலாகியா 56,819 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மற்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- 1995 ஆம் ஆண்டு 4 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
- 2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போது 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பொதுவாக தேர்தலின்போது வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறும். இதனால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயமும் ஏற்படும். வாக்குச்சாவடிகளில் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. கள்ள ஓட்டு செலுத்திவிட்டனர் என குற்றச்சாட்டு எழும். இதனால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படும்.
ஆனால் பீகாரில் முதன்முறையாக வாக்குப்பதிவின்போது வன்முறையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு என்பது இல்லை.
கடந்த 1985 சட்டசபை தேர்தலின்போது 63 பேர் உயிரிழந்துள்ளனர். 156 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடபப்ட்டது.
1990 தேர்தலின்போது வாக்குப்பதிவு வன்முறை தொடர்பாக 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
1995ஆம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை வெடித்ததாலும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு காரணமாகவும் டி.என். சேஷன் நான்கு முறை தேர்தலை ஒத்திவைத்தார்.
2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.
- அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர்.
- சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான்.
திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் கடந்த 1½ வருடங்களாக கணவரை பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். சரஸ்வதி வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று பின்னர் வேலை முடிந்து மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
மனைவி வேலைக்கு சென்று வீடு திரும்புவதை கடந்த சில நாட்களாக விஜய் கண்காணித்து வந்தார். நேற்று காலை 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் சென்ற சரஸ்வதி வேலை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியே விஜய் கத்தியுடன் மறைந்து இருந்தார்.
சரஸ்வதி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருவதை கண்ட விஜய் ஆவேசத்துடன் சென்று மனைவியை சரமரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியின் கழுத்தில் வெட்டினார். சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது விஜய் மனைவியின் கழுத்தை அறுத்தார். சரஸ்வதியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. தடுக்க முயன்ற பொதுமக்களை ரத்தம் சொட்டசொட்ட இருந்த கத்தியை காட்டி உங்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
இதனால் உயிர் பயத்தில் பொதுமக்கள் யாரும் விஜய்யை நெருங்கவில்லை. சிறிது நேரத்தில் சரஸ்வதி உயிருக்கு போராடியபடி துடித்து பரிதாபமாக இறந்தார். சாகும் வரை விஜய் அங்கேயே நின்றார்.
அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து சூர்ய ராவ் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் விஜயை மடக்கி பிடித்தனர். சரஸ்வதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஜனநாயக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது.
- ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது.
பீகாரில் சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி மற்றும் 11ம் தேதி என இரு கட்டங்களாக நடைபெற்றது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாஜக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றிருந்தன.
அதேபோல் மகாபந்தன் இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் , காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இதனால் இந்த தேர்தல் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதில், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், கட்சி 23 இடங்களில் முன்னிலை வகித்து, என்டிஏ கூட்டணிக்கு பக்கபலமாக இருந்துள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி கடந்த 2020 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற தற்போதைய தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி முக்கிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
மொத்தத்தில், என்டிஏ கூட்டணி ஒரு வலுவான வெற்றியை நோக்கிய நிலையில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பெரிய அளவில் கை கொடுத்ததால் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல், இந்த கூட்டணி பலத்தால் சிராக் பஸ்வான் மாபெறும் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
- 6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (17-ந்தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. இந்த பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் அடுத்த 15 நாட்களுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. 16-ந் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இனி பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டி பெரியார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உடனடி கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த நாட்களில் தரிசனம் செய்ய முடியும். சபரிமலைக்கு மண்டல-மகரவிளக்கு யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை சிறப்பாக செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் கூறுகையில், நிலக்கல், பம்பா மற்றும் சன்னிதானம் ஆகிய 3 முக்கிய மண்டலங்களிலும் 6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
கூட்ட நடமாட்டம் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்க டிரோன் கண்காணிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து, மொபைல் பிரிவுகள் பயன்படுத்தப்படும். முக்கிய இடங்களில் கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். திருட்டுகளை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் சிறப்பு திருட்டு எதிர்ப்பு படை மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் இயக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்றார்.






