என் மலர்
இந்தியா
- சமத்துவக் குழு புகார் கிடைத்த 24 மணிநேரத்திற்குள் கூட வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- புதிய விதிகளில் 'பொய்ப் புகார்கள்' அளிப்பவர்கள் மீதான தண்டனை குறித்த விதிகள் நீக்கப்பட்டுள்ளன.
யுஜிசியின் புதிய விதிகள், குறிப்பாக 'உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகள் 2026' -ன் கீழ் எவருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த விதிகள் யாரையும் குறிவைத்துத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்றும், அனைவருக்கும் நியாயமான முறையில் சட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது யுஜிசி, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள்ளேயே மேற்கொள்ளப்படும் என்றும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் சமபங்கு விதிமுறைகள் என்னும் இந்த புதிய விதிமுறை கூறுவது என்ன?
ஜனவரி 13, 2026 அன்று அறிவிக்கப்பட்ட இந்த விதிகள், உயர்கல்வி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டநாட்களாக எழுந்துவருகிறது. இதனை ஒழுங்குப்படுத்த தற்போது இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமும் 'சம வாய்ப்பு மையம்' (Equal Opportunity Centre) ஒன்றை அமைக்க வேண்டும் என்பது இந்த விதிகளின் ஒரு முக்கிய அம்சமாகும். அதேபோல கல்வி நிறுவனத் தலைவரின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட சமத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 50% உறுப்பினர்கள் SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள் அல்லது பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
புதிய விதிமுறைகளின் கீழ், பாகுபாடு என்பது SC, ST பிரிவினருடன் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBCs) உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புகார்களைப் பதிவு செய்ய 24 மணிநேர உதவி எண் மற்றும் ஆன்லைன் போர்டல் உருவாக்கப்பட வேண்டும். சமத்துவக் குழு புகார் கிடைத்த 24 மணிநேரத்திற்குள் கூட வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பாகுபாடு தொடர்பான புகார்களைக் கையாள்வதில் அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களே இனி நேரடியாகப் பொறுப்பாவார்கள். விதிமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி நிறுத்தம், பட்டங்கள் வழங்கும் அதிகாரம் ரத்து அல்லது அங்கீகாரம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க UGC-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளுக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள்
சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பதற்கான வரையறையில் SC, ST மற்றும் OBC பிரிவினர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைப் புகார் அளிக்க இதில் தெளிவான வழிமுறைகள் இல்லை என விமர்சிக்கப்படுகிறது.
புதிய விதிகளில் 'பொய்ப் புகார்கள்' அளிப்பவர்கள் மீதான தண்டனை குறித்த விதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்களுக்கு எதிராக இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சமத்துவக் குழு மற்றும் சமத்துவப் படைகளில் பொதுப் பிரிவினருக்குப் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவில்லை. இது அந்த விசாரணை அமைப்புகளில் ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுக்க வழிவகுக்கும் என கூறுகின்றனர். மேலும் இந்த விதிகள் மாணவர்களிடையே சாதி உணர்வை மேலும் தூண்டி, கல்வி வளாகங்களில் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
- ஐரோப்பிய நாடுகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு இணையான அங்கீகாரம் கிடைக்கும்
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் இனி எளிதாக நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக IT, ITeS, கல்வி, நிதிச் சேவைகள், சுற்றுலா, கட்டுமானம், தொழில்முறை ஆலோசனைகள் உள்ளிட்ட 144க்கும் மேற்பட்ட ஐரோப்பிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் அல்லது சுயதொழில் செய்யும் நிபுணர்கள் இனி எளிதாக நுழைய முடியும்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு இணையான அங்கீகாரமும், சமமான வாய்ப்புகளும் இந்திய நிறுவனங்களுக்கு இனி வழங்கப்படும்.
இந்தியாவில் இருந்துகொண்டே ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் நிபுணர்களுக்கும், தற்காலிகமாக அங்கு சென்று பணிபுரியும் நிபுணர்களுக்கும் இது உதவும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
- ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு வேலை தேட விசா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள், அங்கேயே தங்கி வேலை தேட 9 மாதங்கள் கால அவகாசம் (POST-STUDY VISA) இனி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை பயின்ற மருத்துவர்கள், செவிலியர்களின் பட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பதால், அவர்கள் அங்கு சென்று பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
- கார்களுக்கான வரிகள், அதிகபட்சமான 110%-லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்தியா - EU வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரிகள், தற்போதுள்ள அதிகபட்சமான 110%-லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.
இதன்மூலம் BMW, BENZ, AUDI, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்களின் விலை கணிசமாகக் குறையவுள்ளன
- ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
- மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம் ஒரே பிரதமர் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார்.
இதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டத்தில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதுதான் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அமைச்சர் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்ததாகும். மொரார்ஜி தேசாய் 1959 முதல் 196 வரை நிதியமைச்சராக இருந்தபோது 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1967 முதல் 1969 வரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் பி. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
நிர்மலா சீதாராமன் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி 2-வது முறையாக வெற்றி பெற்றதும், முழு நேர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2024-ல் பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றி பெற்றதும் தொடர்ந்து நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவமபர் 26-ந்தேதி ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.
மன்மோகன் சிங் 1991 முதல் 1995 வரை தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார்.
- ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து 0% ஆகக் குறையும்.
- ரயில்வே, கப்பல் தயாரிப்புகள் மீதான வரி 7% லிருந்து 0% ஆகக் குறையும்.
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் பெரும்பாலான இந்திய பொருட்கள் மீதான வரிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதால் இந்தியா பெரும் நன்மைகள்:
1. மீன் போன்ற கடல்சார் பொருட்கள் மீதான வரி 26% லிருந்து 0% ஆகக் குறையும்.
2. காலணிகள் மீதான வரி 17% லிருந்து 0% ஆகக் குறையும்.
3. ரசாயனப் பொருட்கள் மீதான வரி 12.8% லிருந்து 0% ஆகக் குறையும்.
4. ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து 0% ஆகக் குறையும்.
5. நுகர்வோர் பொருட்கள் மீதான வரி 10.5% லிருந்து 0% ஆகக் குறையும்.
6. அடிப்படை உலோகங்கள் மீதான வரி 10% லிருந்து 0% ஆகக் குறையும்.
7. ரயில்வே, கப்பல் தயாரிப்புகள் மீதான வரி 7% லிருந்து 0% ஆகக் குறையும்.
8. பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் மீதான வரி 4.7% லிருந்து 0% ஆகக் குறையும்.
9. ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மீதான வரி 4%லிருந்து 0% ஆகக் குறையும்.
- தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
- தற்கொலைக்கு தூண்டியதாக வீடியோ பதிவிட்ட ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் இன்று கைது செய்தனர்.இந்நிலையில், ஜாமீன் கோரி ஷிம்ஜிதா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- மீண்டும் வருவார் என்ற எண்ணமோ, எதுவோ, எதுவாகினும் நான்கு நாட்களாக அங்கேயே இருந்துள்ளது
- விலங்குகளால் மட்டுமே மரணத்தையும் தாண்டிய விசுவாசத்தையும், அன்பையும் காட்ட முடியும்
ஐந்து அறிவு என்றாலும் நாய்களின் பாசம் என்பது நாம் பலரும் அறிந்ததே. அதனால்தான் பலரது வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் போலவே வளர்ந்து வருகின்றன நாய்கள். இந்நிலையில் ஹிமாச்சல்பிரதேசத்தில் வளர்ப்பு நாய் ஒன்றின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து, மனதை உருக்கிவருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பார்மூரில் பிக்ஷித் ராணா மற்றும் பியூஷ் என்ற இளைஞர்கள் ஜன.23 அன்று பர்மணி கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் கடும் பனிப்பொழிவில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். பின்னர் இருவரையும் தேடி, உள்ளூர்வாசிகளும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்தை (உடல்கள் இருந்த இடத்தை) அடைந்துள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அதிக பனிப்பொழிவால் பியூஷின் உடல் பனி அடுக்குகளுக்கு அடியில் புதைந்துள்ளது. ஆனால் பியூஷ் உடலின் அருகிலேயே நான்கு நாட்களாக அவனது நாய் அமர்ந்திருந்துள்ளது. உறைபனி, காற்று, பனிப்புயல் என அனைத்தையும் தாண்டி, உணவு உண்ணாமல் பியூஷின் வளர்ப்பு நாயான பிட்புல் அவரின் உடலுக்கு அருகிலேயே இருந்துள்ளது. மேலும் காட்டு விலங்குகளிடம் இருந்தும் உடலை காத்துள்ளது.

அவர் மீண்டும் வருவார் என்ற எண்ணமோ, எதுவோ, எதுவாகினும் நான்கு நாட்களாக அங்கேயே இருந்துள்ளது. மீட்புக் குழுவினர் சென்றபோதும் முதலில் உரிமையாளரின் உடலை அணுகவிடாமல் ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டுள்ளது. பின்னர் உதவுவதற்காகத்தான் வந்துள்ளனர் என்பதை அறிந்து உடலை விட்டு சிறிதுதூரம் விலகிச்சென்று மீட்புக்குழுவினரை அவர்களின் கடைமையை செய்ய அனுமதித்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விலங்குகளால் மட்டுமே மரணத்தையும் தாண்டிய விசுவாசத்தையும், அன்பையும் காட்ட முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்
- ஐஐடி மெட்ராஸை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதால் அவர் இந்த விருதுக்கு முழு தகுதியானவர்
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 131 பேருக்கு, ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகளை அரசு அறிவித்துளது.
இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி. காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் இதுதொடர்பாக பதிவிட்ட காங்கிரஸ், "பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடிக்கு வாழ்த்துகள். ஐஐடி மெட்ராஸில் கோமியம் குறித்த உங்கள் அதிநவீன ஆராய்ச்சியை அங்கீகரித்து, கோமியத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக நாடு உங்களுக்கு இந்த கௌரவத்தை அளித்துள்ளது" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கேரள காங்கிரஸின் இந்த விமர்சனத்திற்கு சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி கொடுத்துள்ளார். காமகோடி மைக்ரோ-புராசஸர் வடிவமைப்பில் நிபுணர் என்றும், ஐஐடி மெட்ராஸை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதால் அவர் இந்த விருதுக்கு முழு தகுதியானவர் என்றும் கூறி காங்கிரஸின் கருத்தை "காலனித்துவ மனநிலை" என்று விமர்சித்துள்ளார்.
கோமியம் குறித்து காமகோடி கூறியது என்ன?
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என கடந்தாண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் காமகோடி பேசியிருந்தார்.
ஒரு முதன்மையான தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் இதுபோன்ற அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளை முன்வைப்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது என்ற விமர்சனங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தது. இந்நிலையில் இதனை காங்கிரஸ் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.
- நாடாளுமன்றம் நாளை கூட இருக்கும் நிலையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
- VB-G RAM G சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் VB-G RAM G சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளிக்கையில் "சட்டம் ஒருமுறை நிறைவேற்றப்பட்டு நாட்டு மக்களின் முன் வந்துவிட்டால், நாம் அதைப் பின்பற்ற வேண்டும். நம்மால் பின்னோக்கிச் சென்று கடந்த காலத்திற்குத் திரும்ப முடியாது. அது நடக்காது. மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நமக்கு பேச்சு சுதந்திரம் உண்டு. ஆனால் கேட்பதும் நமது கடமையே" எனத் தெரிவித்துள்ளார்.
- மாணவர்கள் 3 பேரும் ராட்தச அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
- சஜித் மற்றும் திபின் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பீமப்பள்ளி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ரிஹான், சஜித், திபின். இவர்கள் 3 பேருக்கும் 16 வயது ஆகிறது. அவர்கள் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்த மாணவர்கள் 3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பள்ளி மட்டுமின்றி டியூசனுக்கு கூட தினமும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். சம்பவத்தன்று மாணவர்கள் 3 பேரும் வழக்கம்போல் டியூசனுக்கு சேர்ந்து சென்றிருக்கின்றனர்.
டியூசனுக்கு நேரம் அதிகம் இருந்ததால், அவர்கள் பீமப்பள்ளி தைக்கப்பள்ளி அருகே உள்ள கடற்கரைக்கு சென்று பந்து விளையாடியிருக்கின்றனர். அப்போது அவர்களது பந்து கடலுக்குள் விழுந்து விட்டது. அதனை எடுக்க முயன்றபோது மாணவர்கள் 3 பேரும் ராட்தச அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
கடல் அலையில் சிக்கி தத்தளித்த அவர்கள் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர். அதனை அங்கு கடற்கரையில் இருந்து உள்ளூர் மீனவர்கள் கவனித்தனர். அவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
அதில் சஜித் மற்றும் திபின் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் ரிஹானை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து டைவிங் நிபுணர்கள் மற்றும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் கடலுக்குள் மணலில் மூழ்கிய நிலையில் கிடந்த ரிஹானை மீட்டனர். அவன் அம்பலத்தாராவில் உள்ளி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் மாணவன் ரிஹான் பரிதாபமாக இறந்துவிட்டான்.
கடலில் விழுந்தை பந்தை எடுக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவன், கடலில் மூழ்கி இறந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பேச்சுவார்த்தை 2007-ல் தொடங்கப்பட்டது.
- கடந்த 18 ஆண்டாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை தற்போது உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த பேச்சுவார்த்தை 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 18 ஆண்டாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை தற்போது உறுதி செய்யப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருதரப்பும் தங்களுடைய பொருட்களுக்கு 90 சதவீதத்துக்கு மேல் சுங்க வரிகளை தளர்த்தவேண்டும்.
தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வரும்.
இந்தியா இதுவரை மேற்கொண்ட அனைத்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களிலும் இந்தக் கோரிக்கை முக்கியமானதாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.






