search icon
என் மலர்tooltip icon

    ஐபிஎல் 2018

    சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ரோகித் சர்மா சாதனையுடன் ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு இணைந்துள்ளனர். #IPL2018
    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று பேரையும் இடம்பிடித்துள்ளார்.

    இவர்தான் அதிக கோப்பையை வென்ற வீரராக இருந்தார். இவருடன் தற்போது அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவரும் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தனர். அப்போது மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்ஸ் பட்டம் வென்றிருந்தது.



    இந்த முறை இரண்டு பேரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்கள். 2018 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அம்பதி ராயுடும், ஹர்பஜன் சிங்கும் நான்கு முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்துள்ளனர்.

    2009-ம் ஆண்டு டெக்கார் சார்ஜர்ஸ் அணியும், 2013, 2015 மற்றும் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    ஐபிஎல் தொடருக்கு திரும்பி மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எங்களது ஆசையாக இருந்தது என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
    மேட்ச் பிக்சிங் விவகாரத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் (2016 மற்றும் 2017) ஐபிஎல் தொடரில் விளையாட தடைபெற்றது. இந்த தடை விலகியதால் 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கலந்து கொண்டது. கலந்து கொண்டது அல்லாமல் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையையும் தட்டிச் சென்றது.

    இந்த வெற்றி தலைமை பயிற்சியாளரான ஸ்டீவன் பிளமிங்கிற்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. வெற்றி குறித்து ஸ்டீவன் பிளமிங் கூறுகையில் ‘‘ஒவ்வொரு அணியையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், மிகவும் உயர்ந்த நிலையில் வெற்றியை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.



    இரண்டு ஆண்டுகள் தடைபெற்று மீண்டும் அணிக்கு திரும்பும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உணர்வு வீரர்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். இரண்டு ஆண்டுகள் என்பது அணிக்கு மிகவும் கடினமானது. இதில் சந்தேகம் ஏதும் இல்லை. மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பி பிறகு, போட்டிகளில் கடும் சவாலாக இருக்க வேண்டும், அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் ஆசையாக இருந்தது’’ என்றார்.
    ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்றியதை தொடர்ந்து தனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.



    இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மா சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். சிறப்பாக விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்று 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வீரர்கள் அனைவரும் கொண்டாடினர்.



    வெற்றி குறித்து டுவிட் செய்த ஹர்பஜன் சிங், 'தோட்டாவென கிளம்பிய பந்துகள். கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், 'கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம். வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePodu  கோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம்'

    என தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK

    தொடர்ச்சியாக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம்பிடித்த ஒரே வீரர் என்ற பெருமையை கரண் சர்மா பெற்றுள்ளார். #IPL2018 #CSK
    ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செனனை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.



    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்குப் பதில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். இவர் 3 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கிய வீரரான கேன் வில்லியம்சனை வீழ்த்தினார்.

    சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் இடம்பிடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கர்ண் ஷர்மா பெற்றுள்ளார்.



    2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை கர்ண் சர்மா தொடர்ச்சியாக மூன்று முறை ருசித்துள்ளார்.
    ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சனுக்கு கேப்டன் டோனி பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2018 தொடர் நேற்று முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.

    கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வெற்றிக்கோப்பையை கையில் வைத்து, தனது மனைவி, குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் டோனி பதிவு செய்திருந்தார். அத்துடன், சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் மற்றும் மும்பைக்கை நன்றி. 'ஷேன் ஷாக்கிங் வாட்சன்' சிறப்பாக இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்று தந்தார். ஷிவா டிராபியை வாங்குவது குறித்து கவலைப்பட வில்லை. அவள் மைதானத்தில் இறங்கி ஓட வேண்டும் என எண்ணினாள்.


    இவ்வாறு டோனி குறிப்பிட்டிருந்தார். வாட்சனை, ஷாக்கிங் வாட்சன் என அவர் குறிப்பிட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரசிகர்களிடையே பெரும் உற்றாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson
    ஐபிஎல் இறுதிப்போட்டியில் வாட்சன் தொடக்கத்தில் அமைதியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக்ரோ‌ஷத்துடன் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்துள்ளார்.#IPL2018 #CSK #Watson
    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது தடவையாக கோப்பையை வெல்லுமா? என்று ஓட்டு மொத்த சி.எஸ்.கே. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

    கேப்டன் டோனியும் ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 179 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. இந்த ரன்னை சென்னை அணி ‘சேஸ்’ செய்யுமா? என்ற கலக்கம் இருந்தது.

    ரஷீத்கான், புவனேஷ்வர்குமார் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் ஐதராபாத் அணியில் இருப்பதால் இந்த சந்தேகம் ஏற்பட்டது.

    அதற்கு ஏற்றவாறு வாட்சனின் ஆட்டம் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்தது. புவனேஷ்வர்குமாரின், முதல் ஓவரே மெய்டனாக இருந்தது. தனது 11-வது பந்தில் தான் அவர் பவுண்டரி மூலம் கணக்கை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் கடுப்படைந்தனர். அணிக்கு ஏற்பட்ட நெருக்கடியில் டுபெலிசிஸ் அதிரடியாக ஆடும் முயற்சியில் ஆட்டம் இழந்தார்.

    முதல் 5 ஓவரில் சென்னை அணி 1 விக்கெட்டை இழந்தது. 20 ரன் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால் எங்கு வெற்றி பெற போகிறது என்ற எண்ணம் எழுந்தது.

    அப்போது தான் வாட்சன் தனது பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சந்தீப்சர்மா வீசிய ஆட்டத்தின் 6-வது ஓவரில் இருந்து அவரது அதிரடி தொடங்கியது. அந்த ஓவரில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். அவருக்கு ரெய்னா உதவியாக இருந்தார்.

    புவனேஷ்வர்குமார், ரஷீத்கான் ஓவரை தவிர மற்ற பந்துவீச்சாளர்களை எல்லாம் வாட்சன் அடித்து நொறுக்கி துவசம் செய்துவிட்டார்.

    சந்தீப்சர்மா வீசிய 13-வது ஓவரில் அவர் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 26 ரன் குவித்தார். 33 பந்தில் அரை சதத்தை (3 பவுண்டரி, 4 சிக்சர்) பூர்த்தி செய்த வாட்சன் 51 பந்தில் சதம் (7 பவுண்டரி, 8 சிக்சர்) 100 எடுத்தார். தொடக்கத்தில் அமைதியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பின்னர் ஆக்ரோ‌ஷத்துடன் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

    ஆரம்பத்தில் அவரது ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன ரசிகர்கள் பின்னர் அதிரடியாக ஆடியதை பார்த்து உற்சாகம் அடைந்தனர். வாட்சன் சிக்சர்களும், பவுண்டரிகளுமாய் அடித்து மும்பை வான்கடே மைதான ரசிகர்களுக்கு மட்டுமின்றி, போட்டியை டெலிவிசனில் ரசித்த ரசிகர்களுக்கும் விருந்து படைத்தார்.

    117 ரன் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன்பு விர்த்திமான் சகா 2014-ம் ஆண்டு 115 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.#IPL2018 #CSK #Watson
    கிரிக்கெட்டில் வயது ஒரு பிரச்சினை கிடையாது எனவும் உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.#IPL2018 #CSK #Dhoni
    மும்பை:

    2 ஆண்டு தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30 வயதை தாண்டிய வீரர்கள் 8 பேர் இடம் பெற்று இருந்தனர்.

    கேப்டன் டோனி (36 வயது), இம்ரான் தாகீர் (39), ஹர்பஜன்சிங் (38), வாட்சன் (36), பிராவோ (34), டுபெலிசிஸ் (33), அம்பதிராயுடு (32), ரெய்னா (31) உள்ளிட்ட வீரர்கள் 30 வயதை தாண்டி இருந்தனர். இதனால் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்சை “அப்பாக்கள் அணி” என்று விமர்சனம் செய்தனர். இதற்கு அவர்கள் கோப்பையை வென்று கொடுத்து பதிலடி கொடுத்தனர்.

    ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றபோது டோனி இது தொடர்பாக கூறியதாவது:-

    எங்கள் அணி வீரர்களின் வயது பற்றி அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் வயது ஒரு பிரச்சினை கிடையாது. உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம். உதாரணத்திற்கு அம்பதி ராயுடுவை சொல்லலாம். 32 வயதான அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்து அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். எனவே வயதைவிட உடல் தகுதி தான் முக்கியம்.



    இறுதிப்போட்டிக்கு நுழைந்த பிறகு அனைத்து வீரர்களுக்கும் அவர்களது பங்களிப்பு என்ன என்பது தெரியும். எங்கள் அணியின் மிடில் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். டுபெலிசிசை முதலிலும், அம்பதி ராயுடுவை பின் வரிசையிலும் இறக்கியதில் எந்த திட்டமும் இல்லை.

    இதற்கு முந்தைய கோப்பையை வென்றபோது நடந்ததை நினைவுக்கு கொண்டு வருவது கடினம். புள்ளி விவரங்களை பற்றி பலர் பேசுகிறார்கள். இறுதிப்போட்டி தேதி 27 (நேற்று) எனது ஜெர்சி எண் 7, எங்களுக்கு 7-வது இறுதிப்போட்டி. நாங்கள் கோப்பையை வெல்ல போதுமான காரணம் இருக்கிறது. ஆனாலும் இதெல்லாம் காரணமில்லை. கடைசியில் நாங்கள் சிறப்பாக ஆடி கோப்பையை வென்றுள்ளோம்.

    இவ்வாறு டோனி கூறினார்.#IPL2018 #CSK #Dhoni
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 11வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நான்கு தடவை தோற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #CSKvSRH
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஐதராபாத் அணி சென்னை அணியிடம் பெற்ற நான்காவது தோல்வி இதுவாகும்.

    முன்னதாக, கடந்த 22-ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இதேபோல், கடந்த 13-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், ஐதராபாத் அணியும் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வென்றது.

    ஏப்ரல் 22-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், ஐதராபாத் அணியும் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #CSKvSRH
    ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரின் 11வது சீசனில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளது. #IPL2018 #SpecialAwards
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷேன் வாட்சன் வென்றார்.

    மேலும், இந்த தொடரில் வீரர்கள் பெற்ற விருதுகளின் விவரம் வருமாறு:

    எமர்ஜிங் பிளேயர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது ஆகியவற்றை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் கைப்பற்றினார்.



    மொத்தம் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் ஆண்ட்ரு டைக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.

    இதேபோல், 17 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.

    சூப்பர் ஸ்டிரைக் வீரர் மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர் ஆகிய விருதுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.

    டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டிரெண்ட் போல்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரர் விருது வழங்கப்பட்டது.



    இன்னவேடிவ் திங்கிங் வீரருக்கான விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனிக்கு வழங்கப்பட்டது.

    மேலும், இந்த தொடரின் பேர் பிளே விருது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. #IPL2018 #SpecialAwards
    மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய சென்னை அணி, ரூ.20 கோடி பரிசுத்தொகையுடன் கோப்பையை வென்றது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார்.



    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்.

    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    டுபிளசிஸ் 10 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஐதராபாத் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது.

    சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வாட்சன் 57 பந்துகளில் 8 சிக்சர், 11 பவுண்டரியுடன் 117 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் விருதை ஷேன் வாட்சன் கைப்பற்றினார். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 

    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆட்டத்தின்  4 வது ஓவரில் டுபிளசிஸ் அவுட்டானார். 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    11-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.
    இந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.



    12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. 13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

    14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார். இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது சென்னை அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது.

    இறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 

    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார், வாட்சனுக்கு மெய்டனாக வீசினார். 2-வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மீண்டும் 3-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

    4-வது ஓவரை சந்தீப் சர்மா வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் டுபிளெசிஸ் கேட்சாகி வெளியேறினார். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். 5-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 6-வது ஓவர் சந்தீப் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணி அதிரடியாக விளையாடி 16 ரன்கள் எடுத்தது. 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



    9-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 16 ரன்களை குவித்தது. தொடர்ந்து 10வது ஓவரை ரஷித் கான் வீச ஒரு பவுண்டரியுடன் 8 ரன் மட்டுமே கிடைத்தது.

    11வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.
    இந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.

    12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. இந்த  ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை சந்திப் சர்மா வீசினார். இதில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 27 ரன்களை குவித்தது. 13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

    14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார். இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். இந்த ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரியுடன் 14 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.

    15-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து சென்னை அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    ×