என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஐபிஎல் 2018
திருச்சி:
திருச்சியில் நடைபெற்ற விழாவில் நடிகர் எஸ்.வி. சேகர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதார அடிப்படையில் தான் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். அவரது ஆசையை மோடி நிறைவேற்றி இருக்கிறார். இப்போது மோடி அஸ்திவாரம் தான் போட்டு இருக் கிறார். அதை கண்டே பலர் ஆடிப்போய் இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் திருடர்கள், கடத்தல் காரர்களுக்கு தான் பாதிப்பு.
திருடர்களுக்கு போலீசை கண்டால் பிடிக்காது. அதனால் தான் எதிர்க்கட்சிகளுக்கு மோடியை பிடிக்க வில்லை. வெறும் அரசியல் மட்டுமே செய்து கொண்டு இருக்கக்கூடாது. அடுத்த தலைமுறையை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறவர்களை தட்டி விடக்கூடாது.
தமிழ்நாட்டில் மோடியை பற்றி பேசுவது அனைத்தும் கற்பனை கதைகள். மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது. தேர்தலில் மோடி 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் பிரதமராக வருவார்.
மோடி கொண்டு வந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அங்கீகரித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்து மதத்தை கேவலப்படுத்தக்கூடிய எந்த செயலையும் மற்ற மதத்தினர் ரசிப்பது இல்லை என்பது தான் உண்மை.
இந்துக்கள் பொறுமைசாலிகள். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை 23-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணும்போது தெரிந்து கொள்வார்கள். கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. நான்கூட முன்பு கமல்ஹாசன் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தவிர்க்க முடியாத இடத்துக்கு வருவார் என்று கூறி இருந்தேன். ஆனால் அவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கமல்ஹாசனின் கட்சியே இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு மொகாலியில் அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது.
ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்டீவன் சுமித், லியாம் லிவிங்ஸ்டோன், கே.கவுதம் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, சோதி மற்றும் அறிமுக வீரராக ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் சாம் குர்ரன், சர்ப்ராஸ் கான், ஆண்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், முஜீப் ரகுமான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர். உனட்கட்டின் பந்து வீச்சில் 2 சிக்சர் பறக்க விட்ட கெய்ல் சற்று நிதானமாக செயல்பட்டார். 6-வது ஓவர் வரை களத்தில் நின்ற கெய்ல் (30 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 26 ரன்கள் (12 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.
இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு, தடுமாறிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் டேவிட் மில்லர் கைகோர்த்தார். இருவரும் ரன்ரேட்டை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். சோதி, உனட்கட்டின் ஓவர்களில் சிக்சர்கள் விரட்டிய இவர்கள் ரன்ரேட்டை 9 ரன்களை தொட வைத்தனர்.
அணியின் ஸ்கோர் 152 ரன்களாக உயர்ந்த போது ராகுல் 52 ரன்களில் (47 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் (5 ரன்), மன்தீப்சிங் (0) அடுத்தடுத்து வெளியேற ரன்ரேட் கொஞ்சம் தளர்ந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (40 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அதிர்ஷ்டவசமாக எஞ்சிய பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் அஸ்வின் ஒரு பவுண்டரியும், 2 சிக்சரும் விரட்டி தங்கள் அணி சவாலான ஸ்கோரை அடைவதற்கு உதவினார்.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அஸ்வின் 17 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதன் பிறகு பஞ்சாப் பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ராஜஸ்தான் திகைத்து போனது. திரிபாதி 50 ரன்னிலும் (45 பந்து, 4 பவுண்டரி), அறிமுக வீரர் டர்னர் ரன் ஏதுமின்றியும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 ரன்னிலும், கேப்டன் ரஹானே 26 ரன்னிலும் வீழ்ந்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரில் அந்த அணி ஸ்ரேயாஸ் கோபாலின் (0) விக்கெட்டை பறிகொடுத்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். ராஜஸ்தான் அணி சந்தித்த 6-வது தோல்வியாகும். இந்த சீசனில் 2-வது முறையாக பஞ்சாப்பிடம் தோற்று இருக்கிறது.
#KXIPvRR

அடுத்த ஆண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் ஏற்படும். அத்துடன் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30-ந்தேதி நடைபெறுகிறது.
ஐசிசி விதிமுறைப்படி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அணிகள் தயாராகிவிட வேண்டும். மேலும், லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி ஐபிஎல் தொடருக்கும் அதன்பின் இந்திய அணி விளையாடும் தொடருக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் மே 15-ந்தேதிக்கு முன் ஐபிஎல் தொடரை பிசிசிஐ முடித்தாக வேண்டும்.

இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடத்தப்பட வேண்டும். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே தலைவர்கள் பிரசாரம் என தேர்தல் களைகட்டும். இதனால் போலீஸ் தரப்பில் இருந்து எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அறிவித்துவிடும். 2009 மற்றும் 2014 சீசனில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. 2009-ல் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ல் பாதி தொடர் ஐக்கியர அரபு எமிரேட்ஸிலும் நடைபெற்றது.
இதனால் அடுத்த வருட சீசனை மார்ச் 29-ந்தேதியிலேயே தொடக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என திட்டவட்டமாக தெரியாத நிலை உள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தல் குறித்து தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகுதான் பிசிசிஐ 12-வது சீசனை பற்றி முழுவதுமாக திட்டமிட முடியும்.
ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் பெற்ற வெற்றியை ரசிகர்கள் விமர்சையாக கொண்டி வருகின்றனர். இந்த அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சிறப்பாக விளையாடினார்.

அவர் போட்டியின் போது நடனமாடி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஓய்வறையில் சக வீரர்களுடன் விளையாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், பிராவோ நேற்று டுவிட் செய்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் உற்றாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'வி ஆர் த கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்ற இந்த பாடலை பிராவோ தானே எழுதி பாடியுள்ளார். டோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்றவர்களை பெருமைப்படுத்தி பாடப்பட்டுள்ள இந்த பாடலை ரசிகர்களுக்காக வெளியிட்டதாக பிராவோ தெரிவித்தார். #yellowarmy #CSK #DwayneBravo #WeAreTheKings

அவர் 17 ஆட்டத்தில் 21 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 2-வது இடம்பிடித்துள்ளார். குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 10 பந்தில் 34 ரன்கள் விளாசியதுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
ரஷித் கானின் ஆல்ரவுண்டர் திறமையை பார்த்து அசந்துபோன சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். ஆப்கானிஸ்தான் அதிபர், ‘‘ரஷித் கான் எங்கள் சொத்து. அவரை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்துக்குப் பிறகு தற்போது நாள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்திய பிறகு நான்தான் எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்பது எனக்குத் தெரியும்.

நான் போட்டி முடிந்து பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள் சச்சின் தெண்டுகர் டுவிட்டை எனக்கு ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பினர். அதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் அவருக்கு பதில் அனுப்புவதற்கு முன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என எழுத வேண்டும் என்றே தெரியவில்லை. இறுதில் அவருக்கு பதில் அளித்தேன்.
ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே அந்த டுவிட்டை பார்த்திருக்கும். ஆப்கானிஸ்தானில் தெண்டுல்கர் மிகமிக பிரபலமானவர். என்னை அவர் வாழ்த்தியிருப்பது கண்டு ஒவ்வொருவரும் ஆச்சர்யம் அடைந்திருப்பார்கள். அவருடைய வாழ்த்து இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்’’ என்றார்.
ஐபிஎல் 2018 தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.
கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இறுதி போட்டி முடிவடைந்த பின் வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது டோனி மற்றும் பிராவோ இடையே சிறிய போட்டி நடைபெற்றது. இருவரும் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு மூன்று ரன்கள் ஓட முடிவு எடுத்தனர். யார் முதலில் வருவார்கள் என இருவருக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இதனை மற்றவர்கள் கண்டு ரசித்தனர்.
இருவரும் வெற்றி பெற வேகமாக ஓடினர். இறுதியில் கேப்டன் கூல் டோனி முதலில் கோட்டை தொட்டு வெற்றி பெற்றார். எவ்வளவு வேகமாக ஓடினாலும் டோனியின் வேகத்தை பிராவோவால் ஈடுசெய்ய முடியவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ரசிகர்கள் இதனை கண்டு ரசித்து வருகின்றனர். #IPL2018 #CSK #MSDhoni #Bravo
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மாலை சென்னை திரும்பியது. 2 ஆண்டு தடைக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டி தொடரிலேயே சென்னை அணி கோப்பையை வென்று அசத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரர்களை வாழ்த்தி ரசிகர்கள் கோஷம் எழுப்பினார்கள். விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தனி பஸ் மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கு வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சென்னை ஓட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஷேன் வாட்சன் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தார். பிக்பாஷ் போட்டியில் அவரது ஆட்டத்தை கவனித்து தான் அணிக்கு தேர்வு செய்தோம். அவர் எங்களது நம்பிக்கைக்கு தகுந்தபடி சிறப்பாக செயல்பட்டார். எங்கள் அணியில் இடம் பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றி கொண்டு நன்றாக ஆடினார்கள். சென்னை அணியின் வெற்றியில் கேப்டன் டோனியின் தாக்கம் மிகவும் முக்கியமானது. திறமையான கேப்டனான டோனி வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத் திறனை வெளிக்கொண்டு வரும் சக்தி படைத்தவர். டோனியின் பலத்தையும், அணியின் நல்ல ஆட்ட திட்டத்தையும் நாங்கள் சரியாக செயல்படுத்தினோம்.
இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.
அப்போது சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உடனிருந்தார்.