என் மலர்
தஞ்சாவூர்
- நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
- என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டு, ரூ.50 ஆயிரம் செலவு செய்தார். ஆனால் போதுமான நெல் விளைச்சல் இல்லாமல் செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் அடைந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த அவர் இந்த முறை நெல் சாகுபடி செய்யாமல் விவசாய நிலத்தை அப்படியே தரிசாக விட்டு விட்டார். அதன் பிறகு ஜெயராஜ் தனது வயலுக்கு செல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜெயராஜிடம் உங்கள் வயலில் நெல் கதிர் விட்டு பயிர்கள் தலைசாய்ந்துள்ளது. இன்னும் ஏன் கதிரை அறுக்காமல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், கடந்த சில மாதங்களாக வயலுக்கு செல்லாமல் இருந்து மீண்டும் வயலை பார்க்கச் சென்றபோது அங்கு நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
இதுபற்றி ஜெயராஜ் கூறுகையில், கடந்த முறை நெல் விவசாயம் செய்து நஷ்டம் அடைந்த நிலையில் அதற்குப்பின் நெல் விவசாயத்தையே மறந்து விட்டு தான் வேறு தொழிலை பார்க்க சென்று விட்டேன். இந்த நிலையில் என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.
நான் நெல் விதை விதைக்கவில்லை, நடவு நடவில்லை, தண்ணீர் பாய்ச்சவில்லை, உரம் வைக்கவில்லை ஆனால் ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை வீதம் 16 மூட்டை நெல் விளைந்திருக்கிறது. இது என்னை மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த முறை நெல்கதிர் அறுத்து விட்டு, வயலை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டேன்.
இந்நிலையில் கதிர் அறுத்த பிறகு இருந்த அடியில் உள்ள அருப்பு தாழிலிருந்து பயிர் வளர்ந்து அதன் மூலம் நெல் விளைந்துள்ளது என்னைப்போன்ற விவசாயிகளுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத நெல் விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை விளைந்திருப்பது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது என்றார்.
- கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.
பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
- அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில்.
- கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.
- எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பா.ஜனதா தடுமாறி போய் இருக்கிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த பேச்சுவார்த்தையில் விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்குபெறும். 10-க்கும் அதிகமான கட்சிகளை கொண்ட ஒரு கட்டுக்கோப்பான கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.
பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால்தான் இடையிலேயே சிதறி போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர், பா.ஜனதா கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வழக்கம்போல பா.ம.க தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொண்டு எந்த கூட்டணியில் சேரப்போகிறோம் என்பதை ஒரு சூசகமாக வைத்துள்ளனர். தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளதுடன் தமிழக மக்களின் ஆதரவை பெற்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
குடியரசு தலைவர் உரையில் என்ன சொல்லப்பட்டிருந்ததோ, அதே கருத்துகள் அடங்கிய ஒன்றாகத்தான் மத்திய அரசின் பட்ஜெட் உரையும் அமைந்துள்ளது. எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை. ஒரு வெற்று அறிக்கைபோல இந்த பட்ஜெட் அறிக்கை உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் உள்ள இந்த பட்ஜெட் பா.ஜனதாவினருக்கே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
- நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.
இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.
மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.
பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
- அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.
திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை வந்த அவருக்கு அ.தி.மு.க. கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தஞ்சை வல்லம் பிரிவு சாலையில் 65 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
இதையடுத்து கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நான் முதல் முதலாக அ.தி.மு.க., பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு வந்துள்ளேன். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பது போல், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி முகத்தை இந்த கூட்டத்தை பார்த்தே நிர்ணயித்து விடலாம். அடுத்த தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும்.
இங்கிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது எதிரிகள் நமக்கு எதிரே இல்லை என்பதை நீருபித்துக்காட்டுகிறது.
இந்த இயக்கத்திற்கு எவ்வளவு துரோகம் செய்தார்கள். அழிக்கவும், முடக்கவும் பார்த்தார்கள். அத்தனையும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டது. நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்றோம். தேர்தல் ஆணையத்தின் மூலமாக நல்ல தீர்வை கண்டோம். அ.தி.மு.க.,வை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த இயக்கம், ஜெயலிலதா கட்டி காத்த இயக்கம்.
நமக்கு யார் கெடுதல் நினைத்தாலும், அவர்கள் தான் கெட்டு போவார்கள். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, வலிமையான கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி. இதில் யார் உழைக்கின்றார்களோ உச்சபட்ச நிலையை அடைவார்கள். நீங்களும் வரலாம். இது அ.தி.மு.க.,வில் தான் முடியும். வேறு எந்த கட்சியிலும் முடியாது. இந்தியாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., எதிர்காலத்தில் நிச்சயம் ஆட்சிக்கு வரும்.
எவ்வளவு கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு எட்டு மாதங்களாகியும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு, திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக்கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், நுாறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துக்கொண்டு இருக்கிறார்.
மக்களுக்கு எல்லாம் இது நன்றாகவே தெரியும். விஞ்ஞான உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது.
தி.மு.க.,வை பொறுத்தவரை அது குடும்பகட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் குறிக்கோள். மக்களை பற்றி கவலை கிடையாது.
அ.தி.மு.க., மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தது. ஆனால் தி.மு.க.,வில் விவசாயத்திற்கான தண்ணீர் கிடைப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் நிவாரணம் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரணமாக 12 ஆயிரம் ரூபாய் தான் வழங்கினார்கள். ஆனால் அ.தி.மு.க., 20 ஆயிரம் ரூபாய் வழங்கியது.
தற்போது சம்பா, தாளடிக்கு தண்ணீர் இல்லை. ஆனால் மத்திய அரசிடமும் ,கர்நாடக அரசிடமும் போராடி நமது பங்கு நீரை பெற்று தரவில்லை. இருப்பினும் பயிரிட்ட விவசாயிகளுக்கு கனமழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வேளாண்மையை பாதுகாத்தோம்.
விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறந்தோம்.
காவிரி பிரச்சனைக்காக சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மூலமாக நமக்கு வரவேண்டிய காவிரி நீரை பெற்றோம். ஆனால் தி.மு.க., விவசாயிகளை எதிரிகளை போல பார்க்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. துார்வாரும் திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள்.
அ.தி.முக. ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பயிர் காப்பீடு ரூ.9300 கோடி பெற்று தந்தோம். வறட்சி நிவாரணம் கொடுத்தோம். மும்முனை மின்சார திட்டம் அமல்படுத்தினோம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தல் தான் 2026 தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மாட்டுவண்டியை தானே ஓட்டியபடி விவசாயிகளுடன் ஊர்வலமாக சென்றார் தொடர்ந்து அங்கு சிறப்புரையாற்றினார். இதையடுத்து அவர் அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
- காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வேளாண்மையை பாதுகாத்தோம்.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து தங்கினார்.
பின்னர் இன்று காலை 9 மணியளவில் திருச்சியில் இருந்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட எல்லையான செங்கிப்பட்டி பகுதியில் திருவையாறு தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வல்லம் பிரிவு சாலைக்கு சென்றார். அங்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு முடிந்த பின்னர் அங்குள்ள 65 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க கொடியேற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டிற்கு குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் எண்ணற்ற பலவளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தியது அ.தி.மு.க. அரசு தான். காவரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வேளாண்மையை பாதுகாத்தோம். நாம் ஆட்சியில் இருந்த வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. நீர்வள மேம்பாடு சிறப்பான முறையில் செயல் படுத்தப்பட்டது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஒரத்தநாடு சென்ற அவருக்கு ஒரத்தநாடு தொகுதி சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடனும் தாரை தப்பட்டத்துடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்புக்கு பின்னர் பிற்பகலில் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு செல்கிறார். பட்டுக்கோட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தெற்கு மாவட்ட செயலாளருமான சி.வி.சேகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் மதுக்கூர் துரை செந்திலின் அண்ணன் ஆதிமுத்து வள்ளாள தேவர் உருவப் படத்தினை திறந்து வைத்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருநல்லூரியில் தமிழ்நாடு பாடநூல் வாரிய முன்னாள் தலைவர் தங்கமுத்து, விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரின் தாயார் மறைந்த சொர்ணத்தம்மாள் படத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
பின்னர் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். இதையடுத்து மாலையில் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து மாலை 6 அளவில் திருச்சிக்கு காரில் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் தஞ்சை மாவட்ட வருகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரை வரவேற்று பிளக்ஸ் பேனர், கொடி கம்பங்கள், ஆர்ச்சுகள், பிரமாண்ட கட் அவுட்கள், தோரணைகள் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி வருகையால் தஞ்சை மாவட்டம் விழாக்கோலம் பூண்டது.
- ஜல்லிக்கட்டு போட்டிய மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
- காளைகளை வீரத்தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூா்:
தஞ்சை வல்லம் அடுத்த திருக்கானூர் பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதையொட்டி காளைகள் திறந்துவிடப்படும். வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதேப்போல் காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 310 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. சில காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர். பலர் தங்களை காத்து கொள்ள தடுப்பு கம்பிகள் மீது ஏறி கொண்டனர்.
காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர்.
இதேபோல் களத்தில் நின்று விளையாடிய காளைகளை வீரர்கள் ஆக்ரோஷத்துடன் அடக்கினர்.
காளையை வீரர்கள் அடக்கும் போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
காளைகளை வீரத்தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.
காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, திருக்கானூர்பட்டி பங்கு தந்தை தேவதாஸ் இக்னேசியர் மற்றும் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
- தஞ்சை அருகே செங்கிப்பட்டி மற்றும் வல்லம் சாலையில் காலை 9 மணியவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றுகிறார்.
- பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க. சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
அதன்படி திருச்சியில் இருந்து காரில் வரும் அவர் தஞ்சை அருகே செங்கிப்பட்டி மற்றும் வல்லம் சாலையில் காலை 9 மணியவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றுகிறார்.
பின்னர் அவர் பட்டுக்கோட்டையில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
இதையடுத்து திருநல்லூரியில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்துவின் தாயார் படத்திறப்பு , கல்யாண ஓடையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் துரைசெந்தில் சகோதரர் ஆதிமுத்து வள்ளாலதேவர் படத் திறப்பு, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் இல்ல திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க. சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி.
- ராமருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேட்கின்றனர்.
திருவிடைமருதூர்:
தொடர் மழை காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமர் ஆகுவதற்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். இப்போது, 3-வது முறையாக மோடி பிரதமராக தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி. அனைத்து கட்சியினரும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். தனது வருங்கால சந்ததியினர் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மோடிக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்துள்ளனர். மக்களின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன்.
ராமருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேட்கின்றனர். ஆனால், ராமருக்கும், தமிழகத்துக்கும் ஆண்டாண்டு கால பந்தம் உள்ளது. தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ராமர் வழிபட்டுள்ளார்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
- பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;-
வருகிற 25-ந் தேதி பழனி தைப்பூசம், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், 26-ந் தேதி குடியரசு தினம் மற்றும் 27, 28 ஆகிய தேதிகள் ( சனி, ஞாயிறு) வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
எனவே பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி தைபூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .

மேலும் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பஸ்கள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 300 பஸ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை இயக்கப்படுகின்றன.
இதேப்போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும், விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயகொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் , திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமாமிர்த தொண்டைமான் சிலையை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: -
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இந்துக்களை நாங்கள் தான் வளர்த்தோம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்துக்கள் தாங்களாகவே வளர்ந்தார்கள்.

மனைவியை கூட கவனிக்க முடியாத பிரதமர், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தது தவறு. அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.






