என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money cheatting"

    • பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.
    • மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆஸ்டின் ஓக்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி திருச்சூர் பெண்ணிடம் நைஜீரிய வாலிபர் பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.

    கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடந்தமாதம் (மார்ச்) வரை ரூ.2கோடி வரை பணம் பெற்றுள்ளார். முதலில் நைஜீரிய வாலிபரின் ஏமாற்றுவேலை திருச்சூர் பெண்ணுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நைஜீரிய வாலிபரின் மோசடி செயலை அறிந்துகொண்ட அவர், அதுபற்றி திருச்சூர் நகர குற்றப்பரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், பெண்ணிடம் ரூ.2கோடி மோசடி செய்த ஆஸ்டின் ஓக்பாவை கைது செய்தனர்.

    அவரை மும்பை போலீசாரின் உதவுயுடன் கேரள போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீசாரால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில ஆன்லைன் மோசடி கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது. மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    • சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார்.
    • வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 48). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (42).

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஏலச்சீட்டு நடத்தினர். அதில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாபதி சேர்ந்து பணம் கட்டி வந்தார். இதேப்போல் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மேலும் பலரும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சடகோபன், விஜயா காலதாமதம் செய்து வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சடகோபன், விஜயா தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.29 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குபதிவு செய்து சடகோபன், விஜயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தார்.

    ×