search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "punnainallur mariamman temple"

    • ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
    • ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார்.

    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் நரேன். தற்போதும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் நரேன் இன்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

    மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார். அப்போது நீங்கள் நடிக்கும் படங்கள் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். அதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் ஆவணி தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த மாதம் 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 14-ந் தேதி முத்துப்பல்லக்கு விடையாற்றி விழாவும் நடந்தது.

    ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை கொடியிறக்கும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழாவும், 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தெப்ப விடையாற்றி விழாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    தஞ்சை காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்துச்சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
    தஞ்சை காமராஜர் மார்க்கெட் காய்கனி வர்த்தக சங்கம் சார்பில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு 43-வது ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், அன்வர், கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலம் தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்காவில் இருந்து புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடைந்தது. இதில் 100 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்னதாக வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் எடுத்துச்செல்லப்பட்டது.

    ஊர்வலம் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடைந்ததும் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் அருகே உள்ள மண்டபத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இதில் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×