search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex-army"

    • திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
    • நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் ஒருவர் வந்து அமர்ந்து மற்றவர்களுடன் சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார். திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

    பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரையும் ஓட்டு போட விடமாட்டேன் என கூறி ரகளை செய்தார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் வேட்பு மனுவும் தாக்கல் செய்யவில்லை.

    தொடர்ந்து அந்த நபரை போலீசார் வெளியேற்றினர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை முன்னாள் ராணுவீரர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
    • டிரேடிங் கம்பெனியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.புதூர் அருகே யுள்ள சர்வேயர் காலனி ஆவின் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு திருமணமாகி விஷாலினி (36) என்ற மனைவியும், ரமிசா ஜாஸ்பெல் (12) என்ற மகளும் இருந்தனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு திடீர் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண் டார். இரண்டு நாட்களாக வீட்டின் கதவு திறக்காத தோடு, உள்ளேயிருந்து துர்நாற்றம் வீசியதைடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் உடல்க ளையும் மீட்டு பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக் குப்பதிவு செய்த தல்லா குளம் போலீசார் வீட்டில் இருந்த 25 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தையும் கைப்பற்றி னர். அதில் ரியல் எஸ்டேட் தொழிலை பெண் ஒருவரு டன் இணைந்து மேற்கொண் டதாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த பெண் தனக்குரிய பங்கை தருமாறு கொடுத்த நெருக்க டியால் தற்ெகாலை செய்து கொண்டதும் தெரிந்தது.

    இதற்கிடையே ரியல் எஸ்டேட் தொழிலை போன்று டிரேடிங் கம்பெனி யிலும் ஏராளமான பணத்தை முதலீடு செய்தி ருந்தார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்த பணம் குறிப்பிட்ட காலத்தில் திரும்ப கிடைக்கா ததாலும் சமீப காலமாக அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

    இதையடுத்து தற்கொலை முடிவெடுத்த ரமேஷ், முத லில் தனது மனைவிடம் கூறியுள்ளார். அவர் இதற்கு மறுத்துள்ளார். இருந்தபோதி லும் அதனை காதில் வாங் கிக்கொள்ளாமல் மனை விக்கு வலுக்கட்டாய மாக விஷத்தை கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பாசமாக வளர்த்த மகளுக்கும் விஷம் கொடுத்து கொன்ற ரமேஷ், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் நீண்ட நேரம் கழித்து அவரும் விஷ மருந்தி தற்கொலை செய் துள்ளார்.

    ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட தற்கு தொழில் நஷ்டம் மட்டும்தான் காரணமா? அல்லது பெண் தொடர்பான பிரச்சினையில் அவர் இந்த துயர முடிவை எடுத்தாரா? என்று திருப்பாலை போலீ சார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

    ×