search icon
என் மலர்tooltip icon

    நியூசிலாந்து

    • நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
    • இன குழு பெருமையை சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க். 21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

    எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

     


    அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார்.

    ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.




    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்லாந்து:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார்.

    கடைசியாக 2022, நவம்பர் 20-ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில் தற்போது 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணி கேப்டனாக இடம்பெற்றுள்ளார்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 12-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

    இந்தாண்டு ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் திரும்பி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருடத்தின் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
    • நியூசிலாந்ததில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.

    நியூசிலாந்தில், இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், வாணவேடிக்கையுடன் நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனால், நியூசிலாந்ததில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் நடைபெற்றது.
    • முதலில் பேட் செய்த வங்காளதேசம் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மவுண்ட்மாங்கானு:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர் 4 விக்கெட்டும், சவுத்தி, மில்னே, பென் சீயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடந்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது..

    தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி நியூசிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது.

    சாண்ட்னர் ஆட்ட நாயகன் விருதும், ஷோரிபுல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    நேப்பியர்:

    வங்காளதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நீஷம் 48 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், முஸ்தபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி 42 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்காளதேசம் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக மெஹிதி ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.

    • சுமார் 3.5 லட்சம் பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்
    • புயூட்கெடெக், உணவை அதிகம் உமிழ்ந்து விடும் பழக்கம் கொண்டவை

    நியூசிலாந்து நாட்டில் சுற்றுச்சூழலை காப்பதில் முன்னணியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் ஆர்வலர்களின் ஃபாரஸ்ட் அண்ட் பர்ட் (Forest and Bird) அமைப்பு, பர்ட் ஆஃப் தி செஞ்சுரி (Bird of the Century) என்ற பெயரில், "நூற்றாண்டிற்கான பறவை" எது என்பதை தேர்ந்தெடுக்க ஒரு போட்டியை நடத்தி வருகிறது. பொதுமக்களில் பலரும், பறவைகள் ஆர்வலர்களும் இதில் பங்கு பெறுவது வழக்கம்.

    இவ்வருடம் சுமார் 200 நாடுகளில் இருந்து பலர் பங்கு பெற்று 3.5 லட்சம் பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். அதிகம் பேர் பங்கேற்றதால் வாக்களிப்பும், அதன் தொடர்ச்சியாக முடிவுகளும் தாமதமானது.

    பங்கேற்றவர்களின் முடிவுகளில், இறுதியாக புயூட்கெடெக் (puteketeke) எனும் பறவை இந்த நூற்றாண்டிற்கான பறவை என தேர்வானது.


    முதலிடம் பெற்ற இப்பறவை, ஆஸ்திரலேசியன் க்ரெஸ்டட் க்ரீப் (Australasian crested grebe) என்றும் கிரேட் க்ரெஸ்டட் க்ரீப் என்றும் அழைக்கப்படுகிறது.

    "வாக்களிப்பில் ஆரம்பத்தில் இந்த பறவை பட்டியலில் பின் தங்கியிருந்தது. ஆனால், அதன் பிரத்யேக தோற்றமும், வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற குணாதிசயங்களும் வாக்காளர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி, இதனை தேர்வு பட்டியலில் மெல்ல மெல்ல முன்னேற்றி இறுதியில் அதற்கே முதலிடம் கிடைத்தது. இப்போட்டியின் மூலமாக இப்பறவை மட்டுமின்றி, அரிதாகி வரும் பல பறவைகள் குறித்து விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது" என இந்த போட்டியை நடத்தும் ஃபாரஸ்ட் அண்ட் பர்ட் அமைப்பை சேர்ந்த நிகோலா டோகி தெரிவித்தார்.


    புயூட்கெடெக், உணவை அதிகம் உமிழ்ந்து விடும் பழக்கம் கொண்டவை.

    ஏரிகளில் காணப்படும் பறவை வகைகளை சேர்ந்த புயூட்கெடெக், உலகில் தற்போது 3 ஆயிரத்திற்கும் கீழே உள்ளது. இப்பறவை, பதிவான வாக்குகளில் 2,90,374 வாக்குகளை பெற்று, பிரவுன் கீவி (brown kiwi) பறவையை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது.

    அரிதாகி வரும் இவ்வகை பறவைகளை காக்க பல தன்னார்வலர்கள் நியூசிலாந்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 11 கிலோ மீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டதால் அதிக அளவில் உணரப்பட்டது
    • சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

    நியூசிலாந்தில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடித் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 கிலோ மீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிர்வாகம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை. இதனால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலையும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

    5 மில்லியன் மக்களை கொண்ட நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்வதால் நடுங்கும் தீவுகள் (Shaky Isles) என நகைச்சுவைக்காக அழைக்கப்படுகிறது.

    நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் அடிக்கடி நடைபெறும் பசிபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆஃப் பையர் என அழைக்கப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காயத்தால் விளையாடாமல் இருக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக அணியில் இடம் பிடித்துள்ளார்
    • வீரருக்கு அவரது குடும்பம்தான் முதல் ரசிகர் என்றால் மிகையாகாது

    இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 19-ந்தேதி தொடர் நடைபெற இருக்கிறது.

    இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும், தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொதுவாக வீரர்கள் அறிவிப்பு டுவிட்டர் மூலம் அறிவிக்கப்படும். அல்லது பத்திரிகையாளர் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கிரிக்கெட் போர்டால் அறிவிக்கப்படும்.

    ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு, தங்களது அணி வீரர்கள் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. அவர்கள் சிறந்த ரசிகர்களால் அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது குடும்பத்தினர்தான் முதல் ரசிகர் என்றால் அது மிகையாகாது.

    அந்த வகையில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள வீரர்கள் அவர்களும் குழந்தைகளின் மழலை குரல்களிலும், மனைவி மட்டும் இருப்பவர்கள் மனைவி மூலமாகவும், காதலி இருப்பவர்கள் அவர்கள் மூலமாகவும், மனைவி மற்றும் காதலி இல்லாத வீரர்கள் அவர்களின் பெற்றோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது
    • கதிரியக்க படங்களில் வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை

    தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு நியூசிலாந்து. இதன் தலைநகரம் வெலிங்டன்.

    இந்நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஒன்று ஆக்லாந்து. இங்குள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது.

    பிரசவம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது. வழக்கமான மருந்து மற்றும் மாத்திரைகளால் வலி குறையாததால், அவருக்கு எக்ஸ்-ரே எனப்படும் கதிரியக்க படங்கள் எடுக்கப்பட்டன. பரிசோதனையிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டது.

    சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கும் மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவரது வயிற்றில், சாப்பிடும் தட்டின் அளவிற்கு ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அப்பெண்ணிற்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்பொருள் வெளியில் எடுக்கப்பட்டது. அது, மருத்துவர்களால் அறுவை சிகிச்சையின் போது உபயோகப்படுத்தப்படும் அலெக்ஸிஸ் ரிட்ராக்டர் (Alexis retractor) என்பது தெரிய வந்துள்ளது.

    அறுவை சிகிச்சையில், அறுத்த தசைகளை தற்காலிகமாக விலக்கியே வைத்திருந்தால்தான் மருத்துவர்கள் கைகளாலும், உபகரணங்களை கொண்டும் சிகிச்சையை தொடர முடியும். இதற்காக பயன்படுத்தப்படும் ரிட்ராக்டர் எனப்படும் உபகரணம்தான் அப்பெண்ணின் வயிற்றில் இருந்துள்ளது.

    அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்திய இதனை, மருத்துவர்கள் கவனக்குறைவாக அப்பெண்ணின் வயிற்றிலேயே வைத்து தையல் போட்டுள்ளனர்.

    கதிரியக்க ஊடுருவலை தடுக்கும் பொருளால் உருவாக்கப்பட்டதால், அந்த உபகரணம் எக்ஸ்-ரே பரிசோதனையில் கண்டறியப்படவில்லை.

    "இது குறித்து மருத்துவமனையிலிருந்து எந்தவொரு விளக்கமும் கிடைக்கவில்லை. ஆக்லேண்டு மருத்துவமனையின் சுகாதார பராமரிப்பு, அடிப்படை தரத்திற்கும் கீழ்நிலையில் இருந்திருக்கிறது" என அந்நாட்டின் மருத்துவ துறையின் ஆணையர் இது குறித்து கூறினார்.

    அயல் நாடுகளில் மருத்துவ பராமரிப்பும், சுகாதார முறைகளும் உலகத்தரத்தில் விளங்குவதாக கருதும் போது, இது போன்ற செயல்கள் அங்கு நடப்பது வியப்பளிப்பதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஒரு கட்டிடத்தை நோக்கி மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் இருவர் உயிரிழப்பு
    • பிரபலமான ஓட்டல்கள், மால்கள் அந்த பகுதியில் இருந்ததால் பரபரப்பு

    நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துப்பாக்கிச்சூடு முக்கியமான ரெயில்நிலையம் அருகே கட்டுமான வேலை நடந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பிரபலான ஓட்டல்கள், மால்கள் உள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இன்று தொடங்கும். நாங்கள் பிஃபா உடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை'' என்றார்.

    • மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்.
    • ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    நியூசிலாந்தில் ஆக்லாந்து நகரில் மூன்று சீன உணவகங்கள் உள்ளனர். இங்கு நேற்று இரவு ஏராளமானோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகத்துக்குள் சென்று வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய 24 வயது வாலிபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • வெள்ளத்தில் சிக்கியதால் விவசாயம் தொடர்பான பொருளாதாரம் பாதிப்பு
    • தற்போது உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம்

    கொரோனா வைரஸ் தொற்று பரவிய 2020-ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை முன்னெச்சரிக்கை காரணமாக மூடியது. முக்கியமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் எல்லைகளை மூடுவதில் அதிதீவிரம் காட்டின.

    ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலே, உடனடியாக அந்த இடத்தையே தனிமைப்படுத்தியது நியூசிலாந்து. இதனால் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. வெளிநாட்டு தொடர்பை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதன்பின் நிலை சீராக பொருளாதாரம் ஓரளவிற்கு நிமிரத்தொடங்கியது.

    இந்த நிலையில் தற்போது 2020-ல் இருந்து முதன்முறையாக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த ஆண்டு முடிவில் பொருளாதார வீழ்ச்சி 0.7 சதவீதம் சரிந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 0.1 சதவீதம் குறைந்துள்ளது.

    பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலகளாவிய பொருளாதார மந்தநிலை 2023-ல் சவாலாக இருக்கும். பணவீக்கம் அதிகரிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருக்கும். வானிலை தொடர்ந்து இடையூறாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என நிதிமந்திரி கிரான்ட் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் ஆக்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பிப்ரவரி மாதம் கேப்ரியல் என்ற புயல் காரணமாக ஏற்பட்ட சேதம் ஆகியவை பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மட்டும் நியூசிலாந்து 9 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளது.

    பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து பணவீக்கம் 6.7 ஆக உள்ள நிலையில், அக்டோபர் மாதம் அங்கு தேசிய தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த விவகாரம் தலைதூக்கும் எனத் தெரிகிறது.

    நியூசிலாந்தில் விவசாயம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேவைகள் என அனைத்து துறையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    ×