என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    • ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

    கோவை:

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

    இதற்காக ஜகதீப் தன்கர் இன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

    பின்னர் சாலை மார்க்கமாக ஜகதீப் தன்கர் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். மாலை 5.40 மணி முதல் இரவு 7 மணி வரை அவர் அங்கு நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அவர் மீண்டும் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


    ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்கிறார்கள்.

    இதுதவிர மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி பிரதிமா பவுமிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

    • தற்போது உள்ள வந்தே பாரத் ரெயிலை விட புதிதாக விடப்போகும் வந்தே பாரத் ரெயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகின்றன.
    • ரெயிலுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மைசூரு வரை சென்று வருகிறது.

    தமிழக-கர்நாடக மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. சென்னை-பெங்களூரு இடையே உள்ள 362 கி.மீ.தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடைகிறது.

    சதாப்தி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 40 நிமிடங்களில் செல்கிறது. வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    தற்போது உள்ள வந்தே பாரத் ரெயிலை விட புதிதாக விடப்போகும் வந்தே பாரத் ரெயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகின்றன. வெள்ளை மற்றும் நீல கலரில் தற்போது ஓடும் வந்தே பாரத் ரெயிலுக்கு பதிலாக 'ஆரஞ்சு' மற்றும் 'கிரே' கலரில் வெளிவருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி புதிய வந்தே பாரத் ரெயிலை வருகிற 12-ந்தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை மங்களூரு வரை நீட்டிப்பு செய்து சேவையை தொடங்கி வைக்கிறார். இது தவிர தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு முக்கிய ரெயில்வே திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    புதிய வந்தே பாரத் ரெயிலில் இருக்கைகள் மேலும் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்சிகியூடிவ் சேர் காரில் பயணிகள் கால் வைப்பதற்கான வசதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய வந்தே பாரத் ரெயிலை பெங்களூரில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்த ரெயிலுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
    • 4 கால பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் 8 நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆடி, தை, அமாவாசை நாட்களிலும், மகா சிவராத்திரி அன்றும் சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதன்படி இன்று சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதலே சென்னை, திருச்சி, கோவை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் மலையேற அனுமதித்தனர்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர். மலைப்பாதையில் உள்ள சங்கிலிப்பாறை, வழுக்குபாறை, மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்ததால் அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் 4 கால பூஜைகள் விடிய, விடிய நடைபெறுகிறது. ஆனால் இந்த பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையேறிய பக்தர்கள் இன்று மாலை 4 மணிக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து விட வேண்டு மென வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு மலையடி வாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கி ஆடுகளை பலியிட்டு அன்னதானம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறை, சதுரகிரி கோவில் பகுதிளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மகா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்துவார்கள். ஆனால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி வழங்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அடித்தளமிட்டது.
    • படித்து முன்னேற ஆசைப்பட்டதைத் தவறு என்றும் கூட சிலா் பேசிக் கொண்டிருப்பாா்கள்.

    சென்னை:

    சென்னை கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துகுமரப்பா சாலையில் நடைபெற்ற விழாவில் அனிதா அச்சீவா்ஸ் அகாடமியில் பயின்ற மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.

    மேலும், பெண்களுக்கு தையல் எந்திரம், மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினாா். விழாவில் அவா் பேசியதாவது:-

    தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் 'நான் முதல்வன்' திட்டத்துக்கு அடித்தளமிட்டது அனிதா அச்சீவா்ஸ் அகாடமிதான். இங்கு 10 குழுக்களைச் சோ்ந்த பெண்களும், 6 குழுக்களைச் சோ்ந்த ஆண்களும் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.


    சிறந்த அடிப்படை கட்டமைப்புகளையும் திட்டங்களையும் நிறைவேற்றி கொளத்தூா் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக, முன் மாதிரி தொகுதியாக ஆக்கி இருக்கிறோம். இதுபோன்று செய்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்களை அழைத்து வந்துள்ளேன்.

    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் முன்னேறி வரக்கூடிய தருணங்களில் அவா்களுக்கு தடைகள் பல வரும். அந்தத் தடைகளை நியாயப்படுத்தவும் பலா் இருப்பாா்கள். படித்து முன்னேற ஆசைப்பட்டதைத் தவறு என்றும் கூட சிலா் பேசிக் கொண்டிருப்பாா்கள். இவற்றை கடந்துதான், நாம் முன்னேறியாக வேண்டும்.

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பவா்கள் பெண்கள். அத்தகைய பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றமடைய ஊக்கமளிக்கும் நாளாக, மகளிா் தினத்தைக் கொண்டாடுகிறோம்.


    திராவிட மாடல் அரசு என்பது மகளிா் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களைத் தீட்டியும், பல சாதனைகளையும் செய்து வருகிறது. நீங்களும் (பெண்களும்) தமிழ்நாடும் முன்னேற்றம் அடைந்தால்தான் எனக்கும், அரசுக்கும் பெருமை. தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் திட்டங்களை எவ்வளவோ செய்தாலும் மத்திய அரசு ஒத்துழைப்போ நிதியுதவியோ தருவதில்லை. நாம்தான் செய்து வருகிறோம்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத, அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் மத்திய அரசு அமைந்தால்தான் இன்னும் நிறைய திட்டங்களைச் செய்ய முடியும். அதற்கு உங்களுடைய அனைவரின் ஆதரவும் தேவை. நீங்கள் ஒவ்வொருவரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை உங்களுடைய குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிடச் செய்ய, மக்களவைத் தோ்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பி.கே. சேகா்பாபு, சென்னை மேயா் பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    • கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • உதயசூரியன் சின்னத்துக்கு பதில் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணி கட்சிகளுடன் நடத்தி வருகிறது.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது.

    மேலும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் உடன்பாடு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளும் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டது. அத்துடன் உதயசூரியன் சின்னத்துக்கு பதில் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு தி.மு.க. சம்மதிக்கவில்லை.

    இதனால் இக்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகளில் உறுதியாக உள்ளது.
    • மதிமுக ஒரு மக்களவை இடமும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்கிறது.

    திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

    மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.

    ஆனால் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக. இதனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. பொதுத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கூட போட்டியிட தயார் என விசிக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மதிமுக ஒரு தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடங்களையும் சேர்த்து கேட்கிறது. மேலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    திமுக விருப்ப மனு பெற்று வருகிற 10-ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்த இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாததால் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே முன்னதாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
    • பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிப்பு.

    திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளா்.

    அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

    நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடியில் போட்டியிட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார்.
    • விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அலை மோதியது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1-ம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன.

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் ஆஸ்டின் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்று வந்தனர்.

    இதில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார். அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதிக்கும், அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் கரூர் தொகுதிக்கும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலுவும், தென்சென்னை தொகுதிக்கு கழக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நெல்லை தொகுதிக்கு பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் டாக்டர் இம்மானுவேல், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் உள்பட பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். 

    இந்நிலையில், இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அலை மோதியது. ஏராளமான கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்களுடன் வந்தி ருந்து விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    40 பாராளுமன்ற தொகுதிக்கும் சுமார் 2400-க்கும் மேற்பட்டவர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்

    • மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
    • அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 127 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

    அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை எடுத்துக்காட்டு தொகுதியாக மாற்றியுள்ளோம்.

    யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.

    பெண்கள் சமூதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8.

    மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.
    • சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.

    சென்னை:

    ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த சாப்ட்வேர் மூலம் புதுப்பிப்பவர்களின் ஆதார் கார்டு, லைசென்ஸ், செல்போன் எண், ரத்த வகை ஆகியவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிவேற்ற எண் வழங்கப்படும்.

    இந்த எளிமையான நடைமுறை வந்த பிறகு காத்திருக்க வேண்டியது இல்லை.

    ஆனால் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பல முறை வந்து செல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது ஆட்கள் பற்றாக்குறை தான் இதற்கு காரணம்.

    முறைகேடுகள் நடை பெறாமல் இருப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரே பதிவேற்ற ஐடியை வைத்துள்ளார் எனக் கூறினர்.

    பாதிக்கப்பட்ட பொது மக்கள் கூறுகையில், "லைசென்ஸ் புதுப்பிக்க முடியாமல் 15 நாட்களாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்.

    எங்கள் உறவினர்கள் செங்குன்றம், அயனாவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நாளில் உரிமத்தை புதுப்பித்து விடுகின்றனர்.

    ஆனால் அண்ணா நகரில் மட்டும் இந்த அவல நிலை ஏன் ஏற்பட்டுள்ளது? என்று தெரியவில்லை. அரசு உடனே தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறினர்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர்.

    தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் 3 பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதை அடுத்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புளியங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகளிடம் உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜாவை (48) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது
    • அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அதில், பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான் என் அவர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.

    இதனை அடுத்து, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களுடன், வாக்களிப்போம் தாமரைக்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×