search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolathur"

    • மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
    • அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 127 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

    அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை எடுத்துக்காட்டு தொகுதியாக மாற்றியுள்ளோம்.

    யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.

    பெண்கள் சமூதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8.

    மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை கொளத்தூரில், தேர்தல் அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    சென்னை:

    சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி அல்லிதாமரை(வயது 56). இவர், வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட்டில் நில எடுப்பு சப்-கலெக்டராக இருந்து வருகிறார்.

    தற்போது சோளிங்கர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தனது வீட்டின் மாடியில் இவர் தனியாக வசித்து வருகிறார். தரை தளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டு உள்ளார். கடந்த 2-ந் தேதி அல்லிதாமரை, வீட்டை பூட்டிக்கொண்டு தேர்தல் பணிக்காக சோளிங்கர் சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை மாடியில் உள்ள அல்லிதாமரையின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள், இதுபற்றி அவருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 110 பவுன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து கொளத்தூர் போலீசில் அல்லிதாமரை புகார் செய்தார். அதன்பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொளத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதரவம்:

    கொளத்தூர் அஞ்சுகம் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மனைவி வசந்தா (வயது 65) இவர் இன்று அதிகாலை வீட்டின் கதவைத் திறந்து வெளியேவந்த போது மர்ம ஆசாமிகள் வசந்தா கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து கொளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர் புகாரின்பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர் அதிகாலையில் இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடை பெறுவதால் பெண்கள் வெளியில் வருவதற்கு அச்சப்படுவதாக தெரிவித்தனர்.

    வாழப்பாடி- கொளத்தூர் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொளத்தூர், பெரியதண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதண்டா, கண்ணா மூச்சி, கோவிந்தபாடி, தின்னப்பட்டி, பாலமலை, ஐயம்புதூர், ஆலமரத்துப் பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ண வாடி, குரும்பனூர், சவுரியார் பாளையம், மூலக்காடு, மாசிலா பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை மேட்டூர் அணை மின் வாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம், தும்பல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    ஆகவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தும்பல், பனைமடல், எடப்பட்டி, மாமாஞ்சி, சேலூர், பாப்பநாயக்கன் பட்டி, வெள்ளாளப் பட்டி, செக்கடிப்பட்டி, தாண்டானூர், ஈச்சங்காடு, மண்ணூர், கருமந்துறை, யு.குமாரபாளையம், கலக்காம்பாடி, பகடுப்பட்டு, குண்ணூர், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாவட்ட அதிமுக சார்பில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு உதவிபுரிந்த தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நாளை பெரவள்ளூரில் நடக்கிறது. #ADMK
    சென்னை:

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு உதவி புரிந்த தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நாளை (செவ்வாய்) மாலை கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கம் அருகில் நடக்கிறது.

    கூட்டத்துக்கு வடசென்னை வடக்கு (மே) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி. தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், நா.பாலகங்கா, வி.என்.ரவி, தி.நகர் சத்யா, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., ஜெயவர்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் பேசுகிறார்கள். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜா, நடிகர் அஜய் ரத்தினம், முன்னாள் கவுன் சிலர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். #ADMK
     
    ×