search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry snatch"

    • கொள்ளையன் கீழே தள்ளி விட்டதில் சாலையின் நடுவே பூங்கொடி கீழே விழுந்தார்.
    • வாலிபர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் அப்பகுதியில் உள்ள சவுந்தரீஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு நடந்து சென்றார்.

    சைதாப்பேட்டை கூத்தாடும் பிள்ளையார் கோவில் தெரு வழியாக பூங்கொடி நடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென பூங்கொடியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி கூச்சல் போட்டார். அதே நேரத்தில் செயினை பறித்த வாலிபர் பூங்கொடியை முன்னால் இழுத்து கீழே தள்ளிவிட்டு விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினார். பூங்கொடியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த வீட்டில் உள்ள ஒருவர் வெளியில் ஓடி வந்தார். அவரும் செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க விரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்க வில்லை. கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி மாயமானான்.

    கொள்ளையன் கீழே தள்ளி விட்டதில் சாலையின் நடுவே பூங்கொடி கீழே விழுந்தார். அப்போது எதிர்திசையில் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. ஆட்டோ டிரைவர் திடீர் பிரேக் போட்டு ஆட்டோவை நிறுத்தினார். இதில் கீழே விழுந்து கிடந்த பூங்கொடியின் அருகில் மோதுவது போல் போய் ஆட்டோ நின்றது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோ மோத வில்லை.

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ஓடி இருந்தால் பூங்கொடியின் மீது ஆட்டோ மோதி இருக்கும். இதில் உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    செயின் பறிப்பு சம்பவம் நடந்த கூத்தாடும் பிள்ளையார் கோவில் தெரு சிறிய சந்து போன்றதாகும். அங்கு பொறுத்தப்பட்டிருந்த கேமராவில் பதைபதைக்க வைக்கும் வகையிலான காட்சிகள் பதிவாகி உள்ளன.

    ஒரு கார் மட்டுமே செல்லும் அளவுக்கு காணப்படும் சாலையில் ஓரமாக வேன் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் 5 வாலிபர்கள் தொடர்ச்சியாக செல்கிறார்கள். இதில் 5- வதாக வந்த வாலிபர்தான் பூங்கொடியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைவரிசை காட்டியுள்ளார். அந்த வாலிபர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதில் குற்றவாளியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதன்படி போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    கொள்ளை சம்பவத்தில் ஒரே ஒரு வாலிபருக்கு மட்டும் தொடர்பு உள்ளதா? இல்லை அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களும் செயின் பறிப்பு கொள்ளையர்கள்தானா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது செயின் பறிப்பு கொள்ளையர்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்கவும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை விடுத்தார்.

    சென்னையில் இதற்கு முன்பும் இது போன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சைதாப்பேட்டையில் மீண்டும் நடந்துள்ள செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    தற்போது கல்லூரி விடுமுறை என்பதால், மெர்லின் டயானா ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு அவர், கணவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் அங்கிருந்து கணவன்-மனைவி இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். மார்த்தாண்டம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள், திடீரென மெர்லின் டயானா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதற்கிடையில் மெர்லின் டயானாவின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறுவனத்தினர் திரண்டனர். அவர்கள், மர்ம மனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர்.

    ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக போலீசாரிடம் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் நகரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • செட்டிமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்தவர் ராமர். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கீழமாதாபுரத்தை அடுத்த ஜெபமாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அந்த நபர்கள் ராமரின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்ற நிலையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து திடீரென சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 55 கிராம் எடை கொண்ட 2 தங்க நகைகளை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக கடையம் போலீசில் சங்கீதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நகையின் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதே சாலையில் செட்டிமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

    கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    திருவள்ளூர் அருகே மகளிர் சுயஉதவிக்குழு தலைவியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பூண்டி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாரணி. அப்பகுதியில் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இவர் திருவள்ளூரில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்த செயினை மீட்டு மகள் பிரதீபாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். தாரணி பின்னால் அமர்ந்து இருந்தார்.

    புல்லரம்பாக்கம் மாந்தோப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென தாரணி கழுத்தில் அணிந்திருந்த 8பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர். இதில் நகை அறுந்தது. 3 பவுன் நகையுடன் கொள்ளையர் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டையில் முகவரி கேட்பதுபோல் நடித்து மாற்றுத்திறனாளி பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமிலி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் செல்வி(வயது 42). மாற்றுத்திறனாளி. இவர் தனது தந்தையுடன், இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தார்.

    அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், செல்வி வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்தனர். உடனே அவரும், இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

    அப்போது 2 வாலிபர்களும், முகவரி கேட்பதுபோல் செல்வியிடம் பேச்சுகொடுத்தனர். செல்வியும், அவர்களுக்கு உரிய பதிலை தெரிவித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு வாலிபர், செல்வி கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்தார்.

    பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் மின்னல்வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இதை சற்றும் எதிர்பாராத செல்வி, திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். ஆனால் அந்த பகுதியில் உதவிக்கு யாரும் இல்லை. இது குறித்து அவர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்.
    அனுப்பானடியில் ஜவுளிக்கடை பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி வாசுகி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி லட்சுமி (28). இவர் கீழ வெளி வீதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்றார்.

    அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் லட்சுமி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார்.

    அதிர்ச்சியடைந்த லட்சுமி நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனாலும் திருடன் பெண்ணை தாக்கி நகையை பறித்துக்கொண்டு தப்பினான்.

    அந்த வழியாக ரோந்து வந்த கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் திருடனை விரட்டினர்.

    போலீசாரிடமிருந்து தப்பிக்க திருடன் அங்கு சுவர் ஏறி குதித்தார். இதில் அவர் காயமடைந்தார்.

    போலீசார் திருடனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முனியாண்டி மகன் பரத் என்பது தெரியவந்தது.

    வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்த பரத் செலவுக்காக நகையை திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    பஞ்சப்பள்ளி அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலக்கோடு:

    பஞ்சப்பள்ளி அருகே பெரிய தப்பை பகுதியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மனைவி சின்னத்தாய் (வயது70). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டு முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கியும், தாக்கியும் காதில் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கூடல்புதூர் சொக்கலிங்க நகரை சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி மீனாட்சி (வயது 65). இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று காலை மீனாட்சி கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அதில் ஒருவன் கீழே இறங்கி மீனாட்சியிடம் சிகரெட் தருமாறு கேட்டுள்ளான். அப்போது அவர் திரும்பி சிகரெட்டை எடுக்கும் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு அவன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான். இது குறித்து மீனாட்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தஞ்சையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அண்ணா காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது57). சம்பவத்தன்று இவர் மளிகை கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்தனர். அவர்கள் பொருட்கள் கேட்பது போல் கேட்டனர். இதனை நம்பிய தாமரைச்செல்வி அவர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துவைத்து கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென அந்த இரண்டு பேரும் சேர்ந்து தாமரைச்செல்வியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர். அதிர்ச்சி அடைந்த தாமரைச்செல்வி திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொல்லங்கோடு அருகே தாத்தாவுடன் நடந்து சென்ற பேத்தியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே உள்ள நெல்லிமூட்டு பாலவிளை பகுதியை சேர்ந்தவர் மரிய எப்ரோஸ் (வயது 70). இவர் தனது மகள் ஜொலினின் மகள்கனான 2 மகள்கள் பிறிசா டிரினிட், பிறிசா ஆன்டிரிட் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    இவர் நேற்று தனது 2 பேத்திகளுடன் காட்டுக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சென்று விட்டு சாலையோரமாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்ற பொது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் 2 பேர் இவரிடம் கொல்லங்கோடு செல்ல வழி கேட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பேத்தி பிறிசா ஆன்டிரிட் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மரிய எப்ரோஸ் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆவூர்:

    குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே உள்ள ராசாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50). விவசாயி. இவரது மனைவி வனஜா (45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தங்களது இரு மகன்களுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வனஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த வனஜா மர்ம நபரிடமிருந்து தங்க செயினை இறுக பிடித்து சத்தம் போட்டார். சதாசிவம் மற்றும் அவர்களது மகன்கள் எழுந்து மின்விளக்கை போடுவதற்குள் மர்மநபர் செயினை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சதாசிவம் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சதாசிவம் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பரமத்திவேலூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 60). நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி ஜேடர்பாளையத்தில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அப்போது பாப்பாத்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பாப்பாத்தி அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தை பறித்து கொண்டு மேலும் நகைகள் இருக்கிறதா என கேட்டு மிரட்டினர். ஆனால் நகையோ, பணமோ எதுவும் கிடைக்காததால் ஒரு பவுன் மோதிரத்தை மட்டும் பாப்பாத்தியிடம் இருந்து பறித்து கொண்டு 3 மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பாப்பாத்தி ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் ஒரு பவுன் மோதிரத்தை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    ×