என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொளத்தூர் தொகுதி அனைத்து நலத்திட்டங்களுக்கான மாடலாக திகழ்கிறது- மு.க.ஸ்டாலின்
    X

    கொளத்தூர் தொகுதி அனைத்து நலத்திட்டங்களுக்கான மாடலாக திகழ்கிறது- மு.க.ஸ்டாலின்

    • கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் கட்டிக் கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
    • உங்களுக்கு இது பிப்ரவரி மாதம். திமுகவுக்கு இது மாநாடு மாதம்.

    சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கலை கல்லூரி சிறப்பாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இன்றைய நாள் பெருமை கொள்ளத்தக்க நாள்.

    கல்லூரியை கட்ட சொன்னால் ஒரு பல்கலைக்கழகத்தையே கட்டியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

    கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் கட்டிக் கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

    கொளத்தூர் தொகுதிக்கு வந்து உங்களுக்காக உழைப்பதுதான் உற்சாகம். உங்களை வந்து பார்த்தால் பூஸ்ட் ஆகிவிடுவேன்.

    கொளத்தூர் தொகுதி அனைத்து நல்லதிட்டங்களுக்குமான மாடலாக திகழ்கிறது.

    கல்விதான் கடவுள். அதுதான உங்களுக்கு நிறைய கொடுக்கும். அதனால், நன்றாக படியுங்கள்.

    உங்களுக்கு இது பிப்ரவரி மாதம். திமுகவுக்கு இது மாநாடு மாதம்.

    மாணவ, மாணவியர் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×