என் மலர்tooltip icon

    டெல்லி

    • இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று மோடி அறிவித்தார்.
    • அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.

    பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    பதிலடியாக இஸ்ரேல் மீதும், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் புரட்சிகர ராணுவ படையினர் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

    ஈரான், இஸ்ரேல் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ள பிற நாடுகளில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், " அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.

    மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பும் நமது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

    நமது மக்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி தனது இஸ்ரேல் பயணத்தைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தங்களின் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

    கடந்த சில மாதங்களாக அவர்களின் ராணுவக் குவிப்பை வைத்துப் பார்க்கும்போது இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

    இருப்பினும், பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் செல்லத் தீர்மானித்தார், அங்கு அவர் மிக உயர்ந்த அளவிலான தார்மீக  கோழைத்தனத்தைக் காட்டினார்.

    இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று அவர் அறிவித்தார், அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.

    இந்த இஸ்ரேல் பயணம் வெட்கக்கேடானது, பிரதமர் மோடியின் 'நல்ல நண்பர்கள்' இருவரால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போரின் பின்னணியில் இது இன்னும் அவமானகரமானது.

    பல வாரங்களாக அதிபர் டிரம்ப், ஈரானுடன் ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

    அவர் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

    இந்திய தேசிய காங்கிரஸ் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கிறது மற்றும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

    மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.  

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 25 இல் இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணிநேரத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

    • உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.
    • இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.

    இருப்பினும், உள்நாட்டு நிலக்கரியின் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில், இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி டன் நிலக்கரியை இந்திய மின்உற்பத்தி ஆலைகள் பயன்படுத்தின.

    ஆனால், நடப்பாண்டில் இதில் 1 கோடியே 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத 2 மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது. 30 சதவீத நிலக்கரி இறக்குமதி குறைக்கப்படுகிறது.

    பொதுத்துறை நிறுவனமான கோல் இண்டியா மற்றும் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளன.

    மேலும், நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடங்கள் அருகே புதிதாக நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக நிலக்கரி வர்த்தகர் ராஜீவ் ராம்நாராயணன் என்பவர் தெரிவித்தார்.

    இந்த காரணங்களால், வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    • ஹாலிவுட்டின் மிக பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி.
    • பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனம் வாா்னா் பிரதா்ஸை வாங்குவது கிட்டத்தட்ட உறுதியானது.

    புதுடெல்லி:

    ஹாலிவுட்டின் மிக பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் திரைப்பட, தொலைக்காட்சிப் பிரிவுகளையும் அதன் ஸ்ட்ரீமிங் பிரிவையும் வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்படும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த ஒப்பந்தம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய்.

    இந்நிலையில், வாா்னா் பிரதா்ஸ் டிஸ்கவரி தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருந்து விலகுகிறோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

    இதனால், பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனம் சுமாா் 11,100 கோடி டாலா் மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் வாா்னா் பிரதா்ஸை வாங்குவது கிட்டத்தட்ட உறுதியானது. சிஎன்என் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்பட ஸ்டுடியோக்கள் இனி பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    பாராமவுண்ட் நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ள விலைக்கு வாா்னா் பிரதா்ஸை வாங்குவது லாபகரமாக இருக்காது. எங்கள் நிறுவனத்தின் நிதிநிலையைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம் என நெட்பிளிக்ஸ் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    • மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
    • இதுதொடர்பாக பேசிய கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது என்றார்.

    புதுடெல்லி:

    டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அரசுத்தரப்பு அதன் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது என தீர்ப்பில் குறிப்பிட்டது.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தலைநகர் டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்த பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கிறேன். இப்போது தேர்தல் நடந்து, அதில் பா.ஜ.க. 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன் என தெரிவித்தார்.

    பா.ஜ.க. ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது. இன்று நான் மோடிக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்துங்கள். பா.ஜ.க. 10-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன். நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் முழு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க, அவர்கள் ஒன்றாக இந்த சதியை செய்தனர் என தெரிவித்தார்.

    • கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர்.
    • இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி.

    டெல்லியில் 2021இல் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது வகுக்கப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    இதில் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    கெஜ்ரிவாலும், சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட மாதம் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இடையில் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. 

    இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு:

    தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ குற்றவியல் நோக்கமோ இல்லை

    ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

    எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

    மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

     ஆனந்தக் கண்ணீர்:

    தான் குற்றமற்றவர் என தீர்ப்பு வெளியானதும் கெஜ்ரிவால் நீதிமன்றத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதார். மணீஷ் சிசோடியா மற்றும் தனது வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோரைக் கட்டிப்பிடித்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது.

    அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். உண்மை வென்றது.

    இந்தத் தீர்ப்பு சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீதான அனைத்துப் பொய்க் குற்றச்சாட்டுகளும் இன்று தகர்ந்துவிட்டன" என்று தெரிவித்தார்.

    தீர்ப்பு வெளியானவுடன் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சமூக வலைதளங்களில் இது நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    கெஜ்ரிவாலின் இந்த விடுதலை, டெல்லி அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் மீதான இந்த ஊழல் வழக்கை முன்வைத்தே மேடை தோறும் பிரசாரம் செய்து பாஜக ஆட்சியை பிடித்தது.

    இந்த தீர்ப்பு மூலம் கெஜ்ரிவால் மீண்டும் முழு வீச்சில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தீர்ப்பு கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

    • ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது.
    • மொத்தம் 23 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

    டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.

    புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக 2022 இல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மதுபான கொள்கையில் லாபி செய்து ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

    முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலும் , துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவையும் சிபிஐ கைது செய்தது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ குற்றவியல் நோக்கமோ இல்லை

    ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

    எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

    மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

    நீதிமன்றம் அனைவரையும் விடுவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

    • சிதம்பரம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக அனுமதி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    • கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் 1.16 கோடி ரூபாய் லஞ்சம் என குற்றச்சாட்டு.

    ஏர்செல்-மேக்சிஸ் பணமோசடி வழக்கில் முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிய அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது நிலுவையில் உள்ள ஏர்செல் மேக்சிஸ் பணமோசடி வழக்கை விசாரணை செய்ய, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    2006-07 ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

    சட்டப்படி, 600 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு தான் அனுமதி அளிக்க வேண்டும்.

    ஆனால், சுமார் 3,565 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டிற்கு, சிதம்பரம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக அனுமதி அளித்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

    இதற்குப் பிரதிபலனாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் 1.16 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் ஒரு பொது ஊழியர் மீது வழக்குத் தொடர வேண்டுமென்றால், முன் அனுமதி பெறுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2024 நவம்பரில் உத்தரவிட்டது. 

    அந்த உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளதால், வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளது.

    2011 ஆம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க உள்ளது.

    ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடக்கம் முதலே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தங்களை இலக்கு வைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
    • இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர், அவரது மனைவி வழியனுப்பி வைத்தனர்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இஸ்ரேல் சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேரில் வரவேற்றார். ஜெருசலேம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடிக்கு நெசெட் சபாநாயகர் விருது வழங்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இந்த விருதை மோடிக்கு அணிவித்தார்.

    ஜெருசலேமில் நடந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியில் மோடியும், நேதன்யாகுவும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

    இரண்டாம் நாளான நேற்று பிரதமர் மோடி யாத் வாஷேம் பகுதியில் நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பிற்பகலில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்தித்தனர். இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 27 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    மாலையில் பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அதன்பின் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அவரது மனைவி சாரா ஆகியோர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், மாலை 5.50 மணிக்கு இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    • அனிதா மற்றும் அவரின் 5, 4 மற்றும் 3 வயதுடைய மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
    • நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அனிதா (27) என்ற பெண் தனது கணவர் முன்சுன் கெவாட் மற்றும் 5, 4 மற்றும் 3 வயதுடைய மூன்று மகள்களுடன் டெல்லியில் வசித்து வந்தார்.

    முன்சுன் கெவாட் ஆசாத்பூர் மண்டியில் காய்கறி வியாபாரியாகப் பணியாற்றி வந்தார். அனிதா 2 மாத கர்பிணியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை 8:07 மணியளவில் காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அனிதா மற்றும் அவரின் 3 மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

    நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்திற்குப் பிறகு பெண்ணின் கணவரான முன்சுன் கெவாட் தலைமறைவாகியுள்ளார். அவரே இந்த கொலையை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

    கொலை செய்வதற்கு முன்னதாக, மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கணவர் மது அருந்தச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆண் குழந்தை இல்லை என்ற ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் புலனாகி உள்ளது.

    கொலை வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான முன்சுன் கெவாட்டை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
    • ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    புதுடெல்லி:

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், 'பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என்று ராஜேந்திர பாலாஜி கோரி இருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    மேலும் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே போன்று அவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் ஏற்கனவே ஐகோர்ட்டில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் இனிமேல் அவர் மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று வெளிநாடு செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ளது
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    8ம் வகுப்பு NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இதுகுறித்து நீதித்துறையின் தலைவராக தனது எதிர்ப்பை பதிவு செய்வதாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் இது ஒரு திட்டமிட்ட சதி போலத் தோன்றுவதாகவும் காட்டமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதில், "8ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மன்னிப்பு கோரியது. நீதித்துறை ஊழல் பாடத்தை புத்தகத்தில் சேர்ந்தவர் தண்டனையை ஏற்றுக் கொள்வார் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா விளக்கம் அளித்தார்.

    பாடத்திட்டம் முழுமையாக மாற்றப்படும் என்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் இனி அந்த பணியில் தொடரமாட்டர் என்றும் துஷார் மேத்தா உறுதி அளித்தார்.

    இதையடுத்து நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட NCERT-ன் எட்டாம் வகுப்பு பாடத்திற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    நீதித்துறை ஊழல் என்ற பாடம் மூலம் நீதித்துறை மீது துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் சொட்டுகிறது என்று காட்டமாக தெரிவித்த தலைமை நீதிபதி, பாடப்புத்தகம் தயாரித்தோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.

    • NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ளது
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    8ம் வகுப்பு NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இதுகுறித்து நீதித்துறையின் தலைவராக தனது எதிர்ப்பை பதிவு செய்வதாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் இது ஒரு திட்டமிட்ட சதி போலத் தோன்றுவதாகவும் காட்டமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "8ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

    நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

    ×