என் மலர்tooltip icon

    இந்தியா

    • பஹல்காமில் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் காயமடைந்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரனை முதலமைச்சர் நலம் விசாரித்தார்.

    பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் மற்றும் அவர் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்முவின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்கள் குண்டடிப்பட்டு புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது 'அவரது மருத்துவ மற்றும் பிற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி அளித்து சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் முதலமைச்சர் அவர்கள், புதுடெல்லி சென்றிருந்த போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியினால் நடைபெற்ற சிகிச்சையின் காரணமாக நலம் பெற்று இல்லம் திரும்பிய டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்களும் அவர் குடும்பத்தாருமான அவரது துணைவியார் டாக்டர் மநயன்தாரா, தந்தையார் திரு பி. ஆறுமுகம். மாமனார் டாக்டர் டி.கே.மணிகுமார், மாமியார் டாக்டர் ஜெ.சித்ரா, மாமன் டாக்டர் வேதாந்த சீனிவாசன் ஆகியோர் மாபுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் இன்று (08-08-2025) காலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இற்றிகழ்வின் போது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், வி.செந்தில்பாலாஜி, அமைச்சர் தங்கம் தென்னரக, கழக விவசாய அணிச் செய்வாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்,விஜயன், செய்தி தொடர்பு தலைவர் டி கே.எஸ்.இளங்கோவன் ஆகிடியோர் உடனிருந்தனர்.

    • பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
    • இது வரி முறையில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

    கடந்த பிப்ரவரி 13 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.

    டெல்லியில் இன்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மசோதா திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் நேரடி வரி கட்டமைப்பின் அடிப்படையாக இருந்து வரும் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை மாற்றும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில் பைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கி, இந்த மசோதாவின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த புதிய பதிப்பு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய மசோதா ஆகஸ்ட் 11 ஆம் தேதி மக்களவையில் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும். இது வரி முறையில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.  

    • எடப்பாடி பழனிசாமியின் காரில் செல்லூர் ராஜு ஏற முயன்றார்.
    • வேறு காரில் வருமாறு செல்லூர் ராஜுவிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காரில் செல்லூர் ராஜு ஏற முயன்றபோது அந்த வாகனத்தில் ஏற வேண்டாமென எடப்பாடி பழனிச்சாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வேறு காரில் வருமாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியதை அடுத்து செல்லூர் ராஜு வேறு காரில் ஏறி பயணித்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனையடுத்து செல்லூர் ராஜு மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய செல்லூர் ராஜு, "என் மீது எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிருப்தியும் இல்லை. காரில் இடமில்லாத காரணத்தால்தான் என்னால் அந்த வாகனத்தில் செல்ல முடியவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

    • நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார்.
    • பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நீதிமன்றத்திற்கு வர மாட்டார் எனத் தகவல்

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.

    அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார். ஆனால் உடல்நலக் குறைவால் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை. ஆனாலும் காணொலி வாயிலாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் பேச்சுவார்த்தையில் ராமதாஸ் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

    • டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
    • மக்களவைத் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்காத 1 கோடி புதிய வாக்காளர்கள் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

    2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக நேற்று, தேர்தல் ஆணைய தரவுகளை காண்பித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    கர்நாடகாவில் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டன, மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு உள்ளிட்ட 5 வழிகளில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?, வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?, வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்?, எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்?, பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? உள்ளிட்ட 5 கேள்விகளை ராகுல் எழுப்பினார்.

    அவரிடம் தரவுகளையும், எழுத்துபூர்பமான பிரகடனத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

    இதற்கிடையே இன்று பெங்களூருவில் நடைப்பெற்ற தேர்தல் முறைகேடுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்குகளை திருடித்தான் மோடி பிரதமராகி உள்ளார் என என்னால் நிரூபிக்க முடியும்.

    மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் 4 மாதங்களுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது. இது ஒரு ஆச்சரியமான முடிவு. நாங்கள் தரவுகளை ஆய்வுசெய்தபோது, 1 கோடி புதிய வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததை அறிந்தோம்.

    மக்களவைத் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்காத 1 கோடி புதிய வாக்காளர்கள் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இந்தப் புதிய வாக்காளர்கள் எங்கெல்லாம் வாக்களித்தார்களோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெற்றது" என்று தெரிவித்தார்.

    • விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • முன்னதாக கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்தது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சூரிய உதயம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று ( ஆகஸ்ட் 08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மைத்துனரின் திருமணத்திற்கு பைக்கில் மனைவி மைஃப்ரீன் உடன் சென்று கொண்டிருந்தனர்.
    • மேலும் மூன்று பேருடன் சேர்த்து இந்த கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டித்த கணவரை தனது காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்துள்ளார்.

    நேற்று காலை, ஷாநவாஸ் (28) ஷாம்லி மாவட்டத்தில் தனது மைத்துனரின் திருமணத்திற்கு பைக்கில் மனைவி மைஃப்ரீன் உடன் சென்று கொண்டிருந்தபோது, 4 இளைஞர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அவர்கள் ஷாநவாஸை கட்டைகளால் அடித்து, கத்தியால் பலமுறை குத்தினர்.

    பின்னர் குற்றம் அவர்களின் ஒருவன் ஷாநவாஸை துப்பாக்கியால் சுட்டான். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயமடைந்த ஷாநவாஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஷாநவாஸ் திருமணத்துக்கு மொய் எழுத எடுத்துச் சென்ற ரூ.1.5 லட்சம் ரூபாய் மற்றும் அவரது பைக் காணாமல் போனதால், இது ஒரு கொள்ளை கொலை என்று போலீசார் சந்தேகித்தனர்.

    இருப்பினும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பைக்கை போலீசார் கண்டுபிடித்து, அது ஒரு கொள்ளை அல்ல என்று முடிவு செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன், தசாவர் (Tasawer) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் இருவரும் திட்டம் தீட்டி இந்தக் கொலையைச் செய்ததும் தெரியவந்தது.

    தசாவர் ஷாநவாஸின் நெருங்கிய உறவினர். தனது மனைவி தசாவருடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு வைத்திருப்பதை ஷாநவாஸ் அறிந்திருந்தார். இதை அவர் கடுமையாக எதிர்த்ததால், அவரைக் கொல்ல அவர்கள் திட்டம் தீட்டினர். மேலும் மூன்று பேருடன் சேர்த்து இந்த கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் தசாவர் மற்றும் மற்றொரு குற்றவாளியை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன் மற்றும் மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.   

    • கண்மாயின் வடிகால் பகுதியில் பொதுமக்கள் மண் எடுத்தனர்.
    • மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா சித்தரம்பூர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பயன்படுத்த, அதே பகுதியில் உள்ள கண்மாயின் வடிகால் பகுதியில் பொதுமக்கள் மண் எடுத்தனர்.

    குறிப்பிட்ட ஆழத்தில் மண் எடுக்கையில் சுமார் 7 அடிக்கு மேல் உயரமான குருது போன்று காணப்பட்டது. இதில் ஒரு தாழி உடைந்த நிலையில் மற்றொன்று முழுமையாக காணப்பட்டது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் கீழடியை போன்று எங்கள் பகுதியில் முதுமக்கள்தாழி போன்ற பழங்காலத்து பொருட்கள் காணப்படுகிறது. இது தொடர்பாக தொல்லியல் துறை மூலம் முழுமையான ஆய்வு நடத்தி மறைந்திருக்கும் மற்ற தாழிகளையும் கண்டுபிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
    • 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் கொடுத்துள்ளார்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

    அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பரிதாபங்கள் கோபி - சுதாகருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிடர் விடுதலை கழகத்தினர், " சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகருக்கு மிரட்டல் எடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வெறி கும்பல்கள் கோபி, சுதாகரை மிரட்டி வருவதால் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

    மேலும், பெரியார் ,அண்ணா விருது போல் சமூக நலன் கொண்டு செயல்படும் கோபி - சுகாதருக்கு தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் . பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சின்ன சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தினை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு விற்பனை செய்ததை கண்டித்தும், திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அமைந்திருக்கும் காகபுஜண்டா சித்தா மகரிஷி கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க வலியுறுத்தியும் அலுவலக பூட்டை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் வெளியில் நின்ற உதவி கலெக்டர் காரின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    • சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்காந்தி மதிநாதன் ஐகோர்ட் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கை மாவட்டம் மல்லான் கோட்டை கிராமத்தில் "தி மெகா புளூ மெட்டல் ஸ்டோன் கிரஷர்" என்னும் பெயரில் கல்குவாரி செயல்பட்டு வந்தது.

    அந்த குவாரியில் ஏராளமானோர் தினக்கூலிகளாக பணியாற்றி வந்தனர். பெரிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து எம்சாண்ட் தயாரித்து இரவு நேரத்திலும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடந்த மே மாதம் 20-ந்தேதி காலை கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக எஸ்.எஸ். கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. மாவட்ட கலெக்டர், இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி மாவட்ட கலெக்டர் சட்ட விரோத குவாரியைத் தடுக்க சிறப்பு குழுவை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆகவே 6 நபர்களின் இறப்பிற்கு காரணமான கல் குவாரி விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை கைது செய்யவும் இல்லை. மேலும் கல்குவாரிக்கு குத்தகை காலம் முடிந்து விட்டது. ஆனால் முடிந்து விட்ட குத்தகையை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ரத்து செய்வதாகவும் அறிவித்தார். இதெல்லாம் கேலிக்கூத்தான விஷயமாக உள்ளது.

    எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு குழுவை அமைக்கவும், மல்லான்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிங்கம்புணரி தாசில்தார், சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர், எஸ்.எஸ். கோட்டை போலீஸ் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிணாய் காஸ், காலாவதியான குவாரியில் ஆறு பேர் நசுங்கி உயிரிழந்துள்ளனர். முறையாக கமிட்டி அமைத்து கண்காணிக்காததே விபத்துக்கு காரணம். எனவே குவாரி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

    அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பொழுது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
    • கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்.

    வருகிற 2026 சட்டசபை தேர்தலை கருத்தில்கொண்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பேரில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

    'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலா விஜயகாந்த் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    மாநிலங்களவை இடம் ஒதுக்குவதில் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே பிணக்கு ஏற்பட்டதால், தற்சமயத்திற்கு யாருடனும் கூட்டணி இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில் திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.சி.வீரமணி கூறியதாவது:

    * தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் தொடர்வதற்கு அ.தி.மு.க. தயாராக உள்ளது.

    * கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×