காரில் ஏற்ற மறுத்த எடப்பாடி பழனிசாமி - செல்லூர் ராஜு விளக்கம்

எடப்பாடி பழனிசாமியின் காரில் செல்லூர் ராஜு ஏற முயன்றார். வேறு காரில் வருமாறு செல்லூர் ராஜுவிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
காரில் ஏற்ற மறுத்த எடப்பாடி பழனிசாமி - செல்லூர் ராஜு விளக்கம்
Published on

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காரில் செல்லூர் ராஜு ஏற முயன்றபோது அந்த வாகனத்தில் ஏற வேண்டாமென எடப்பாடி பழனிச்சாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வேறு காரில் வருமாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியதை அடுத்து செல்லூர் ராஜு வேறு காரில் ஏறி பயணித்தார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனையடுத்து செல்லூர் ராஜு மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய செல்லூர் ராஜு, "என் மீது எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிருப்தியும் இல்லை. காரில் இடமில்லாத காரணத்தால்தான் என்னால் அந்த வாகனத்தில் செல்ல முடியவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com