search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோண்டா"

    • ஹோண்டா எலிவேட் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கியது.
    • இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ஜூன் 2023 மாதத்தில் 5 ஆயிரத்து 80 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. வெளிநாடுகளுக்கு 2 ஆயிரத்து 112 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 7 ஆயிரத்து 834 யூனிட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு 2 ஆயிரத்து 502 யூனிட்களையும் ஏற்றுமதி செய்து இருந்தது.

    "ஜூன் மாத விற்பனை நாங்கள் எதிர்பார்த்த படி சீராக இருக்கிறது. கடந்த மாத விற்பனையில் எங்கள் இலக்குகளை அடைந்திருக்கிறோம். எங்களின் புதிய எஸ்யுவி ஹோண்டா எலிவேட்-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்ததில் இருந்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறோம். சமீபத்தில் எலிவேட் மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. பண்டிகை காலக்கட்டத்தில் இதன் வெளியீடு நடைபெறும்," என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யுச்சி முராடா தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த ஜூன் மாதம் ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிரான்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், வெளியீடு பண்டிகை காலக்கட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.  

    • ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • ஹோண்டா எலிவேட் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் என்று தகவல்.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் எலிவேட் எஸ்யுவி மாடலின் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தெரிவித்து இருக்கிறது. மேலும் வினியோகமும் அதே மாதத்தில் துவங்கிவிடும் என்று கூறப்படுகிறது. புதிய ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நீண்ட கால இடைவெளிக்கு பின், ஹோண்டா அறிமுகம் செய்யும் புதிய கார் மாடல் இது ஆகும். புதிய எலிவேட் எஸ்யுவி மாடல் அழகிய டிசைன் கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் பிரீமியம் தோற்றம், ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆறு ஏர்பேக், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ADAS போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா எலிவேட் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே காரின் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    • ஹோண்டா எலிவேட் மாடல் நான்கு வேரிண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
    • இந்திய சந்தையில் அதிக போட்டி நிறைந்த மிட் சைஸ் எஸ்யுவி பிரிவில் ஹோண்டா எலிவேட் நிலை நிறுத்தப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் மிட்சைஸ் எஸ்யுவி மாடலின் முன்பதிவுகளை ஜூலை 3-ம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலிவேட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியிலோ, செப்டம்பர் மாத துவக்கத்திலோ ஹோண்டா எலிவேட் விலை விவரங்கள் அறிவிக்கப்படலாம்.

    இந்திய சந்தையில் ஹோண்டா எலிவேட் மாடல் நான்கு வேரிண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து வேரியன்ட்களிலும் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள முடியும்.

    ஹோண்டா எலிவேட் மாடலில் 121 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்டெப் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் வெளியீட்டுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன.

    அந்த வகையில், இந்தியவில் வெளியாகும் போது புதிய ஹோண்டா எலிவேட் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் 55 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தியது.
    • 2004-05 காலக்கட்டத்தில் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை எட்டியது.

    ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் மற்றொரு மைல்கல்லை எட்டி அத்தியிருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் 3 கோடி யூனிட்களை கடந்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஹோண்டா நிறுவனம் 22 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாகவே ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

    2001-ம் ஆண்டு ஆக்டிவா மாடல் 102சிசி ஸ்கூட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள 4 ஸ்டிரோக் என்ஜின் மற்றும் CVT யூனிட், இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இரு பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையிலான டிசைன் இந்த ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்க காரணங்களாக மாறின. விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஹோண்டா ஆக்டிவா மாடல் 55 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தியது.

     

    சந்தையில் நேரடி போட்டியை ஏற்படுத்த வேறு எந்த மாடல்களும் இல்லாத நிலையில், ஆக்டிவா மாடல் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. 2004-05 காலக்கட்டத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2008-09 ஆண்டுகளில் ஆக்டிவா மாடல் 110சிசி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட 15 சதவீதம் அதிக மைலேஜ் வழங்குவதாக ஹோண்டா அறிவித்தது.

    இந்த காலக்கட்டத்தில் ஆக்டிவா விற்பனை ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்தது. பிறகு 2014-15 காலக்கட்டத்தில் ஆக்டிவா 3ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதல் ஆக்டிவா 125 மாடல் ஆகும். 2016-ம் ஆண்டு ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்தது. இந்த சமயத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்பதை கடந்து, இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி இருசக்கர வாகனம் என்ற பெருமையை ஹோண்டா ஆக்டிவா பெற்றது.

    இதைத் தொடர்ந்து வெறும் 7 ஆண்டுகளில் ஹோண்டா ஆக்டிவா மாடல் இரண்டு கோடி யூனிட்களை கடந்து அசத்தியது. 2018 ஆண்டு ஹோண்டா ஆக்டிவா மாடல் இரண்டு கோடி யூனிட்களை கடந்த நிலையில், 2023 ஆண்டிலேயே மூன்று கோடி யூனிட்கள் எனும் மைல்கல்லை கடந்துள்ளது.

    • ஹோண்டா நிறுவனம் தனது CB300R மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்தது.
    • 2024 ஹோண்டா CB300R மாடலில் ஹார்டுவேர் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய CB300R மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய என்ட்ரி லெவல் பிரீமியம் ஸ்டிரீட் மாடல் 2024 ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் 2024 CB300R மாடல்- மேட் பிளாக் மெட்டாலிக் மற்றும் பியல் டஸ்க் எல்லோ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    இரு நிறங்களில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விற்பனை அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. புதிய மாடலில் மெக்கானிக்கல் அப்டேட்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் 286சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இத்துடன் முன்புறம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பெட்டல் ரக டிஸ்க் பிரேக்குகள், 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

    புதிய 2024 ஹோண்டா CB300R மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதன் விலை தற்போதைய மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா CB300R பியல் ஸ்பார்டன் ரெட் மற்றும் மேட் ஸ்டீல் பிளாக் மாடல்கள் விலை ரூ. 2 லட்சத்து 77 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஹோண்டா ஷைன் 125 புதிய வெர்ஷன் அதன் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது.
    • புதிய ஹோண்டா ஷைன் 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலின்டர் என்ஜின் உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD 2 விதிகளுக்கு பொருந்தும் புதிய ஷைன் 125 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் கம்யூட்டர் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் ஹோண்டா ஷைன் 125 மாடலின் புதிய வெர்ஷன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஹோண்டா ஷைன் OBD 2 வெர்ஷனின் விலை ரூ. 79 ஆயிரத்து 800 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 83 ஆயிரத்து 800 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் இரண்டு புறமும் டிரம் பிரேக்குகளை கொண்டிருக்கின்றன. இதன் டாப் எண்ட் மாடல் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது.

     

    ஸ்டைலிங் அடிப்படையில் 2023 ஹோண்டா ஷைன் 125 புதிய வெர்ஷன் அதன் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது. இதில் சிங்கில் பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன கௌல், முன்புற ஃபென்டர் சிங்கில் பீஸ் சீட், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், 5 ஸ்போக் கொண்ட அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகிறது.

    ஹெட்லைட் கவர், சைடு பேனல்கள், மஃப்ளர் ஹெட் கவர் உள்ளிட்டவைகளில் க்ரோம் எலிமென்ட்கள் உள்ளன. புதிய ஷைன் 125 மாடலின் இரண்டு வேரியண்ட்களும்- பிளாக், கெனி கிரே மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே, ரிபல் ரெட் மெட்டாலிக் மற்றும் டிசென்ட் புளூ மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஹோண்டா ஷைன் 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலின்டர், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம், மேம்பட்ட ஸ்மார்ட் பவர், ஹோண்டா ACG ஸ்டார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் OBD 2 மற்றும் E20 ரக எரிபொருளில் இயங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், இன்டகிரேட் செய்யப்பட்ட ஹை பீம் ஃபிலாஷர், வெளிப்புற ஃபியூவல் பம்ப் மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஈக்வலைசர் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக் உள்ளது. இத்துடன் ஹோண்டாவின் விசேஷமான பத்து ஆண்டுகள் வாரண்டியுடன் கிடைக்கிறது.

    • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் யுனிகான் மாடலை பிஎஸ்6 2 விதிகளுக்கு அப்டேட் செய்தது.
    • புதிய யுனிகான் மாடலிலும் 160சிசி, PGM-FI என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் 2023 ஹோண்டா யுனிகான் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா யுனிகான் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதோடு புதிய மாடல் - பியல் இக்னியஸ் பிளாக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் பியல் சைரென் புளூ என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. 2023 ஹோண்டா யுனிகான் மாடலில் 160சிசி, PGM-FI என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

     

    இந்த என்ஜின் 13.27 ஹெச்பி பவர், 14.58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு பத்து ஆண்டுகள் வரையிலான வாரண்டி வழங்கப்படுகிறது.

    இதன் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரே மாதிரியான டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் டைமன்ட் ஃபிரேம், டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 18-இன்ச் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    • ஹோண்டா சர்வீஸ் சென்டரில் புதிய எக்ஸ்டென்டட் வாரண்டி பிளஸ் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
    • புதிய திட்டத்தின் விலை 250சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1667 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி அறிவித்து இருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எக்ஸ்டென்டட் வாரண்டியை வாகனங்கள் வயதுக்கு ஏற்ப மூன்று ஆப்ஷன்களின் கீழ் தேர்வு செய்திட முடியும்.

    அந்த வகையில் எட்டு ஆண்டுகள் பழைய வாகனத்திற்கு இரண்டு ஆண்டுகள் திட்டமும், ஒன்பதாவது ஆண்டு பழைய வாகனங்களுக்கு ஒரு ஆண்டிற்கான திட்டமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முக்கிய என்ஜின் உபகரணங்கள், இதர மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பாகங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

    எக்ஸ்டென்டட் வாரண்டி திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க பயன், டிரான்ஸ்ஃபர் செய்வது தான். இந்த திட்டத்தின் கீழ் வாரண்டியை தேர்வு செய்தபிறகு, வாகனத்தை விற்க நேரிட்டால், வாரண்டியையும் புதிய ஓனருக்கு மாற்றிக்கொடுக்க முடியும். இந்த வாரண்டி நீட்டிப்பு திட்டம் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஸ்கூட்டர்கள் அதிகபட்சம் 1.2 லட்சம் கிலோமீட்டர்களும், மோட்டார்சைக்கிள்கள் 1.3 லட்சம் கிலோமீட்டர்கள் வரையிலும் வாரண்டி நீட்டிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். அதிகாரப்பூர்வ ஹோண்டா சர்வீஸ் சென்டரில் புதிய எக்ஸ்டென்டட் வாரண்டி பிளஸ் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த எக்ஸ்டென்டட் வாரண்டி திட்டத்தின் விலை 150சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1317 என்றும் 150சிசி முதல் 250சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1667 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வாகனம் வாங்கிய ஆண்டு, விலை மற்றும் பல்வேறு விவரங்கள் அடிப்படையில், விலை வேறுபடும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • டியோ புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன.

    ஹோண்டா நிறுவனத்தின் பிரபல டியோ ஸ்கூட்டரின் முற்றிலும் புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் ஹோண்டா டியோ H ஸ்மார்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 77 ஆயிரத்து 712, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டியோ வெர்ஷனில் H ஸ்மார்ட் அப்கிரேடுகள் செய்யப்பட்டு இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி டியோ ஸ்கூட்டரின் புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக இதே ஆப்ஷன்கள் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

    ஹோண்டா டியோ H ஸ்மார்ட் வெர்ஷனின் விலை அதன் OBD 2 அப்டேட் செய்யப்பட்ட மாடலை விட ரூ. 3 ஆயிரத்து 500 வரை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ OBD 2 வெர்ஷனும் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் சற்றே குறைந்த விலை கொண்டிருக்கிறது. இதில் ஹாலோஜன் பல்பு கொண்ட ஹெட்லைட், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் பிளாக்டு-அவுட் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டீலக்ஸ் வேரியண்டில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புறம் ஃபியூவல் ஃபில்லர் கேப், தங்க நிறம் கொண்ட அலாய் வீல்கள், 3-ஸ்டெப் இகோ இன்டிகேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய மாற்றங்கள் காரணமாக ஹோண்டா டியோ விற்பனை மெட்ரோ மற்றும் கிராம புறங்களில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

    • ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    • மிக குறைந்த வேகத்தில் செல்லும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஹோண்டா காப்புரிமை பெற்றது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. புதிய ஸ்கூட்டர்கள் டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என்று அழைக்கப்படுகின்றன. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வினியோக துறை சார்ந்த பணிகளுக்கானவை ஆகும்.

    புதிய டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. இவை குறைந்த வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.

    ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பிரத்யேக தோற்றம் கொண்டிருக்கின்றன. இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஒற்றை சீட் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் போஷ் நிறுவனத்தின் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சமாகவே 25 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும்.

    மிக குறைந்த வேகத்தில் செல்லும் என்பதால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவற்றுக்கு சாலை வரியும் செலுத்த வேண்டாம். ஹோண்டா டேக்ஸ் e: மாடலில் ஹை-சீட் ஹேண்டில்பார், வட்ட வடிவம் கொண்ட ஒற்றை ஹெட்லேம்ப், டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், முன்புறம் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், டியூபுலர் ஸ்பைன், ஒற்றை சீட் மற்றும் பேட்டரி பேக் உள்ளது.

    ஹோண்டா ஜூமர் e: மாடலில் சற்றே தடிமனாக காட்சியளிக்கும் வெளிப்புற ஃபிரேம், வட்ட வடிவிலான இரண்டு ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள், டூயல் சைடு ரியர் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்கூட்டர்களும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.

    இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனினும், ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 வாக்கில் ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்தியாவில் தற்போது ஹோண்டா டியோ மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் டியோ H-ஸ்மார்ட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    புதிய மாடல் அறிமுகமாகும் பட்சத்தில்- ஆக்டிவா, ஆக்டிவா 125 H ஸ்மார்ட் ஸ்கூட்டர்கள் வரிசையில், ஹோண்டா அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடலாக இது இருக்கும். டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் கீலெஸ் வசதி மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் புதிய வேரியண்டில் ஸ்மார்ட்ஃபைண்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பட்டனை க்ளிக் செய்ததும் ஸ்கூட்டரின் இண்டிகேட்டர்களை ஃபிலாஷ் செய்யும். இத்துடன் ஸ்மார்ட்ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்அன்லாக் அம்சம் மூலம் பயனர்கள் ஹேண்டில்பார், ஃபியூவல் ஃபில்லர் கேப் மற்றும் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளை அன்லாக் செய்யும்.

    ஹோண்டா டியோ H ஸ்மார்ட் மாடலில் ஸ்மார்ட்சேஃப் (Smartsafe) எனும் அம்சமும் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை லாக் செய்து, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இவைதவிர டியோ ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் 109சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 7.8 ஹெச்பி பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    விலையை பொருத்தவரை இந்த ஸ்கூட்டர் அதன் ஸ்டாண்டர்டு மற்றும் DLX வேரியண்ட்களை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்டாடண்டர்டு மாடல் விலை ரூ. 68 ஆயிரத்து 625 என்றும் டியோ DLX வேரியண்ட் விலை ரூ. 72 ஆயிரத்து 626 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன.
    • கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக ஹோண்டா, யமஹா, சுசுகி மற்றும் கவாசகி விளங்குகின்றன. நான்கு நிறுவனங்களும் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நான்கு முன்னணி நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்த கூட்டணி மூலம் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன. கூட்டணியின் அங்கமாக அரசு அனுமதி பெற்று HySE (Hydrogen small mobility & engine technology) பெயரில் ஆய்வு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

     

    ஜப்பானை சேர்ந்த நான்கு நிறுவனங்களும் ஆற்றலை உருவாக்கும் ஒரே திறன், சூரியசக்தி மட்டும் தான் என்று நம்புவதற்கு எதிராக உள்ளன. உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன. ஆனால், இதற்கான மாற்று நிச்சம் உள்ளது. அதற்கு ஹைட்ரஜன் தான் பதில் என்று HySE உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

    கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோண்டா நிறுவனம் ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின்களின் மாடல் வளர்ச்சி பிரிவில் ஆய்வு செய்கிறது. சுசுகி நிறுவனம் இதற்கான சாத்தியக்கூறு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்கிறது.

    யமஹா நிறுவனம் ஹைட்ரஜன் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க் பிரிவில் கவனம் செலுத்துகிறது. கவாசகி நிறுவம் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க், ஃபியூவல் டேன்க் மற்றும் இன்ஜெக்டர்களை இன்ஸ்டால் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. டொயோட்டா நிறுவனமும் இந்த கூட்டணியில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை செய்து உதவ இருக்கிறது. 

    ×