search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோண்டா கார்ஸ்"

    • ஹோண்டா எலிவேட் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கியது.
    • இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ஜூன் 2023 மாதத்தில் 5 ஆயிரத்து 80 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. வெளிநாடுகளுக்கு 2 ஆயிரத்து 112 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 7 ஆயிரத்து 834 யூனிட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு 2 ஆயிரத்து 502 யூனிட்களையும் ஏற்றுமதி செய்து இருந்தது.

    "ஜூன் மாத விற்பனை நாங்கள் எதிர்பார்த்த படி சீராக இருக்கிறது. கடந்த மாத விற்பனையில் எங்கள் இலக்குகளை அடைந்திருக்கிறோம். எங்களின் புதிய எஸ்யுவி ஹோண்டா எலிவேட்-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்ததில் இருந்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறோம். சமீபத்தில் எலிவேட் மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. பண்டிகை காலக்கட்டத்தில் இதன் வெளியீடு நடைபெறும்," என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யுச்சி முராடா தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த ஜூன் மாதம் ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிரான்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஹோண்டா எலிவேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், வெளியீடு பண்டிகை காலக்கட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.  

    • சீனாவில் மட்டும் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டம்.
    • ஹோண்டா எலெக்ட்ரிக் காரில் ஹோண்டா கனெக்ட் 4.0 கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்களை 2023 ஷாங்காய் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது. இவை e:N சீரிஸ், e:NP2 ப்ரோடோடைப் மற்றும் e:NS2 ப்ரோடோடைப் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு மாடல்கள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன. இவற்றின் விற்பனை அடுத்த ஆண்டு சீனாவில் துவங்க இருக்கிறது.

    இரு எலெக்ட்ரிக் கார்களுடன் புதிய e:N எஸ்யுவி கான்செப்ட் கிட்டத்தட்ட ஷோ கார் போன்றதாகும். 2027 ஆண்டிற்குள் சீனாவில் மட்டும் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் 2035 ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளராக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

     

    தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதில் e:NP2 மற்றும் e:NS2 மாடல்கள் உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளன. இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன. e:N எஸ்யுவி கான்செப்ட் ஹோண்டா நிறுவனத்தின் மூன்றாம் கட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். ஹோண்டா எலெக்ட்ரிக் காரில் ஹோண்டா கனெக்ட் 4.0 கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    இரண்டு ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்களில் வங்கப்பட இருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சீன அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த எஸ்யுவி-க்களின் விலை விவரங்கள், மற்ற நாடுகளில் வெளியீடு உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×