search icon
என் மலர்tooltip icon

    பைக்

    2 வீலர்களுக்கு 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி - ஹோண்டா அசத்தல் அறிவிப்பு!
    X

    2 வீலர்களுக்கு 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி - ஹோண்டா அசத்தல் அறிவிப்பு!

    • ஹோண்டா சர்வீஸ் சென்டரில் புதிய எக்ஸ்டென்டட் வாரண்டி பிளஸ் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
    • புதிய திட்டத்தின் விலை 250சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1667 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி அறிவித்து இருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எக்ஸ்டென்டட் வாரண்டியை வாகனங்கள் வயதுக்கு ஏற்ப மூன்று ஆப்ஷன்களின் கீழ் தேர்வு செய்திட முடியும்.

    அந்த வகையில் எட்டு ஆண்டுகள் பழைய வாகனத்திற்கு இரண்டு ஆண்டுகள் திட்டமும், ஒன்பதாவது ஆண்டு பழைய வாகனங்களுக்கு ஒரு ஆண்டிற்கான திட்டமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முக்கிய என்ஜின் உபகரணங்கள், இதர மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பாகங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

    எக்ஸ்டென்டட் வாரண்டி திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க பயன், டிரான்ஸ்ஃபர் செய்வது தான். இந்த திட்டத்தின் கீழ் வாரண்டியை தேர்வு செய்தபிறகு, வாகனத்தை விற்க நேரிட்டால், வாரண்டியையும் புதிய ஓனருக்கு மாற்றிக்கொடுக்க முடியும். இந்த வாரண்டி நீட்டிப்பு திட்டம் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஸ்கூட்டர்கள் அதிகபட்சம் 1.2 லட்சம் கிலோமீட்டர்களும், மோட்டார்சைக்கிள்கள் 1.3 லட்சம் கிலோமீட்டர்கள் வரையிலும் வாரண்டி நீட்டிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். அதிகாரப்பூர்வ ஹோண்டா சர்வீஸ் சென்டரில் புதிய எக்ஸ்டென்டட் வாரண்டி பிளஸ் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த எக்ஸ்டென்டட் வாரண்டி திட்டத்தின் விலை 150சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1317 என்றும் 150சிசி முதல் 250சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 1667 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வாகனம் வாங்கிய ஆண்டு, விலை மற்றும் பல்வேறு விவரங்கள் அடிப்படையில், விலை வேறுபடும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×