search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பேரணி"

    • மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டி இருக்கிறது.
    • வேளாண்மை என்பது மாநில விவகாரம். மாநிலங்களை ஆலோசிக்காமல் எப்படி சட்டம் கொண்டு வரலாம் என்று கேட்பார்கள்.

    விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும்.

    இந்நிலையில், இதுகுறித்து விவசாய சங்கங்களுடன் இரண்டு சுற்று போராட்டம் நடத்திய மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் அவர்களது பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டோம். அவற்றை நிர்வாகமட்டத்தில் செய்து விடலாம். சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை.

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டி இருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கிறது.

    வேளாண்மை என்பது மாநில விவகாரம். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் நாளைக்கு இதே நபர்கள், மாநிலங்களை ஆலோசிக்காமல் எப்படி சட்டம் கொண்டு வரலாம் என்று கேட்பார்கள்.

    எனவே, அவசரகதியில் மத்திய அரசு சட்டம் கொண்டு வராது. என்ன மாதிரி சட்டம் கொண்டு வரலாம், அதன் சாதக, பாதகங்கள் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். அவசரகதியில் சட்டம் கொண்டு வந்தால், அது தோல்வியில் முடிந்து விடலாம்.

    எனவே, முதிர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் தேதியை சொல்ல வேண்டும். அப்போது பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

    அதை விடுத்து பிரச்சினை செய்வதுதான் தங்களது குறிக்கோள் என்று விவசாயிகள் செயல்பட்டால், அவர்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். விவசாயிகளுக்கிடையே சமூக விரோதிகள் கலந்து, அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களை செய்ய வாய்ப்புள்ளது. அவர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எல்லையில் கூடிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு.
    • நேற்று பேரணியை நிறுத்திய விவசாயிகள் இன்று டெல்லிக்குள் நுழைய முயற்சிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

    விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

    அதன்படி நேற்று பஞ்சாப், அரியானா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியை தொடங்கினர். ஆனால், 2020-21-ல் நடந்ததை போன்று நடந்து விடக்கூடாது என்பதால் பஞ்சாப், அரியானா எல்லையில் டெல்லி போலீசார் கடுமையான தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

    பேரணிக்கு புறப்பட்ட விவசாயிகள் எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் விவசாயிகளை கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டி அடித்தனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியதும் விவசாயிகள் கலைந்து ஓடினர்.

    அத்துடன நேற்றைய பேரணி நிறுத்தப்படுவதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. இந்த நிலையில் இன்று டெல்லி நோக்கி புறப்படுவோம். டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆறு மாத உணவு பொருட்கள் மற்றும் டீசல் ஆகியவற்றுடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பேரணி ஒன்றிரண்டு நாட்களில் முடிவடைய வாய்ப்பு இல்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை திரும்பமாட்டோம் என அறிவித்துள்ளர்.

    கடந்த முறை 13 மாதங்கள் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறி விட்டது.
    • விவசாயிகளை எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்தும் பேரணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறி விட்டது. தலைநகருக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முள்வேலி, டிரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள் எல்லாம் ஏற்பாடு செய்துள்ளது.

    சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரலை நசுக்கியுள்ளது. விவசாயிகளை எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 750 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

    நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். தலைவணங்கவும் மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டெல்லியில் நுழையும் விவசாயிகளை கைது செய்ய போலீசார் திட்டம்.
    • அதிகமானோர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் மைதானத்தை சிறையாக மாற்ற கோரிக்கை விடுத்திருந்தது.

    விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப், அரியானா மாநிலத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம் மாநில எல்லைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    தடை உத்தரவை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர். அப்படி மீறும் நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் டெல்லியில் உள்ள பவனா மைதானத்தை தற்காலிக சிறையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக டெல்லி அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.

    இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விவசாயிகளை கைது செய்வது தவறானது. விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியல் சாசன உரிமை என டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி.
    • நேற்று அரசுடன் நடைபெற்ற 6 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் டெல்லியில் இன்று பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

    அதனால் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா மாநில எல்லையில் இருந்து டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழையாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்றிரவு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அறிவித்தபடி பேரணி தொடங்கும் என விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன. அதனடிப்படையில் விவசாயிகள் ஷம்பு (பஞ்சாப்-அரியானா) எல்லையில் பேரணியை தொடங்கியுள்ளனர்.

    அதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் ஃபட்டோகார்ஹ் சாஹிப் என்ற இடத்தில் இருந்து அம்ாபலா அருகில் உள்ள ஷம்பு எல்லையை நோக்கி புறப்பட்டனர்.

    திக்ரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஷம்பு எல்லையில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்த இருக்கிறார்கள்.
    • டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அரியானா விவசாயிகள் டிராக்டர்களுடன் செல்லாத வகையில் அம்மாநில அரசு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்க தலைவர் ஆதிஷ் அகர்வாலா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுந்தியுள்ளார்.

    அதில், "இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், பாதிக்கக் கூடிய வகையிலான எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தும் வகையில், நேற்றிரவு மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

    • விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் டெல்லியில் தடைஉத்தரவு பிறக்கப்பட்டது.
    • சண்டிகரில் மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தின.

    தங்களுடைய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

    இதனால் முன்னெச்சரிக்கையாக டெல்லி-அரியானா, டெல்லி- பஞ்சாப் மாநில எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விவசாயிகளுடன் நேற்று மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

    இதனால் இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் டெல்லியை சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லிக்குள் டிராக்டர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • விதியை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என டெல்லி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.

    விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலையை உறுதியை செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாளை பேரணி நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன. 200 விவசாய சங்கங்கள் பேரணியில் கலந்த கொள்ள அழைப்பு விடுத்த நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் கூட வாய்ப்புள்ளது.

    இதனால் டெல்லி மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தடுப்புகள் கொண்டு எல்லைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

    நாளை பேரணி நடைபெறும் நிலையில், இன்றே எல்லை பகுதிகளுக்கு விவசாயிகள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் டெல்லி அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அடுத்த மாதம் 12-ந்தேதி வரை பொது இடங்களில் அதிகமானோர் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி நகருக்குள் துப்பாக்கிகள், எரியக் கூடிய பொருட்கள், செங்கல், கற்கள், பெட்ரோல் கேன்கள் அல்லது சோடா பாட்டில் ஆகியவை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் அதிகமாக சத்தம் ஏற்படுத்தக்கூடிய ஸ்பீக்கர்கள் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் ஆரோரா தெரிவித்துள்ளார்.

    • டெல்லிக்கு செல்லும் மாநில எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
    • டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) 'டெல்லி சலோ' பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    இதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை அழைத்து பேசியது. மத்திய உணவு மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை.

    இதையடுத்து மீண்டும் 12-ந்தேதி (இன்று) பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 3 மத்திய மந்திரிகள் விவசாயிகளுடன் பேச தயார் நிலையில் உள்ளனர்.

    ஆனால் பேச்சு வார்த்தைக்கு வர விவசாய சங்க பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு டெல்லிக்கு லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டிக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில போலீசார் செய்து வருகிறார்கள். டெல்லிக்கு செல்லும் மாநில எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-வது பிரிவின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

    அம்பாலா ஜிந்த், ப்தே ஹாபாத் ஆகிய மாவட்ட எல்லைகளை மூடி உள்ளனர். அரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய தள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் குறுஞ்செய்திகளுக்கான செல்போன் சேவை தடை கொண்டு வரப்பட்டு உள்ளது. செல்போன் சேவைகள் 13-ந் தேதி வரை முடக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    டெல்லிக்குள் சென்று போராட திட்டமிட்டு இருக்கும் அரியானா விவசாயிகள் இன்றே தங்களது பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரியானாவில் பல இடங்களில் இன்று காலை விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடைபயணமாகவும் டெல்லியை நோக்கி புறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல பஞ்சாபில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இரு மாநில விவசாயிகளும் பல்வேறு முனைகளில் டெல்லிக்குள் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    இதையடுத்து டெல்லி போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

    அரியானா விவசாயிகள் டெல்லிக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. டெல்லிக்கு புறப்படும் விவசாயிகளை உடனுக்குடன் கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டால் அவர்களை அடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 2 பெரிய ஸ்டேடியங்கள் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. விவசாயிகளை அந்த ஸ்டேடியங்களில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்டேடியங்களில் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாயிகள் பேரணி நடத்துவதை தடுக்கும் மத்திய அரசையும், அரியானா மாநில அரசையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கண்டித்துள்ளார். விவசாயிகள் வரும் பாதைகளில் தடுப்புகள் ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயல் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் மறைமுகமாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாய சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    • விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்ல இருப்பதாக தகவல்.
    • 2020 பேரணியின்போது விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை நோக்கி சென்றதால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த பேரணி வருகிற செவ்வாய்க்கிழமை (நாளைமறுதினம்) நடக்கிறது.

    விவசாயிகள் பேரணி அரியானாவில் இருந்து பஞ்சாப் வழியாக டெல்லிக்கு செல்ல இருக்கிறது. இதனால் அரியானாவில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாப் செல்ல முடியாத அளவிற்கு ஹரியானா அரசு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

    சாலையின் குறுக்கே பெரிய கான்கிரீட் தடுப்பு கற்களை வைத்துள்ளனர். மேலும், கான்கிரீட் கலவை போட்டு சாலையை மறித்துள்ளனர். அத்துடன் பெரியபெரிய ஆணிகளை சாலையில் வைத்துள்ளனர். அத்துடன் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. குரூப்பாக மெசேஜ் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    2020-ல் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். பஞ்சாப்- டெல்லி எல்லையில் உள்ள அம்பாலா இடத்தில் போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளி டெல்லி நோக்கி புறப்பட்டனர். விவசாயிகள் சுமார் ஒரு வடத்திற்கு மேல் போராட்டம் நடத்திய நிலையில் மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 சட்டத்தை திரும்பப் பெற்றது.

    ஷம்புவில் உள்ள அரியானா-பஞ்சாப் எல்லையில் வாகன போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதான் அம்பாலா மற்றும் டெல்லிக்கு செல்லும் முக்கிய எல்லையாகும்.

    தங்களது விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலையை உறுதி வகையில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • விவசாயிகள் வரும் 20ம்தேதி மும்பையை அடைய திட்டமிட்டுள்ளனர்.
    • வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 600 ரூபாய் நிவாரணம் வழங்க கோரிக்கை

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக் மாவட்டத்தின் திண்டோரியில் இருந்து மும்பை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள் மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆஷா பணியாளர்கள், பழங்குடியின சமூகத்தினர் என ஏராளமானோர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். சுமார் 200 கிமீ பயணம் மேற்கொள்ளும் விவசாயிகள் வரும் 20ம்தேதி மும்பையை அடைய திட்டமிட்டுள்ளனர்.

    பேரணியின்போது ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் விவசாயிகள் அணிவகுத்து செல்வதை காண முடிகிறது.

    வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 600 ரூபாய் உடனடி நிவாரணம் வழங்கவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை விவசாயிகள் பட்டியலிட்டுள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காய விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியான விளைச்சல் இருந்ததால் இந்த நிலைக்கு வழிவகுத்துள்ளதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும், வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த நிவாரணத்தை உயர்த்தி வழங்கும்படி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    ×