search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    6 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் இன்று திட்டமிட்டபடி பேரணி நடத்துகிறார்கள்
    X

    6 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் இன்று திட்டமிட்டபடி பேரணி நடத்துகிறார்கள்

    • விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் டெல்லியில் தடைஉத்தரவு பிறக்கப்பட்டது.
    • சண்டிகரில் மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தின.

    தங்களுடைய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

    இதனால் முன்னெச்சரிக்கையாக டெல்லி-அரியானா, டெல்லி- பஞ்சாப் மாநில எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விவசாயிகளுடன் நேற்று மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

    இதனால் இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் டெல்லியை சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×