search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு"

    • நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

    விருப்பமுள்ள விவசாயிகள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நிலவரைபடம், சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், புதிதாக

    பயன்பாட்டிற்கு கொண்டு

    வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்

    மோட்டார் பொருத்திக்

    கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்க தொட்டி 116 கன அடி அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தெரிவித்து உள்ளார். 

    • சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வட்டி இல்லாத பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு.
    • நபர் ஜாமீன் பேரில் ரூ.1,60,000-வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000- வரையிலும், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மீராபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், மாவட்டங்களில் உள்ள 370 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 9 லேம்ப் சங்கங்கள், 4 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 1 உழவர் பணி கூட்டுறவு சங்கம் மூலம் விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம். மேலும் இதுவரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் புதிய உறுப்பினராக சேர்ந்து கடன் பெற்று கொள்ளலாம்.

    கடன் மனுவுடன் நடப்பு பசலியில் பயிர் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று பெற்று இணைக்க வேண்டும். நடப்பு பசலியில் பயிர் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று பெற இயலாத நேர்வில், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சென்ற ஆண்டு பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல் பெற்று நடப்பாண்டில் சாகுபடி செய்ய உள்ள பயிர் விபரம் குறித்து சுய உறுதிமொழி சான்றுடன்விண்ணப்பிக்க வேண்டும்.

    நபர் ஜாமீன் பேரில் ரூ.1,60,000-வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000- வரையிலும், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் வசதிக்கேற்ப நிலம் அல்லது குடியிருப்பு பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி பயிர்க்கடன் பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
    • மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

    ஈரோடு:

    பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தெகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதார் மூலம் விபரங்களை சரி செய்தால் மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த (13-வது) தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 28,000 தகுதியான விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர்.

    பி.எம்.கிசான் நிதித்திட்டத்தில் பயன் பெற்றுவரும் அனைத்து விவசாயிகளும் தங்களது ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டும். அதற்கு தங்களது ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை ஏற்கனவே இணைத்துள்ள விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால் ஓ.டி.பி. எண் தங்களது செல் போனுக்கு அனுப்பப்படும்.

    அந்த ஓ.டி.பி. எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது நாள் வரை ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று ரூ.15 செலுத்தி பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

    எனவே இத்திட்டத்தில் பயனடைந்து வரும் அனைத்து விவசாயிகளும் அடுத்த (13-வது) தவணைத்தொகையை பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்வதுடன் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டு ள்ளதால் உடனடியாக துரிதமாக செயல்பட்டு வரும் 31-ந் தேதிக்குள் பதிவை புதுப்பித்து திட்டப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்சேலம்:

    கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கான புதிய அறிப்பில் கால்ந டைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ரூ.1.00 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 900 ஆதி திராவிடர் மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் மானியமும், 100 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிக்கு விதைத் தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்கத் தேவையான பயிற்சி, கையேடு மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் உள்ளிட்டவை ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    • ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளனர்.
    • ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படும்.

    ஈரோடு:

    பட்டு வளர்ச்சி துறை ஈரோடு உதவி இயக்குனர் சிவநாதன், தாளவாடி உதவி இயக்குனர் திலகவதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பகுதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3,000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.

    நடப்பாண்டில் ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகு படிக்குள் வந்துள்ளனர்.

    தற்போது வெண் பட்டுக்கூடு ஒரு கிலோ 650 முதல் 750 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையாகிறது. சேதமடைந்த சுமாரான பட்டுக்கூடுகள் கூட ஒரு கிலோ 580 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.

    கோபிசெட்டிபாளையம், தாராபுரம், காங்கேயம் பகுதியில் 'மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள்' நியமித்துள்ளதால் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்துக்கு அருகிலேயே அவற்றை விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்ல ஏற்பாடு செய்கிறோம். இதனால், விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.

    விவசாயிகளை ஊக்கப்படுத்தி பட்டு வளர்ப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு தலா ரூ.72,500 மதிப்பிலான தளவாட கருவிகள் வழங்குகிறோம்.

    இந்தாண்டும் ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படும்.

    கூடுதலாக மினி கட்டர், மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் போன்றவை வழங்க உள்ளோம். மீதமுள்ள தொகைக்கு பிற உபகரணங்கள் வழங்கப்படும். இவற்றுக்கு டெண்டர் முடிந்துள்ளதால் விரைவில் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • அம்மாபாளைம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி செயல் விளக்கத்துடன் நடை பெற்றது.
    • இயற்கை விவசாயி லோகநாதன் காளான் வளர்ப்பு விதைகள், வளர்ப்பு பைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.

    ஈரோடு:

    பவானிசாகர் வட்டார த்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தொப்ப ம்பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அம்மாபாளைம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி செயல் விளக்கத்துடன் நடை பெற்றது.

    இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். வேளாண்மை பொறியியல்துறை உதவி செயற்பொறி யாளர் சண்முக சுந்தரம் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றியும் எடுத்து கூறினார்.

    தோட்டக்கலை உதவி இயக்குநர் பிருந்தா காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் சத்துகள் பற்றி எடுத்துறைத்தார். இயற்கை விவசாயி லோகநாதன் காளான் வளர்ப்பு விதைகள், வளர்ப்பு பைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.

    கால்நடை மருத்துவர் முருகானந்தம் கால்நடை பராமரிப்பு பற்றி எடுத்து க்கூறினார். வீர லட்சுமிகாந்த் மற்றும் தமிழ்செல்வன், வேளாண் வணிகத்துறை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரதீப்குமார், மற்றும் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அன்ப ரசன் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி பேசினர்.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்புராஜ் நன்றி கூறினார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர் வள்ளி பயிற்சி க்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தார். இப்பயிற்சி யில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் முடிவில் காளான் வளர்ப்பிற்கான வழிமுறைகள் நேரடி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    • விவசாயிகள் பதிவு செய்து முன்னுரிமை அடிப் படையில் பெற்றுக் கொள்ளலாம்.
    • ஹெக்டே ருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் வழங்கப்படும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் மைத் துறை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாது:-

    தமிழகத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படிகோவை மாவட்டத்தில்நடப்பு ஆண்டு 3 லட்சம் மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மரம், வேங்கை, மலை வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், மகாகனி, தேக்கு, கடம்ப மரம் உள்ளிட்ட மதிப்பு மிக்க மரக்கன்றுகள் வழங்கப்படும். இந்த மரக்கன்றுகள் தோட்ட க்கலைத் துறை, வனத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் தனி யார் நாற்றாங்கால் பண்ணை களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயி களுக்கு வழங்கப்படும்.கோவையில் மாவட்ட த்தில் விவசாயி களுக்கு வழங்கு வதற்குத் தேவையான 3 லட்சம் மரக்க ன்றுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது நிலங்களின் வரப்பு ஓரத் தில் நடவு செய்வதற்கு ஹெக்டேருக்கு 160 மரக் கன்றுகளும், ஊடு பயிராகவும் மற்றும் அடர் நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு ஹெக்டே ருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர்களுக்கு மட்டுமே மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் துறையின் உழவன் செயலியில் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்து முன்னுரிமை அடிப் படையில் பெற்றுக் கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    • நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி வடவயல் பகுதியில் கடந்த 21.6.2000 அன்று விவசாய நிலத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக கூடலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மின்வேலியில் சிக்கி சுமார் 15 வயது ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 64), பிரபாகரன் (65), ஹரிதாஸ் (62) ஆகிய 3 விவசாயிகளை கைது செய்து, கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சிறை தண்டனை இந்த நிலையில் நேற்று கூடலூர் குற்றவியல் நீதிபதி சசின்குமார் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஹரிதாஸ் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறப்பட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் கொளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரும்மாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது. சிவகிரி கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் காளான் பண்ணையின் உரிமையாளர் இளங்கோ காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறினார்.

    விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் மூலம் விதை சான்று அலுவலர் ஹேமாவதி கலந்துக்கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்றுகள்வழங்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் கலந்து கொண்டு உழவர் சந்தை செயல்படும் முறைகள் உழவர் சந்தை அட்டைகள் பெறப்படும் முறைகள் மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் கலந்து கொண்டு துறையின் மானிய திட்டங்களை பற்றி விளக்கினர். தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • கீழ் கெடிகாவல் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்து களை கவனமாக கையாளும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையுறை, முக கவசம், கண்ணாடி மற்றும் அதற்குரிய உடைகளை பயன்படுத்தி கவனமுடன் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி வட்டா ரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கெடிகாவல் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கவனமாக கையாளும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட

    அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி வரவே ற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி பழனியப்பன் பங்கேற்று விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையுறை, முக கவசம், கண்ணாடி மற்றும் அதற்குரிய உடைகளை பயன்படுத்தி கவனமுடன் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வேளாண்மை அலுவலர் பழனிசாமி கோடை உழவு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்தும், உதவி வேளாண்மை அலுவ

    லர் தங்கவேல் சோயா பீன்ஸ் பயிர் சார்ந்த திட்ட ங்கள் குறித்தும் பேசினர்.

    முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட களப்பணியாளர்கள் செல்வி, கண்ணன் மற்றும் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    பரமத்திவேலூர் அருகே விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், நல்லூர் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு 'முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீரைப் பயன்படுத்தி உழவு செய்வதால், மண்வளத்தை மேம்படுத்தலாம்.

    மண் அரிமானம் தடுக்கப்பட்டு, காற்றோட்டம் கிடைக்கும். அடுத்த–டுத்து பொழியும் மழைநீர் வீணாகாமல், அந்த நிலத்திலேயே உறிஞ்சப்ப–டுவதால், மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. பயிர் சுழற்சி, பருவப்பயிர்கள், சிறுதானியப்பயிர்கள் மற்றும் அருந்தானி–யப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் குறைந்த நாளில் அதிக மகசூல் அதிக லாபம் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) மாதேஸ்வரன் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மானாவாரி நில மேம்பாடு மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பயிர் இரகங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், மண் வளம், சமுக காடுகள் அமைத்தல் போன்ற காரணிகள் குறித்து பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், தமிழக முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கி நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.

    ×