search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச மரக்கன்று"

    • 20,000 மரக்கன்றுகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வழங்கப்படும்

    தருமபுரி,

    தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேன்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி வட்டார விவசாய பெருமக்கள் திட்டம் 2022-23 கீழ் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் வட்டார விவசாய பெருமக்களுக்கு அவர்களது விளை நிலங்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் நட்டு பயன்பெறுவதற்காக பலன்தரும் மரக்கன்றுகளான செம்மரம், குமிழ் தேக்கு, மகோகனி, மலைவேம்பு, ரோஸ்வுட், பெருநெல்லி மற்றும் வேங்கை ஆகியவை மொத்தம் 20,000 வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மரக்கன்றுகள் ஒன்றிற்கு ரூ. 15- வீதம் முழுமானியத்தில் வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 64 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    குறைந்த அடர்வு நடவு முறையில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    காற்று சுத்தம், வெப்ப தணிப்பு, பறவைகள் இருப்பு மற்றும் நுண்ணுயிர்களுக்கு ஊட்டமாகவும் விளங்கும் மர கன்றுகளை வளர்ப்பதன் மூலம் பசுமை பரப்பு அதிகரிப்பதோடு மண்ணின் அங்கக உயிர் பொருட்கள் மற்றும் ஈரப்பதத்தை அதிகரிப்பதன் மூலம் மண் வளம் மேம்படுத்தப்படும்.

    மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிர் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீய விளைவுகள் குறைப்பதோடு விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்கிறது.

    எனவே தருமபுரி வட்டார விவசாயிகள் மரக்கன்றுகளை முழு மானியத்தில் பெற்று பயன் பெறலாம்.மரக்கன்றுகளுக்கு உதவி வேளாண்மை அலுவலர்களான அலே தருமபுரி பெரியசாமி -9443045959, நூலஅள்ளி பச்சமுத்து-7010865280, நல்லான அள்ளி சுப்பிரமணி-7010894028, கிருஷ்ணாபுரம் மணி2010 மணி-2010 மணி. தொடர்பு கொண்டு பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் பதிவு செய்து முன்னுரிமை அடிப் படையில் பெற்றுக் கொள்ளலாம்.
    • ஹெக்டே ருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் வழங்கப்படும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் மைத் துறை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாது:-

    தமிழகத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படிகோவை மாவட்டத்தில்நடப்பு ஆண்டு 3 லட்சம் மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மரம், வேங்கை, மலை வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், மகாகனி, தேக்கு, கடம்ப மரம் உள்ளிட்ட மதிப்பு மிக்க மரக்கன்றுகள் வழங்கப்படும். இந்த மரக்கன்றுகள் தோட்ட க்கலைத் துறை, வனத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் தனி யார் நாற்றாங்கால் பண்ணை களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயி களுக்கு வழங்கப்படும்.கோவையில் மாவட்ட த்தில் விவசாயி களுக்கு வழங்கு வதற்குத் தேவையான 3 லட்சம் மரக்க ன்றுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது நிலங்களின் வரப்பு ஓரத் தில் நடவு செய்வதற்கு ஹெக்டேருக்கு 160 மரக் கன்றுகளும், ஊடு பயிராகவும் மற்றும் அடர் நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு ஹெக்டே ருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர்களுக்கு மட்டுமே மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் துறையின் உழவன் செயலியில் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்து முன்னுரிமை அடிப் படையில் பெற்றுக் கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்ய இலவச மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
    • விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    பொள்ளாச்சி:

    வனத்துறை சார்பில் தேக்கு, ஈட்டி, சவுக்கு, செம்மரம், நாவல் மற்றும் பல்வேறு வகையான நாற்றுக்கள் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டுள்ளன.

    இந்த நாற்றுக்களை விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் வீடுகளில் வளர்க்க விரும்புபவர்கள் வனத்துறையினரிடம் சென்று விண்ணப்பித்தால் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

    வரும் ஆகஸ்ட் மாத இறுதி முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    அதேபோல், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் நாற்றுகள் நடவு செய்ய விரும்பினால் அந்த இடத்தின் சிட்டா, கல்வி நிறுவனங்களின் லெட்டர் பேடில் கோரிக்கை கடிதம், உரிமையாளர் புகைப்படம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    தன்னார்வலர்கள் என்றால் பொது இடங்களில் நடவு செய்ய வேண்டுமென்றால் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் ஊராட்சி தலைவர்கள் அல்லது பேரூராட்சி தலைவர்களின் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு கோவை வனவியல் விரிவாக்க கோட்டம் 9791661116 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ×