search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் நுட்ப பயிற்சி"

    • கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டாரம் பட்லூர் கிராம கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார். பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு மேலாளர் கோபிநாத் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கட்டைப்பயிர் பராமரிப்பு, நாற்றங்காலில் தரமான நாற்று உற்பத்தி, சொட்டு நீரில் கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், இயந்திர அறுவடை செய்வதற்குரிய தொழில்நுட்பங்கள், கரும்பு எண்ணிக்கை பராமரித்தல் பற்றி கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணசாமி உழவன் செயலி பற்றி பற்றியும், ஆத்மா திட்டம் பற்றியும் கூறினார். பட்லூர் கோட்ட கரும்பு மேலாளர் அருள் முருகன் கரும்பில் பூச்சி நோய் கட்டுப்பாடு பற்றி கூறினார். இப்ப பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல், கரும்பு அபிவிருத்தி அலுவலர் அர்ஜுனன், மற்றும் பட்லூர் கரும்பு அலுவலர்கள் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கரூர் வள்ளுவர் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு குறித்து தொழில் நுட்ப பயிற்சி நடை பெற்றது.
    • ஆடை வடிவமைப்புத்துறை பேராசிரியர் மரியா பெலிக்ஸ் மாணவர்களுக்கு நவநாகரீக தொழில் நுட்பம் குறித்தபயிற்சி அளித்தார்.

    கரூர் :

    கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் ஆடை வடிவமைப்புத்துறை சார்பில் நவநாகரீக தொழில் நுட்பம் குறித்த நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் வின்சென்ட் வரவேற்றார். ஆடை வடிவமைப்புத்துறை பேராசிரியர் மரியா பெலிக்ஸ் மாணவர்களுக்கு நவநாகரீக தொழில் நுட்பம் குறித்தபயிற்சி அளித்தார். இதில் ஆடை வடிவமைப்புத்துறை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பின்னல் ஆடை மற்றும் நவநாகரீக ஆடைகளான டி&சர்ட், ஜீன்ஸ், சர்ட், லெகங்கா, சாய்வார், கிட்ஸ் வியர் மற்றும் ஹோம் டெக்ஸ்டைல்ஸ், நேப்கின், டவல், ஆப்ரூன், குர்தின் போன்றவற்றின் வரைபட விளக்கங்களும் மற்றும் போர்ட்பேர்லியோ உருவாக்கும் பயிற்சியையும் பயிற்றுவித்தார்.

    முடிவில் கல்லூரி ஆடை வடிவமைப்புத்துறை தலைவர் நதியா நன்றி கூறினார்.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறப்பட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் கொளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரும்மாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது. சிவகிரி கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் காளான் பண்ணையின் உரிமையாளர் இளங்கோ காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறினார்.

    விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் மூலம் விதை சான்று அலுவலர் ஹேமாவதி கலந்துக்கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்றுகள்வழங்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் கலந்து கொண்டு உழவர் சந்தை செயல்படும் முறைகள் உழவர் சந்தை அட்டைகள் பெறப்படும் முறைகள் மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் கலந்து கொண்டு துறையின் மானிய திட்டங்களை பற்றி விளக்கினர். தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×