search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு முகாம்"

    • வெங்காடம்பட்டி ஊராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மையே விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வந்த பற்றாளர் மாரியப்பன் நிகழ்ச்சியை ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்ற தலைவர் ஸாருகலா ரவி, ஊராட்சி செயலர் பாரத், முக்கூடல் சொக்கலால் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வந்த பற்றாளர் மாரியப்பன் நிகழ்ச்சியை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் முக்கூடல் சொக்கலால் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவர் சந்தியா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார்.
    • முகாமில் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவர் சந்தியா கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார். முகாமில் புற்றுநோய் தடுக்கும் விதமாக விதமாக பிளாஸ்டிக் பை ஒழித்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், துணை தலைவர் ராமலெட்சுமி சங்கிலி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவனம் செய்திருந்தது.

    • ஆதர்ஸ் வித்யாலயா பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் ரத்தசோகை கண்டறியும் முறை பற்றி விளக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஆதர்ஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரகத் சுல்தானா தலைமை தாங்கினார். திட்ட மேற்பார்வையாளர்கள் சுப்புலட்சுமி, இந்திரா, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் மாரிச்செல்வி வரவேற்று பேசினார். முகாமில் ரத்தசோகை கண்டறியும் முறை பற்றியும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்ளுதல், மாதத்திற்கு ஒருமுறை கிருமி நாசினியை உட்கொள்ளுதல் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. முடிவில் பள்ளி துணை முதல்வர் பொன் மேரி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி செய்திருந்தார்.

    • வனத்துறை சார்பில் நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனவிலங்கு, மனித மோதல் தடுப்பது குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக வனச்சர அலுவலர் ரவிக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணதாசன், வனச்சரக அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி வரவேற்றார். வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து வருமான வரித்துறை துணை ஆணையாளர் மதுசூதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினர். உதவி பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பழங்குடியின மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    ராம்கோ குழுமத்தின் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்கான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சேரிட்டி டிரஸ்ட் ஏற்பாட்டில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவரின் அறிவுறுத்தலில் செயலர் நீதிபதி இருதய ராணி கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பழங்குடியின சாதி சான்று வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வன உரிமை சட்டம் 2006-ன் படி இண்டு நார் சேகரிக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். சேதமடைந்த 7 வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

    பின்னர் நீதிபதி இருதய ராணி கூறியதாவது:-

    'ஒவ்வொரு பழங்குடியின கிராமமாக சென்று அவர்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம். விருது நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களையும் அழைத்து வருகிற 24-ந் தேதி கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோ சிக்கப்படும். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

    பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுப்பையா, மூர்த்தி மற்றும் அய்யம்பட்டி ஊராட்சி தலைவர் தனலெட்சுமி அண்ணாத்துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
    • முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு இலக்கு அடையும் பொருட்டு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு முகாம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு 18 வயதிலிருந்து 35 வயது வரை ஊராட்சியிலிருந்து தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். முகாமில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, ஊராட்சி செயலர் திருமால்வளவன் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கி பேசினார்கள்.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே உள்ள அம்பலவயலில் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியானது மஞ்சல்மூலா, பூலக்குன்று போலீஸ் சோதனை சாவடி வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. அப்போது சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில், பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கி பேசினார்கள். இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார்.
    • போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் முகாம் நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவ மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.

    துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார். சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சியம்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வக்கீல்கள் தம்பி பிரபாகரன், எம்.எஸ்.காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது
    • ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது. அவ்வகையில், நடப்பாண்டும் கல்லூரிகளில் ராக்கிங் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ராக்கிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்டு 12-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு வாரம் ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த 4 நாட்களும், ராக்கிங் எதிர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை எழுதுதல், விளம்பர பலகை உருவாக்குதல், லோகோ (இலச்சினை) வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்தி, அதில் மாணவர்கள், கல்லூரி ஊழியர்களை பங்கேற்க செய்ய வேண்டும்.

    போதிய வசதியிருப்பின் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தலாம். குறும்படம், ஆவணப்படங்களை திரையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை, பல்கலை கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

    • மனித வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
    • மைசூர் சாலையில் தொடங்கிய பேரணி வனச்சரக அலுவலகத்தில் முடிந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்ச ரகத்தில் தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மனித வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    மைசூர் சாலையில் தொடங்கிய பேரணி வனச்சரக அலுவலகத்தில் முடிந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாரும் வனத்தை பாதுகாப்பது பற்றியும் கோசங்கள் எழுப்பியவாரு சென்றனர்.

    பின்னர் பள்ளி வவள காத்தில் விழிப்பு ணர்வு முகாம் மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெ ற்றது.

    இதில் ஒய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் சதாசிவம், கிருஷ்ணகுமார், நந்தகுமார், கவுசல்யா, ஊராட்சி தலைவர் சித்ரா சுப்பிர மணியம், வனச்சரக அலு வலர் பாண்டிராஜ், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் மணி கண்டன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×