search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Forestry"

    • மனித வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
    • மைசூர் சாலையில் தொடங்கிய பேரணி வனச்சரக அலுவலகத்தில் முடிந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்ச ரகத்தில் தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மனித வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    மைசூர் சாலையில் தொடங்கிய பேரணி வனச்சரக அலுவலகத்தில் முடிந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாரும் வனத்தை பாதுகாப்பது பற்றியும் கோசங்கள் எழுப்பியவாரு சென்றனர்.

    பின்னர் பள்ளி வவள காத்தில் விழிப்பு ணர்வு முகாம் மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெ ற்றது.

    இதில் ஒய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் சதாசிவம், கிருஷ்ணகுமார், நந்தகுமார், கவுசல்யா, ஊராட்சி தலைவர் சித்ரா சுப்பிர மணியம், வனச்சரக அலு வலர் பாண்டிராஜ், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் மணி கண்டன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×