

கடையம்:
கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்ற தலைவர் ஸாருகலா ரவி, ஊராட்சி செயலர் பாரத், முக்கூடல் சொக்கலால் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வந்த பற்றாளர் மாரியப்பன் நிகழ்ச்சியை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் முக்கூடல் சொக்கலால் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.