search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறன் பயிற்சி"

    • ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
    • முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு இலக்கு அடையும் பொருட்டு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு முகாம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு 18 வயதிலிருந்து 35 வயது வரை ஊராட்சியிலிருந்து தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். முகாமில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, ஊராட்சி செயலர் திருமால்வளவன் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சென்னை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் உற்பத்தி செய்து ஈட்டும் தனியார் தொழில் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் வழங்க இணையதளம் வாயிலாக GREEN CHANNEL PARTNER REGISTRATION செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த பயிற்சி வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில் நிறுவனத்திற்கு தேவையான திறன் பயிற்சிகளை தாங்களே வழங்கி மேற்படி பயிற்சி பெற்றவர்களுக்கு அந்த நிறுவனத்தில் திறன்மிகு பணியாளர்கள் பணிபுரியமர்த்த வாய்ப்பும் கிடைக்கிறது.

    பயிற்சியின் போது பயிற்சி வழங்கும் நிறுவனத்திற்கு பயிற்சி கட்டணமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்று மாவடி, மதுரை-7 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அலைபேசி எண் (94990 55748)-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • முதியோர் நலன் பராமரிப்பு சட்டம் -2007 மற்றும் முதியோர் உதவி எண் வழங்கும் சேவைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
    • உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றி தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக செயல்முறை வாயிலாக புதிய பார்த எழுத்தறிவுத் திட்டத்திற்காக கண்டறியப்பட்டுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை வலுவூட்டும் வகையில் வாழ்வியல் திறன் பயிற்சி திருப்பூர் தெற்கு வட்டார வள மைய பயிற்சி அரங்கில் இன்று நடைபெற்றது.

    பயிற்சியில் சைபர் கிரைம் துணை ஆய்வாளர் சையது சிக்கந்தர், சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வு பற்றி விளக்கமளித்தார். சமூக நலத்துறை மாவட்ட களப் பொறுப்பு அலுவலர் மைதிலி கணேசன் , முதியோர் நலன் பராமரிப்பு சட்டம் -2007 மற்றும் முதியோர் உதவி எண் வழங்கும் சேவைகள் குறித்தும் விளக்கமளித்தார். வக்கீல் கே. ஆர். ராஜசேகரன் மற்றும் வக்கீல் திங்களவள் ஆகியோர் சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகளை வழங்கினர். மேலும் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை ஆசிரியர்கள் மூலமாக உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை திருப்பூர் தெற்கு வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் அலிமா பீவி மற்றும் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த திட்டத்தின் கீழ் தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய, மாநில அரசின் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் 'தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன், 'ஊரக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். சென்னை நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, ஆட்டோ மோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத்துறை, அழகுக்கலை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற தொழில்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும். இதில் 120-க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

    மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டிய லினத்தினருக்கு 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியினருக்கு 3 சதவீதம், சிறுபான்மை யினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக்கீடு அளித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

    குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள் உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்குப்பின் திறன் பயிற்சி குழுமம் மூலம் அளிக்கப்படும்.

    பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்ப டுத்தப்பட்டு வரும் தீனதயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சி குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 265 இளைஞர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் 68 பேர் இளைஞர் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு 3 மாதம் பயிற்சி வழங் கப்பட்டு தொடர்ந்து அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் என். செந்தில்குமரன் தலைமை தாங்கினார் .

    உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன் வரவேற்றார் . சிறப்பு அழைப்பா ளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. , குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் . சவுந்தரராசன் , குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ந் தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் எம் . கார்த்திகேயன் , உதவிதிட்ட அலுவலர் மோகன் குமார் உள்பட கலர் கலந்து கொண் டனர் . முடிவில் குடியாத்தம் வட்டார மேலாளர் திவ்யா நன்றி கூறினார் .

    • கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும் வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் உருவாக்கப்பட்டது.
    • தமிழகத்தில் 3,994 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் :

    கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும் வசதியாக வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

    வறுமை ஒழிப்பை தாண்டி, நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தேர்வான ஒன்றியங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 120 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,994 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பொங்கலூர், உடுமலை, குண்டடம் ஒன்றியங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் ஊராட்சி அளவிலான உற்பத்தியாளர் குழு, நிதி குழு, இளைஞர் குழுக்கள் உருவாக்கி, நிதி ஒதுக்கப்படுகிறது. சமூக திறன் பயிற்சி அளித்ததன் மூலமாக, புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, கிராமப்புற மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

    5 ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணிகளை செயல்படுத்த, ஊராட்சி அளவிலான தொழில்சார் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்ட மேம்பாடு தொடர்பாக, மாவட்ட அலுவலர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்நிலையில் பயிற்சி பெற்ற மாவட்ட அலுவலர்கள் தொழில் சார் பயிற்சியாளருக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக கிராமப்புற மக்கள் மேம்பாடு, வேலை வாய்ப்பு உருவாக்கம், திறன் பயிற்சி போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    • தேசிய வருவாய் வழி திறன் பயிற்சி நடந்தது.
    • சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் பயிற்சி நடந்தது.

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லெமாயு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் லட்சுமிதேவி, மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். முதன்மை கருத்தாளராக ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் மோகன் கலந்து கொண்டு திறன் பயிற்சி அளித்தார். ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ராஜ்குமார், செல்வம் செயல்பட்டனர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், முன்னாள் மாணவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஊரக திரனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், சஜன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    • இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் முகாம்.
    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடம், அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது. பல்லடம் அரசு கலைக் கல்லூரிவளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.

    இதன்படி பல்லடம் வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலருக்கும், மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் போஜனா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட தொழில் மையம், உள்ளிட்டவைகளின் சார்பில், தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுகலை, ஓட்டுனர், கணினிப் பயிற்சி, துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மற்றும்சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் முகாம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இவ்வாறு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 12 ந் தேதி தொடங்கி 15ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வரும் 12 -ந்தேதி தொடங்கி 15ந் தேதி வரை நடைபெற உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், 0421 2999152, 94990 55955 என்கிற எண்களில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்யவேண்டும்.

    வரும் 11-ந் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருடன் இணைந்து தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    பெண்களுக்காக வரும் 12-ந் தேதி நடத்தப்படும் நிகழ்ச்சியில், 10-ம்வகுப்பு, பிளஸ்2 மற்றும் கல்லூரி படிப்பிற்குப்பின் என்ன படிக்கலாம்,அ ரசு வழங்கும் கல்விக்கான ஊக்கத்தொகை விவரங்கள், சுய தொழில்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×