search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு முகாம்"

    • வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை மற்றும் வாய்களுக்கும் பரிசோதனை
    • புற்றுநோய் பரிசோதனை பதிவு செய்யும் படிவத்தை வழங்கினார்.

    பூதப்பாண்டி :

    தோவாளை வட்டாரத்தில் அனைத்து அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்களில் புற்றுநோய் சோதனை நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்குமேற்பட்ட ஆண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை மற்றும் வாய்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை விளக்கும் வகையில் இறச்சகுளம் ஊராட்சி அலுவலகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் மருத்துவ இடைநிலை சுகாதார பணியாளர் விஜிலா புற்றுநோய் பரிசோதனை குறித்து விளக்கி பேசினார். பின்னர் இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் புற்றுநோய் பரிசோதனை பதிவு செய்யும் படிவத்தை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலெட்சுமி, ஊராட்சி செயலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் அய்யாக்குட்டி, கிராம சுகாதார செவிலியர் பிரேமகுமாரி மற்றும் தன்னார்வல பணியாளர் ஷோபா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • மருத்துவ முகாம் கர்த்தானூரில் நடை பெற்றது.
    • விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கர்த்தானூரில் நடை பெற்றது. இதில் கால்நடைகளுக்கு சினை ஊசி, தடுப்பூசி, தாது உப்பு கலவை , மலடு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட வைகள் வழங்கப்பட்டன.

    மேலும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள் ,கால்நடை உதவியாளர்கள் மருந்தா ளுனர்கள் விவசாயிகள் என ஏராளமானோர் பங்கே ற்றனர். 

    • சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
    • மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை அருகே உள்ள உக்கடை கிராமத்தில் பாபநாசம் விவேகானந்தா கல்வி சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம், திருத்தம், நீக்குதல் ஆகியவை சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று திருத்தம் செய்து கொள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் விஜயலெட்சுமி. கயல்விழி , மேரி உட்பட ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது.
    • இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பெருங்குறிச்சி ஊராட்சி தலைவர் திரு மாணிக்கம் இந்த வயல்வெளி முகாமிற்கு முன்னிலை வகித்தார்.

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை வகித்து நிலக்கடலை சாகுபடியை பாதிக்கும் பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.

    நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழு தாக்கும் பருவம், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழுவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விளக்கி கூறினார்.

    நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதற்கான பிரசுரங்கள் இந்த முகாமில் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்தும், வேளாண் கடன் அட்டை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா தொழில்நுட்ப உதவி மேலாளர் ஜோதிமணி இணைந்து செய்திருந்தனர்.

    • சுத்தம் சுகாதாரம் குறித்து விளக்கம்
    • மாணவ மாணவிகள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று, விடலைப் பருவ மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது நடைபெற்றது.

    முகாமிற்கு தலைமை ஆசிரியர் அருளரசு தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை தன்னார்வலர் ரேமாண்ட், கலந்து கொண்டு " மாணவ மாணவிகளுக்கு விடலை பருவ உடல் மாற்றங்கள் ஆண் பெண் உடல் சார்ந்த பிரசனைகள் சுத்தம் சுகாதாரம் குறித்து விளக்கமளித்தார்.

    மேலும் மாணவ மாணவிகளுக்கு எடுத்து கொடுப்பான் கலந்துரையாடல் மூலம் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.

    • ஆலோசனைகள் வழங்கப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ஆற்காடு ஒன்றியம் கிளாம்பாடி ஊராட்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் சுதா பாலாஜி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ஜெயலலிதா, கவிதா, மீனா, பரிமளா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வித்யாலட்சுமி வரவேற்றார்.

    சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தை திருமணம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், போக்சோ சட்டம், காவலன் செயலி, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098, பெண்களுக்கான அவசர உதவி எண் 181 உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் சக்தி லீலா, மகளிர் குழு தலைவி மகேஸ்வரி, இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரியில் சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இதற்கு தாளாரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரு மான வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் முகாமின் நோக்கம் குறித்து விளக்கி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மகராஜகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும்போது, போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் தான் வாகனம் ஓட்ட வேண்டும். அதிவேகமாக வாகனங்களை ஓட்ட கூடாது என்றனர். நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார். இந்த முகாமில் நிர்வாக அலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரி யர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் தலைமை வகித்து விழிப்புணர்வு உரையாற்றினார். ஆண்டிபட்டி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பு, பொருளாளர் அர்ஜுனன், துணைத் தலைவர் கர்ணா பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிட்டாய் தயாரிப்பு உரிமையாளர்கள் சங்க தலைவர் அக்கினி குமார், செயலாளர் சரவணன், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் பேசும்போது, ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.

    குறிப்பாக உணவு கூடங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறிப்பிட்ட அளவு பயன்படுத்திய பின் அதை அரசு வழங்கியுள்ள டின்களில் ஊற்றி சேகரம் செய்து வைத்து , மாதா மாதம் அரசு மூலமாகவே அதனை பயோ டீசல் தயாரிப்புக்காக மறு சுழற்சி அடிப்படையில் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

    கடைக்காரர்கள் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி நகர் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மிட்டாய் சங்க உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை கோட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் ஊராட்சி குளத்துப்பாளையம் கிராமத்தில் நேற்று சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு மேலாண்மைக்கான விருதுகளும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன்,பிரகாஷ், ராஜ்குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கார்த்தி,பத்மா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குனர் வி. ஜெயராமன் கூறியதாவது:-

    உடுமலை கோட்டத்தில் மொத்தம் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 20 முகாம்கள் வீதம் 2024 ம் ஆண்டு மார்ச் வரை நடைபெற உள்ளது.முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விபரம் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ஊராட்சி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.முகாமில் சிகிச்சை, மலடு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தாது உப்பு, வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணர்வு முகாமுக்கு கால்நடைகளை கொண்டு வந்து மேற்படி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

    • கால்நடை உதவிமருத்துவரை விவசாயிகள், கால்நடைவளர்ப்போர் அணுகலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
    • நோய் தடுப்பு மற்றும் நோய்தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் "சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்" நடத்தும் திட்டம் 2023-24ம் நிதியாண்டில் நடைமுறைபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல்,நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய்தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டமானது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் அக்டோபர் 2023 மாதம் முதல் கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவிமருத்துவரை விவசாயிகள், கால்நடைவளர்ப்போர் அணுகலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.    

    • பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாயக்கன்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    வடமதுரை:

    வடமதுரை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாயக்கன்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 2023-24-ஆம் ஆண்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடத்தப்பட உள்ளது.

    முகாம்களில் நோய்வா ய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்க ளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார ந டவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராம்நாத், உதவி இயக்குநர் விஜயகுமார், திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் முகமது அப்துல்காதர், ஒன்றிய பெருந்தலைவர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பில்லமநாய க்கன்பட்டி, வன்னியபாறை ப்பட்டி, நடுப்பட்டி, கோசுக்கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • மதுரை அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஹோமியோபதி மாத்திரைகள் வார்டு கவுன்சிலர் மூலமாக வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியும், நகராட்சியும் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. திருமங்கலம் நகராட்சியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் டெங்கு காய்ச்சல் வருவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோமியோபதி மாத்திரைகள் வார்டு கவுன்சிலர் மூலமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஹோமியோபதி மருத்துவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பேசினார். தொடர்ந்து அரசு ஹோமியோபதி மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் திருக்குமரன், வீரக்குமார், சின்னச்சாமி சுகாதார ஆய்வாளர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட்பட பலர் கலந்து கொண்டனர். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவுன்சிலர் உடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று மாத்திரை வழங்கினர்.

    ×