search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Animal health"

    • முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை கோட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் ஊராட்சி குளத்துப்பாளையம் கிராமத்தில் நேற்று சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு மேலாண்மைக்கான விருதுகளும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன்,பிரகாஷ், ராஜ்குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கார்த்தி,பத்மா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குனர் வி. ஜெயராமன் கூறியதாவது:-

    உடுமலை கோட்டத்தில் மொத்தம் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 20 முகாம்கள் வீதம் 2024 ம் ஆண்டு மார்ச் வரை நடைபெற உள்ளது.முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விபரம் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ஊராட்சி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.முகாமில் சிகிச்சை, மலடு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தாது உப்பு, வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணர்வு முகாமுக்கு கால்நடைகளை கொண்டு வந்து மேற்படி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

    • கால்நடை உதவிமருத்துவரை விவசாயிகள், கால்நடைவளர்ப்போர் அணுகலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
    • நோய் தடுப்பு மற்றும் நோய்தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் "சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்" நடத்தும் திட்டம் 2023-24ம் நிதியாண்டில் நடைமுறைபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல்,நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய்தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டமானது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் அக்டோபர் 2023 மாதம் முதல் கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவிமருத்துவரை விவசாயிகள், கால்நடைவளர்ப்போர் அணுகலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.    

    • கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
    • சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகளூர் ஊராட்சியில் கால்நடை பரா மரிப்புத்துறை, தஞ்சாவூர் ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து 2-ம் கட்ட சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வருகிற 10-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    முகாமில் கால்நடைகளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், கன்றுகளுக்கு கன்று வீச்சு தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடுதல், செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுதல், ஆடுகளுக்கு துள்ளுமாரி தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடைபெற உள்ளது.

    மேலும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு பயிற்சி, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளும் கால்நடை வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சிறந்த கிடேரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் காத்தாகுளம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா புயல்நாதன், கால்நடை உதவி இயக்குநர்கள் சிவக்குமார், நேருகுமார், கால்நடை மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி, வீரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 126 விவசாயிகள் பயனடைந்தனர். 153 மாடுகளுக்கும், 612 வெள்ளாடுகளுக்கும், 432 செம்மறியாடுகளுக்கும், 198கோழிகளுக்கும், 24 நாய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு சான்றிதழ்கள், சிறந்த கிடேரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

    • நோய் தடுப்பு மற்றும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
    • ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் "சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் திட்டம் 2022-23 ம் நிதியாண்டில் நடைமுறை படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள் சினை சரிபார்ப்பு, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டமானது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நவம்பர் 2022 மாதம் முதல் பிப்ரவரி 2023 மாதம் வரை கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×