search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை சரிவு"

    • நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • வெற்றிலை தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர் , பாண்டமங்கலம், அண்ணாநகர், வெங்கரை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டு கின்றனர்.

    பின்னர் உள்ளுர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும் , பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங் கலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர் -கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள வெற்றிலை தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின் றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.3 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது.

    தற்பொழுது வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும் ,கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4,500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையாகிறது. வெற்றிலை வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கடந்த 7 தினங்களுக்கு முன்பு கிலோ ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டது.
    • விலை குறைந்ததை அடுத்து மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் கீழ்செங்கப்பாடி, குரும்பட்டி, பாரிவனம், ஆண்டியூர், வீரப்பநாய்க்கன்பட்டி, தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டியில் பொம்மிடி பகுதியிலும் அதிக அளவில் குண்டுமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.

    கடந்த 7 தினங்களுக்கு முன்பு கிலோ ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைந்து கிலோ ரூ.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சில்லரை விலையில் 100 கிராம் ரூ. 30 முதல் ரூ. 35 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்ததை அடுத்து மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    வியாபாரி கூறுகையில் கடந்த வாரம் வரத்து குறைவான அளவிலேயே இருந்ததால், திருமணம், பண்டிகை சீசன் என்தால் விலை உயர்ந்தது இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திராட்சை பழங்கள் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.
    • பன்னீர் திராட்சை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    திராட்சை பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.

    கோயம்பேடு பழ மார்கெட்டுக்கு 4 வகையான திராட்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் இருந்து 10 முதல் 12 லாரிகளில் சுமார் 150டன் வரை திராட்சை பழங்கள் தினசரி குவிந்து வருகிறது. இதில் சோனா எனப்படும் விதையில்லா பச்சை திராட்சை அதிகளவில் குவிந்து வருவதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திராட்சை பழங்கள் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. பன்னீர் திராட்சை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

    இதேபோல் விதையில்லாத கருப்பு திராட்சை (கல்பனா) ரூ.90, விதையில்லாத பச்சை திராட்சை (சோனா) ரூ.50, ஜூஸ் திராட்சை ரூ.50, ரெட் குளோப் திராட்சை ரூ.130 விற்பனை ஆகிறது. விலை குறைந்து உள்ளதல் வியாபாரிகள் அதிக அளவில் திராட்சைகள் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இதனால் மார்க்கெட்டில் திராட்சை விற்பனை களைகட்டி உள்ளது.

    • பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • பூக்களின் விலை சரிவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.

    இதனால், காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஓசூர் பகுதியில் மட்டும் சுமார் 2500 ஏக்கரில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரம் ஏக்கரில் செண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுபநிகழ்ச்சிகள் இல்லாததால் விலை சரிந்துள்ளது.

    கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஸ் திடீரென ரூ.40 வரையிலும் சரிந்தது. சாமந்தி ரூ.60-க்கும், அரளி ரூ.60-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை சரிவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஓசூரில் தினந்தோறும் 100 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு 150 டன் வரை அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, விசேஷ நாட்கள் இல்லாததால், பூக்களின் விலை குறைந்துள்ளது. விசேஷ நாட்கள் வந்தால் தான் பூக்கள் விலை கூடும் என்று கூறினர்.

    • வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.
    • மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

     மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் பருவ மழைகள் திருப்தியாக பெய்ததால் இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.இப்பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.

    நடப்பாண்டு உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஒரு குவிண்டால் 2,250 முதல் 2340 வரை விற்று வந்தது. மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் சிண்டிகேட் காரணமாக கடந்த 10 நாட்களாக தினமும் 10 ரூபாய், 20 ரூபாய் என குறைக்கப்பட்டு குவிண்டால் 1,150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    வெளி மாநில வரத்து வாய்ப்பில்லை. உள்ளூர் மக்காச்சோளம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில் திடீர் விலை சரிவு காரணமாக விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடையை குறைத்து கொண்டதோடு அறுவடை செய்ய மக்காச்சோளத்தையும் விற்பனை செய்யாமல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க துவங்கினர்.இதனால் விற்பனைக்கு மக்காச்சோளம் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குவிண்டாலுக்கு, 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் அறுவடை துவங்கி இரண்டு மாதம் வரை நிலையான விலை காணப்பட்டது. இந்நிலையில் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைக்கப்பட்டது.மக்காச்சோளத்திற்கு விதை, உரம், மருந்து என 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ள நிலையில் அறுவடைக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.வழக்கமாக ஏக்கருக்கு 40 குவிண்டால் மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது 20 முதல் 22 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் கூறுகையில், மக்காச்சோளம் விலை குறைவு காரணமாக, விற்பனைக்கு வரத்து குறைந்தது. இதனால் மீண்டும் விலை உயரத்துவங்கியுள்ளது என்றனர்.

    • விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 1 கிலோ முள்ளங்கி ரூ.1-க்கு விற்பனை ஆவதால் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பனங்காட்டூர், போச்சம்பள்ளி, ஜம்புகுட்டப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். குறைந்த நாளில் அதிகம் லாபம் தரும் என்பதால் விவசாயிகள், முள்ளங்கி சாகுபடி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முள்ளங்கி 1 கிலோ முள்ளங்கி ரூ.1-க்கு விற்பனை ஆவதால் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர். இதை அறிந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக சென்று குறைந்த விலைக்கு முள்ளங்கி தோட்டத்தை வாங்கி வியாபாரிகளே கூலியாட்களை வைத்து அறுவடை செய்து மூட்டைகளாக கட்டி சந்தைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
    • குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் பெடரேசன், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி போன்ற பல்வேறு கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் ஒரு முட்டை ரூ.5.65 ஆக விற்பனையானது, படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டை ரூ.4.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்.இ.சி.சி. ரூ. 4.60 விலை நிர்ணயம் செய்துள்ள போதும், முட்டை வியாபாரிகள் ரூ.4-க்கு குறைவாக முட்டையை கொள்முதல் செய்கின்றனர். கோழி முட்டை விலை கடும் சரிவால் கடந்த 2 வாரங்களாக பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழிலில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    இதையொட்டி, எந்த சங்கத்தையும் சேராத கோழிப்பண்ணையாளர்களின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் ஏராளமான கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தொழிலின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தனர்.

    கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முட்டை விற்பனை விலையில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையை விடக் குறைந்த விலையிலேயே முட்டைகளை வியாபாரிகள் வாங்குகின்றனர். முட்டை விலையில் மைனஸ் என்பதே இருக்க கூடாது. தீவன மூலப்பொருட்கள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முட்டை விலையை உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்.இ.சி.சி. மண்டல வாரியாக விலை நிர்ணயம் செய்யாமல் இந்தியா முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை நாமக்கல் பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும். கடும் நெருக்கடி நிலையில் கோழிப் பண்ணை தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் உள்ளதாக பல பண்ணையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான சமையல் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.
    • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சீசன் நாட்களில் வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அன்னதானப்பட்டி:

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப் பொருட்கள் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வட மாநிலங்களில் இருப்பில் உள்ள மளிகைப் பொருட்களை வியாபாரிகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    மளிகை பொருட்கள்

    இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளு, சீரகம், மிளகு, கசகசா, சோம்பு, வெந்தயம், இலவங்கப்பட்டை, கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சீசன் நாட்களில் வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக சேலத்திற்கு தான் அதிகளவில் மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வர இருப்பதால், தற்போது கை இருப்பில் உள்ள பழைய பொருட்களை கடந்த சில நாட்களாக மொத்த வியாபாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர்.

    விளைச்சல் அதிகரிப்பு

    ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். சேலம் லீபஜார், செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், நெத்திமேடு, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1000- க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை மளிகைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சீசன் சமயத்தில் பல்லாயிரக்கணக்கான டன் வரை மளிகைப்பொருட்கள் விற்பனைக்கு வரும். இங்கு விற்பனைக்கு வரும் பொருட்களை மொத்த விலையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அதனை சில்லறை விற்பனையில் விற்பனை செய்வார்கள்.

    அந்த வகையில் சேலம் லீபஜார், செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் இருந்து ஓமலூர்,மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு மளிகைப் பொருட்கள் சில்லறை விலையில் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வருடம் வட மாநிலங்களில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதால், வருகிற 2023- ம் வருடம் அனைத்து பொருட்களும் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

    விலை சரிவு

    இதன் காரணமாக வருகிற பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து புதிய மளிகைப்பொருட்கள் வரத்து வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்‌. பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மளிகைப்பொருட்களை அனுப்ப இருப்பதால், வட மாநிலங்களில் கைவசம் குடோன்களில் இருப்பில் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்களை அங்குள்ள வியாபாரிகள் கடந்த சில வாரங்களாக விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதன் காரணமாக பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு மளிகைப் பொருட்களின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

    இதனால் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மார்க்கெட்டுகளில் தினமும் சில்லறை வியாபாரிகள் அதிகளவில் மளிகைப் பொருட்கள் வாங்கிச் சென்று அவர்கள் இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதே சமயம் பெண்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வருடம் முழுவதும் தேவைப்படும் அளவிற்கு மொத்தமாக வாங்கிச் சென்று இருப்பு வைத்து கொள்கின்றனர். இதனால் சேலம் செவ்வாய்பேட்டை, லீபஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த ஒரு மாதம் மளிகைப் பொருட்கள் விற்பனை பரபரப்பாக நடக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
    • பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுப்படியாகாததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

     உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், செடி மற்றும் கொடி முறையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கிருந்து கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகள் கொள்முதல் செய்து லாரிகள் வாயிலாக கொண்டு செல்கின்றனர்.

    உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ. 450 வரை விற்ற நிலையில், தற்போது ரூ. 100 முதல் 120 வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

    தக்காளி சாகுபடிக்கு,நாற்று, உழவு, நடவு, உரம், மருந்து என ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பெரும்பாலான செடிகள் மற்றும் காய்கள் அழுகி, மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.தற்போது வியாபாரிகள் வருகை இல்லாததால் விலையும் குறைந்துள்ளது. பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுப்படியாகாததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    வியாபாரிகள் கூறுகையில், சந்தைக்கு வழக்கத்தை விட தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. மழை, அழுகல் காரணமாக தூரமாக உள்ள மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்தது என்றனர்

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் சின்னவெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு மேல் விற்று வந்தது.பருவமழை காரணமாக, பயிர் பாதித்ததோடு, அறுவடை செய்ய முடியாத சிக்கல் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் விவசாயிகள் அறுவடை பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.மழை பாதிப்பு காரணமாக, அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை, உடனடியாக விற்று விடவும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதனால் வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதோடு, விற்பனையும் பெருமளவு குறைந்துள்ளதால் வெங்காயம் விலை திடீர் சரிவை சந்தித்துள்ளது.தற்போது முதல் தர வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் இரண்டாம் தர வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு திடீரென விலை சரிவை சந்தித்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இதுவரை பெய்த மழையை பயன்படுத்தி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு, உளுந்து, கொள்ளு, தட்டை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

    அவை இனிவரும் நாட்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடும். தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் தக்காளி, வெங்காயம், கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்கள் பெரும்பகுதி அழுகிவிடும். குறைவான அளவே அவை சந்தைக்கு வரும். செடி வகைகளான கத்தரி, மிளகாய் உள்ளிட்டவற்றில் பூக்கள் உதிர்ந்து விடும். இதனால் விளைச்சல் குறையும். எனவே காய்கறிகளின் விலை கடுமையாக உயரும்.

    உற்பத்தி வீழ்ச்சி அடைவதால் விவசாயிகளும் பயனடைய முடியாது. நுகர்வோருக்கும் அது சுமையாக மாறும். மழை அதிகரிக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது பல்லாண்டு பயிரான தென்னை விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும்.ஐப்பசியில் துவங்கி கார்த்திகை மாதத்தில் மழை ஓய்வு பெறும். கார்த்திகை பட்டத்தில் வெங்காயம், நிலக்கடலை போன்றவற்றை சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தற்போது இருந்தே நிலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தண்ணீர் வசதியுள்ள நிலங்களில் விவசாயிகள் கொள்ளு, தட்டை, சணப்பை, தக்கை பூண்டு ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். கால்நடைகள் மேய்ச்சலுக்கு போக மீதம் உள்ளவற்றை அப்படியே மடக்கி உழுவதன் மூலம் அதிக அளவில் நிலத்துக்கு தேவையான சத்துக்களை, நிலத்தில் நிலை நிறுத்த முடியும்.இதனால்ரசாயன உர பயன்பாடு கணிசமாக குறையும். விளைச்சலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை பொழியும் போது, அதன் துவக்கத்தில் இடர்பாடுகளை சந்தித்தாலும், அது ஒரு வரமாக அமையும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    • சாமந்தி 120 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • ஜாதி மல்லி 260 ரூபாய்க்கும் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, முல்லை, காக்கனா, கோழிக்கொண்டை, மிராபல், பன்னீர் ரோஸ் உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகள் என அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக பூக்களின் விலை கடும் சரிவில் இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் மாற்றுப்பயிர்களை பயிரிட தீவிரம் காட்டி வந்தனர்.

    இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியதை அடுத்து பூக்களின் விலை படிப்படியாக உயர தொடங்கியது. முக்கிய பண்டிகைகளான ஆடிப்பெருக்கு மற்றும் வரலட்சுமி நோன்பு பண்டிகையை முன்னிட்டு தருமபுரி பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ 1,200 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்பட்டது.

    அதேபோல் முல்லை 700 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது. குண்டு மல்லி அதிக வரத்தால் திடீரென விலை குறைந்து கிலோ 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லைப்பூ 700 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆடி மாதம் என்பதால் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவதால் மற்ற பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

    சாமந்தி 120 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 160-க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும், மூக்குத்தி ரோஸ் 200 ரூபாய்க்கும், காக்கனாம்பு 360 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 260 ரூபாய்க்கும் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    • இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தைகளில் வாரம் தோறும் முருங்கைக்காய் சந்தை நடைபெறுவது வழக்கம். மூலனூர், கன்னிவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தை மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்கிறார்கள்.

    பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது வட மாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர். இதனால் மூலனூர் பகுதியில் வரத்து அதிகமானதால் இந்த வாரம் முருங்கை விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.37-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கை இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் மரம், செடி முருங்கை, கருமுறுங்கை என அனைத்து முருங்கைகளும் இதே விலை நிலவரத்தில் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.
    • வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் .

    திருப்பூர்,

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம். கோழி தீவனத்துக்கு முக்கிய மூலப்பொருள் மக்காச்சோளம். கடந்த புரட்டாசி பட்டத்தில் குறைந்தளவு விவசாயிகள் மட்டுமே மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை துவங்கிய போது கிலோ 20 ரூபாய்க்கு மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடை முடியும் போதே, 25 ரூபாய் வரை விலை போனது.படைப்புழு தாக்குதல், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர்.

    தற்போது உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.எதிர்பாராத விதமாக தற்பொழுது விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பே காரணம்.விவசாயிகள் சிலர் கூறுகையில், உற்பத்தி செலவு கிலோவுக்கு 15 ரூபாய் ஆகிறது. விளைச்சல் சற்று குறைந்தாலும் 20 ரூபாய் அடக்க விலை ஆகிவிடுகிறது. விற்பனை விலை சாதகமாக இல்லை.இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் என்றனர்.

    ×