search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு
    X

    விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு

    • விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 1 கிலோ முள்ளங்கி ரூ.1-க்கு விற்பனை ஆவதால் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பனங்காட்டூர், போச்சம்பள்ளி, ஜம்புகுட்டப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். குறைந்த நாளில் அதிகம் லாபம் தரும் என்பதால் விவசாயிகள், முள்ளங்கி சாகுபடி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முள்ளங்கி 1 கிலோ முள்ளங்கி ரூ.1-க்கு விற்பனை ஆவதால் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர். இதை அறிந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக சென்று குறைந்த விலைக்கு முள்ளங்கி தோட்டத்தை வாங்கி வியாபாரிகளே கூலியாட்களை வைத்து அறுவடை செய்து மூட்டைகளாக கட்டி சந்தைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.

    Next Story
    ×